Ad Widget

யாழ் வருகின்றது காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு

யாழ் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு யாழ் வரவுள்ளது.

அதன்படி வரும் 11ம் திகதி முதல் இரண்டு வார காலம் அந்த மாவட்ட முறைப்பாட்டாளர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நல்லூர் மற்றும் யாழ் பிரதேச செயலகங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாஸ தெரிவித்தார்.

அந்த மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற 2580 முறைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் இந்தக் காலப் பகுதியில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts