Ad Widget

யாழில் கல்வியங்காடு பகுதியில் மாவை பிரச்சாரம்

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா இன்று காலை யாழ் கல்வியங்காட்டுப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப் பிரச்சார நடவடிக்கைகளை கல்வியங்காட்டு சந்தைப் பகுதியிலேயே தனது ஆதரவாளர்களுடன் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது வடக்கு மாகாண சபை அவைத் தலைவர்...

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா

எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே நாம் திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு மக்களுடன் நேற்றைய தினம் (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு...
Ad Widget

சிகையலங்காரம் செய்துகொண்டால் கைது!!

கட்சி சின்னத்துடன் வேட்பாளரின் விருப்பு இலக்கத்தையும் சேர்த்து சிகையலங்காரம் செய்துகொள்வது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், தலைமுடியை அவ்வாறு அலங்காரம் செய்துகொண்டிருப்பவர்கள் கைதுசெய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும், அவ்வாறு சிகையலங்காரம் செய்துகொண்டு சுற்றித்திரிபவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்ட தவிகூ வேட்பாளர் டர்சனின் பேட்டி

தபால் பொதிகள் கொள்ளை

சாவகச்சேரி தபால் நிலையத்திலிருந்து தனக்கிளப்பு தபால் நிலையத்துக்கு நேற்று புதன்கிழமை (05) கொண்டு செல்லப்பட்ட போது பறித்துச்செல்லப்பட்ட தபால் பொதிகள் சிலவற்றை, தனக்கிளப்பு பகுதியிலிருந்து மீட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். தபால் ஊழியர்களால் கொண்டுசெல்லப்பட்ட இந்தப் பொதிகளை மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் தபால் ஊழியர்களால் சாவகச்சேரி பொலிஸ்...

 விதிமுறைகளை மீறி கட்சி அலுவலகம்

வல்வெட்டித்துறை விநாயகர் வித்தியாலயத்துக்கு அருகில், தேர்தல் விதிமுறையை மீறி கட்சி அலுவலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், வணக்க ஸ்தலங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்களுக்கு அருகில் தேர்தல் பிரசார அலுவலகங்கள் அல்லது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என தேர்தல் ஆணையாளரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிவுறுத்தலை மீறிய வகையில் மேற்படி கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் 18பேர் விடுவிப்பு?

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 18பேர் விடுவிக்கப்படவுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்தார்

காணாமல் போனோர் விவகாரம்; ஐ.நா.வுக்கு கடிதம்

காணாமல்போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தக் கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி செபமாலை அடிகளார் தெரிவித்தார். மன்னார் பிரஜைகள் குழு, யாழ். மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, வடக்கு காணாமல் போனோரின் உறவுகளை தேடும் சங்கம் ஆகியன இணைந்து சர்வதேச மனித...

ஜனாதிபதி தேர்தலுக்கு அழைத்தமை தவறான முடிவு – மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்த நிலையில், ஜனவரி 8ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமையானது தவறான தீர்மானமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பிபிசி சிங்கள சேவையின் ஊடகவியலாளருடன் நேற்று புதன்கிழமை நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் தற்போது...

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்! கடத்தல்காரர்களை கோட்டாவே இயக்கினார்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் என்று முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போராளிகளையும் கடந்த அரசு இந்தக் கொலைகளுக்காக பயன்படுத்திக்கொண்டது என்று அவர் கூறியுள்ளார். கடந்த அரசின் அரசியல்வாதிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய...

உரிமைகள் மறுக்கப்பட்டதால் ஆயுதம் ஏந்தினார் பிரபாகரன்! இறுதிவரை அவரை கூட்டமைப்பு ஆதரித்தது!!

"தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தபோதுதான் அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்....

இலங்கை ஒற்றையாட்சி நாடாகவே இருக்கவேண்டும்! ஜனாதிபதி மைத்திரி!!

எதிர்கால சவால்களை முறியடிப்பதற்காக, இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நான் பிராந்தியத் தலைவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், பிராந்திய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்களில் அவர்கள் எவ்வாறு கரிசனை...

மைத்திரிக்கு தமிழர் வாக்களித்தது அவர் மீதுள்ள காதலால் அல்ல

ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தது அவர் மீது கொண்ட காதலால் அல்ல, அது இராஜதந்திரம் எனத் தெரிவித்துள்ளார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளரும் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன். யாழ்ப்பாணம் வரணிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது விடுதலைப்...

மயிரிழையில் உயிர் தப்பினார் வசீம் அக்ரம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சளருமான வாசிம் அக்ரமின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நிவுகிறது. இந்த சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வாசிம் அக்ரம் கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்துக்கு பயிற்சி அளிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார் அப்போது வாசிம்...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நாளை காலை 9 மணிக்கு ஆஐராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.கடந்த 31ம் திகதி சாவகச்சேரி நகரில் மேற்படி கட்சியினர் பிரசாரத்திலீடுபட்டிருந்த நிலையில் தேர்தல் சட்டத்திற்கு மாறாக பிரசாரத்திலீடுபட்டதாக கூறி கட்சியின் வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக கட்சியின்...

பயணப் பையில் யுவதியின் சடலம் – ஒருவர் கைது

பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு - புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அநுராதபுரம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கிடந்த பயணப் பையினுள் இருந்து அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் - வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான யுவதி...

வடக்கில் இருப்பவை நாய்க்குட்டிகளல்ல புலிக்குட்டிகள் என்பது நிரூபணம்

சம்­பந்­த­னிடம் எப்­போதும் ஒரே கொள்­கையும் வெளிப்­ப­டை­யான செயற்­பா­டுமே உள்­ளது. ஆகவே சம்­பந்­தனை சந்­தே­கப்­ப­டாது நம்ப முடியும். ஆனால் ரணில் மிகப்­பெ­ரிய சூழ்ச்­சிக்­காரர். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ரணிலை நம்­ப­மு­டி­யாது என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார். வடக்கில் இருப்­பவை நாய்க்­குட்­டிகள் அல்ல புலிக்­குட்­டிகள் என்­பதை மீண்டும் ஒரு­முறை கூட்­ட­மைப்­பினர் நிரூபித்து விட்­டனர்...

கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்

ஆவரங்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை(04) இரவு இடம்பெற்ற கத்திக் குத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த மாதவன் கோவிலன் (வயது 22) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்காகி கையில் படுகாயமடைந்தார். சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவரை, இடையில் மறித்த நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். கத்தியால் குத்தியவர்...

புதிய அரசு ஏமாற்றி விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறிவருகின்றமை மக்களை ஏமாற்றும் மற்றுமொரு தந்திரோபாயம் – டக்ளஸ் தேவானந்தா

ஆட்சி மாற்றத்துடனான புதிய அரசை கொண்டு வருவதற்கு தாமே காரணமென கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது புதிய அரசு ஏமாற்றி விட்டதாக கூறிவருகின்றமை மக்களை ஏமாற்றும் அவர்களின் மற்றுமொரு தந்திரோபாயம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அளவெட்டி கிழக்கு கும்பலை கிராம...

ஆட்களில்லாத பூவரசம்தீவில் ஆட்டிலறிக் குண்டுகள்! – அதிர்ச்சியில் பொலிஸ்

யாழ்ப்பாணம் – பூநகரிக்கு இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியில் அமைந்துள்ள பூவரசம்தீவில் சட்டவிரோதமான முறையில் ஆட்டிலறி, மோட்டார் குண்டுகளை கொண்டு வந்து களஞ்சியப்படுத்தி, அதிலிருந்து வெடி மருந்துகளை வேறாக்கி விற்பனை செய்து வந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பூவரசம் தீவில் கடந்த சில காலமாக இந்த சட்டவிரோத நடவடிக்கை இடம்பெற்று...
Loading posts...

All posts loaded

No more posts