- Saturday
- June 13th, 2026
போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், நவம்பர் மாதத்தில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது உலக...
தற்போது சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் மீள்குடியேற்ற மாவட்டம் என்பதன் காரணமாக வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட குழிகளில் மழைவெள்ளம் தற்போது தேங்கிநிற்கின்றது. 'இக்குழிகளில் சிறுவர்கள் தவறிவிழுகின்ற அபாயநிலை உள்ளதால் பெற்றோர்கள் வெள்ளம் நிறைந்த பகுதிகளுக்கு தமது பிள்ளைகளை செல்லவிடாது...
பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசிலுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 2,500 ரூபாவை 4 ஆயிரமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்சமயம் 7 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்தம் 2,500 ரூபாவைப் பெற்றுவருவதாகவும் அதை 4 ஆயிரமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்கள் தற்சமயம் 5 ஆயிரம்...
'நாகதீப' என்ற பெயரை 'நயினாதீவு' என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது. நாகதீப என்பதை நயினாதீவு என மாற்றக்கூடாது. இதற்கு நானும் எதிர்ப்பே. - இப்படித் 'திவயின' சிங்கள வார இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். நயினாதீவின் சில பகுதிகள்...
யாழ் குடாநாட்டைச் சூழவுள்ள ஊர்காவல்துறை, நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைத்தீவு, மண்டைத்தீவு மக்கள் வாழும் தீவுப் பிரதேசங்களில் போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத் தீவுகளில் சுமார் 15 000 குடும்பங்கள் வசிக்கின்றன. அக்குடும்பங்களில் சுமார் 75 சதவீதமானர்கள் கடற்றொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பனை சார்ந்த உற்பத்திகள் போன்றவற்றை தமது...
2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்படி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. அதன்படி மின்சாரக் கார் 25 இலட்சம் ரூபா, ஹய்ப்ரிட் 4 இலட்சம் ரூபா, மினி கெப் வண்டி 10 இலட்சம் ரூபா மற்றும் மருட்டி மோட்டார் வாகனம் 2 இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்க...
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட பல அமைப்புக்கள் மீது விதித்திருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. ஆனாலும், தமிழீழ விடுதலைப் புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, மற்றும் ஏனைய சில அமைப்புகள் மீதான தடை தொடரும் என வெள்ளிக்கிழமை இரவு அரசு வெளியிட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்...
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார். மேலும் இவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்தபின் நேற்று மாலை சமந்தா பவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கையை வந்தடைந்தார். இதேவேளை இவர்கள் யாழ்ப்பாணத்திற்கான விஜயம்...
யாழ். செயலகத்துக்குப் பின் புறமாக உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்றை கொழும்பில் இருந்து யாழ். நோக்கி வந்த கடுகதி ரயில் மோதிய கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் காரில் பயணம் செய்த தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராக கடமையாற்றும் வி.சுதாகரன் (வயது 41) என்பவர்...
யாழ்ப்பாணம் கல்லுண்டாய், பொன்னாலை சந்தி, மற்றும் வல்லிபுர சந்தி ஆகிய இடங்களில் பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுகாலை இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபை மற்றும் மானிப்பாய் பிரதேச சபை ஆகியன கல்லுண்டாய் வெளிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக...
எதிர்வரும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ம் திகதி முதல் இலங்கையில் சிற்றுண்டிசாலைகளில் விற்பனை செய்யப்படும் அப்பம், பிளேன் ரீ,பால்ரீ உட்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சம்மேளன தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி பிளேன் ரீ விலை 5ரூபாவாலும், பால்ரீ 5...
யாழ். தீவகப் பகுதிகளில் சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்களிடமிருந்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வரும் நிலையில், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் சட்டம் மற்றும்...
யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருவதாக யாழ்.போதனா வைத்திய சாலை தரப்பினர் எச்சரித்துள்ளனர். கடந்த இரு நாட்களில் மட்டும் எட்டுப்பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது மழை காலம் ஆரம்பித்து உள்ள நிலையில், மழை பெய்து வெற்றுக் காணிகள், வீட்டில் காணப்படும் பொருட்களில்...
தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் போது முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச மாலை 4.55 மணியளவில் சபைக்கு வந்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது வரவு – செலவு திட்டத்தை 2.00...
ஐ.நா.சபையின் இலங்கைக்கான 20 பரிந்துரைகளில் எவ்விடயத்தையும் நீக்க வேண்டுமென்ற பேச்சுக்கே இடமில்லை.அவைஒவ்வொன்றையும் எவ்வாறு நிறைவேற்ற முடியுமென்ற ஆலோசனைகளையே கட்சிகள் முன்வைக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். ஐ.நா.சபையின் தீர்மானம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியால் கூட்டப்பட்ட இரண்டாவது சர்வகட்சி மகாநாட்டில் பேசப்பட்ட விடயம் தொடர்பில் வினவிய போதே அவர்...
அலங்கோலமான பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு அலங்கரித்து விட்டதைப் போன்று வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் அமைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எதுவித சலுகைகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் நெல்...
தாடியுடன் வீதியில் நடந்து சென்ற இரு இளைஞர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரு இளைஞர்களுமே கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்- நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில்...
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது 97 வயதுடைய முதியவர் ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்திய சாரதியான கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்பவருககு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்துத்...
இலங்கை அரச படையினரின் இரகசிய சித்திரவதை முகாம்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தென்பகுதி மாநிலமான கர்நாடகாவின் பெங்களூர் நகரில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பெண்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச...
தேசிய அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள கன்னி வரவு - செலவு திட்டத்தின் மூலம் அவர்களது பொருளாதாரக் கொள்கை தெளிவாகியுள்ளதுடன், தனியார் துறையை நோக்கிச் செல்லும் இப்பயணமானது நாட்டின் எதிர்காலத்துக்குப் பெரும் பாதிப்பாக அமையும் என்று மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மக்களுக்குச் சலுகைகளை வழங்கும் போர்வையில் பல முக்கிய சலுகைகளை இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள்...
Loading posts...
All posts loaded
No more posts
