மேலதிகாரியின் பாலியல் தொந்தரவால் கடற்படைச் சிப்பாய் தற்கொலை! – கைதான அதிகாரிக்கு விளக்கமறியல்

மேலதிகாரிகள் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாகவே அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிய வருகிறது. இதனடிப்படையில் அப்படை முகாமின் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் பணியாற்றிய கே.ஜெயதிலக (வயது 21) என்ற சிப்பாய் கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...

கலை நிகழ்ச்சிக்காக ஒரு நிமிடத்துக்கு இரண்டு இலட்சம் ரூபா செலவிட்ட கோத்தபாய!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை நிகழ்ச்சிகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டல்களுக்கு அமைய பெல்லன்வில உடற் பயிற்சி பாதை மற்றும் உணவு கட்டமைப்பு ஆகியனவற்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்விற்காக இரண்டு...
Ad Widget

ஆசிரியர் இடமாற்றங்கள் சாவுக்கு வழிகோலக்கூடாது.

ஒரே பாடசாலையில் ஏழு வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு அவர்களது நியாயமான காரணங்களைக் கருத்தில் எடுக்காது இடமாற்றம் என்னும் பெயரில் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்றங்களால் ஆசிரியர்கள் சாவடைவதும், ஓய்வுபெற வேண்டிய நிலைக்கும் தள்ளப்படவும் நேர்கிறது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழர் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-...

கைதிகள் விடுதலை செய்யப்படமாட்டர்

தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்படமாட்டாரென சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலை சீர் திருத்த அமைச்சர் திலக் மாரப்பன்ன தெரிவித்தார். அதற்கு மாறாக அவர்களது பிரச்சினைக்கு தீர்வு மட்டுமே வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் கடுமையான மழை பெய்யும் சாத்தியம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 100 மில்லி மீற்றர் மழை பெய்கக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரே...

மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாடு துரித வளர்ச்சியடையும்

எமது நாட்டின் இனத்தின் ஒற்றுமை மற்றும் அதன் சமத்துவ தன்மைக்காக மூவின மக்களும் ஒன்றினைந்து செயற்படவேண்டும். அப்போது நாடு துரித வளர்ச்சியினை பெற்றுக்கொள்ளும் என புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். இலங்கையின் ஒரே மக்கள் என்ற அமைப்பின் (Unity Mission trust) எற்பாட்டில் புதிய இலங்கையினை உருவாக்கும்...

குடும்ப பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்கு விளக்கமறியல்

நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து இரவு நடந்து சென்ற குடும்ப பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற புத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சாரதி ஒருவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பை ஜீவராணி, வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டாhர். கடந்த 22ஆம் திகதி...

பேராதனை பல்கலைக்கழகம் புதிய மருந்து கண்டுபிடித்து சாதனை

பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பின் விசத்தை முறியடிக்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். இந்த மருந்தை அறிமுகப்படுத்துவதால் பல...

ஐ.நா.தீர்மானத்தை நிராகரிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமது நாடு தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்க முடியாதென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபடவேண்டும் எனவும் அழைப்பு விடுத்ததுடன் அரசியல் அமைப்புக்கு உட்பட்டே செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டினார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள்...

51 பெண் பிள்ளைகள் சாவிற்கும், தன்னார்வத் தொண்டு நிறுவன 17 ஊழியர்கள் கொலைச் சம்பவத்திற்கும் விடுதலைப்புலிகளே காரணம்

வடமாகாண நட்டலமொத்தன் குளத்தில் நடந்த 51 பாடசாலை பெண் பிள்ளைகள் சாவிற்கும் மூதூரில் பிரஞ்சு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்த 17 ஊழியர்கள் கொலைச் சம்பவத்திற்கும் விடுதலைப்புலிகளே காரணம் என விசாரணை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. உடலகம ஆணைக்குழு 2005 ஓகஸ்டிற்கும் நவம்பர் 2006 ஆம் ஆண்டிற்கும் இடையில் இடம்பெற்ற 16 மனித உரிமை...

மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகை : கற்பனை கூட செய்ய முடியாத அளவு நவீன மற்றும் சொகுசு வசதிகள்

கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்றுக் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார். மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார். மாளிகையின் உள்ளே நுழைவதற்கு இரகசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளே...

16 படுகொலைகளுக்கு கருணா, கோத்தபாய பொறுப்பேற்க வேண்டும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கொழும்பு ஆங்கில செய்தி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ்...

யாழ்ப்பாண குடிநீர் தேவைக்கு 5 திட்டங்கள்

யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 483.06 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 செயற்றிட்டங்கள், 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருபாலை நீர் வழங்கலை செயற்படுத்த, 64.51 மில்லியன் ரூபாயும் பருத்தித்துறை நீர்வழங்கல் திட்டத்திலிருந்து இன்பசிட்டி, சக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு நீர்வழங்க...

இலங்கை பொலிஸாரின் சித்திரவதைகள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

இலங்கை பொலிஸார் குற்றவியல் கைதிகளை வழமையாகவே சித்திரவதை செய்து, முறையற்ற வகையில் நடத்துகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. இது குறித்து அந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பொலிஸ் அமைப்பை கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் பொலிஸாரின் துஷ்பிரயோகங்களை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை...

பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் ஆயுதப் போராட்டம் வெடிக்கும்! – ஜே.வி.பியும் எச்சரிக்கை

"வடக்கில் மீண்டும் ஒருபோதும் ஆயுதப்போராட்டம் உருவாகாது. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் ஆயுதப் போராட்டம் உருவாகலாம்'' - இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்தார் ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதான கொரடாவுமான அநுரகுமார திஸாநாயக்க. மேலும் புலிகளின் ஆயுதக் கொள்வனவு தொடர்பில் கே.பியை பகிரங்க நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை...

வெள்ளைக் கொடி விவகாரம், பாலச்சந்திரன் கொலை உயர்மட்டக் கட்டளையாலேயே நடந்தன!

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என்றும், உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அவ்வாறு நடைபெற்றது என்றும் கூறப்படுகின்றது. கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் அவசியம். இதற்கான பரிந்துரையையும் பரணகம குழு முன்வைத்துள்ளது." - இவ்வாறு வெளிவிவகார அமைச்சர்...

ஐ.நா. தீர்மானத்தின் ஊடாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

"ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. இதை ஏற்று அரசு பொறுப்புக்கூறவேண்டும். இதை நாமும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிடமுடியாது. அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அவர்கள் கௌரவமாக வாழவேண்டும். இழப்பீடு வழங்கப்படவேண்டும். உண்மை கண்டறிப்படவேண்டும். இவற்றை செய்தால்தான் நல்லிணக்கத்துக்கான வழி திறக்கப்படும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...

இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் போரை முடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது மஹிந்த அரசு! – பிரதமர் ரணில்

இந்தியாவின் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு முன்னாள் அரசால் (மஹிந்த அரசு) படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்ற தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் வெளியிட்டார். 2005 ஆகஸ்டில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், முன்னாள் அரசால் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்துக்குமிடையில் தொடர்பிருக்கிறது என்றும் அவர் சபையில்...

விமல் வீரவன்ச கைது; நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இன்று காலை விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்ட பின்னர் அவரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர்ருவன் குணசேகர தெரிவித்தார்....

கடற்படை சிப்பாய் மரணத்தில் சந்தேகம் சக சிப்பாய் கைது

தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட கடற்படை சிப்பாயின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சக சிப்பாய் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த பசற பகுதியைச் சேர்ந்த எஸ். பி.ஏ. லக்மல் ஜெயதிலக நேற்று முன்தினம் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் என்றும் அவரின் சடலம் யாழ்....
Loading posts...

All posts loaded

No more posts