தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை இல்லை!! : விளக்கமறியல் நீடிக்கப்பட்டது

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 32 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை என்பதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 32 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யுமாறு...

யாழில் விசேட தேவையுடையோருக்கு உபகரணங்கள் வழங்கிய அஜித் ரசிகர்கள்!!

தங்கள் சினிமா கதாநாயகனின் திரைப்படம் வெளியாகும் போது தீபாவளி, புதுவருடக் கொண்டாட்டங்கள் போல, பாலபிஷேசம் செய்து பட்டையக் கிளப்பும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நடுவில் தீபாவளித்தி திருநாளன்று வெளியாகிய தங்கள் சினிமா கதாநாயகனின் புதுப்படத்தைக் கொண்டாடப்போன யாழ்ப்பாண அஜித் ரசிகர்கள் திரையரங்கு வாயியில் புதியதோர் தொடக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். யாழ் செல்லா திரையரங்கில் விசேட தேவையுடையோரை அழைத்த...
Ad Widget

சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு ஒதுக்கிக் கொடுக்க உத்தரவு : நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

சுனாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவருக்கு மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் வீடு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்குமாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டு கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறித்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்மணி தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை வழக்கு விசாரணைக்கென பிரதம நீதியரசரால் நியமனம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம்...

சிறைச்சாலையில் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றோம் – புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள்

சிறைச்சாலையில் தாங்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். புங்குடுதீவி மாணவி கொலை வழக்கு திங்கட்கிழமை (09) நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா என நீதவான் கோரியபோதே, சந்தேகநபர்கள் இவ்வாறு கூறினர். அடுத்த அமர்வில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்...

பூரண ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்கவேண்டும் மக்கள்! – டெனிஸ்வரன்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள பூரண ஹர்த்தாலுக்கு மக்களை ஒத்துழைக்குமாறு கோரியுள்ளார் வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் ஜனாதிபதியின்...

வடக்கில் கறுப்புத் தீபாவளி அனுஷ்டிப்பு!

தமிழ் மக்கள் நேற்று தீபாவளித் திருநாளை கொண்டாடிய நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கின் பல இடங்களில் நேற்றய தினம் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்,பொது அமைப்புக்களும் நேற்றய தினத்தை கரிநாளாக அனுஷ்டித்துள்ளனர். இலங்கை சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தீபாவளிக்கு முன்னதாக விடுதலை செய்யப்படுவார்கள் தொடர்பில் தாங்கள் ஏமாற்றம்...

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்! அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்படவில்லை!!

தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் இதுவே வடக்கு மாகாண சபையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ள வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அரசாங்கம இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டபோதும், தமிழ் அரசியல்...

அடுத்தவர்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு 8வது இடம்

அடுத்த மக்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடம் பிடித்துள்ளது. Charity aid Foundation என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில் காணப்பட்டது. 2014ம் ஆண்டை விட இலங்கை ஒரு இடம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் அதிக செல்வந்த நாடுகளை விட...

சுமந்திரன் பதவியை இராஜினாமாச் செய்து அரசியல் பயிற்சி பெறவேண்டும் -ஆனந்தசங்கரி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு அரசியல் பயிற்சி பெறுவதற்குச் சென்று வர வேண்டுமெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளார் வீ.ஆனந்தசங்கரி நேற்றுத் திங்கட்கிழமை தெரிவித்தார். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பின்...

அடுத்த தீபாவளிக்கு முன்னர் தமிழருக்கு விடிவு பிறக்கட்டும்! – சம்பந்தன் தீபாவளி வாழ்த்து

நீண்ட காலமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு மிக விரைவில் விடிவு ஏற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி வாழ்த்துச் செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'மிகவும் குதூகலமாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் : கூட்டமைப்பும் அழைப்பு?

சிறைச்சாலைகளில் போராடும் அரசியல் கைதிகள் விடுதலைபெற வேண்டும், நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு என்று தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கைதிகளின் விடுதலைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு...

யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாண பல்கலைகழக 1ஆம் வருட மாணவனை அடித்து துன்புறுத்திய இரு மாணவர்களை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், திங்கட்கிழமை (09) உத்தரவிட்டார். துன்புறுத்தலுக்கு உள்ளான 21 வயதுடைய மாணவன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த மாணவனை 3 ஆம் வருட மாணவர்கள்,...

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நேற்று முதல் இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார். கடந்த தினங்களில் தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யக்கோரி சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக உரிய அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட...

விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்ககோரும் அதிகாரம் சுமந்திரனுக்கு இல்லை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்க கோரும் அதிகாரம் எம். ஏ சுமந்திரனுக்கு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) காலமானார்

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) அவர்கள் இன்று (09-11-2015) காலமானார் . அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (10-11-2015) செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணியளவில் கந்தரோடையில் நடை பெற்றுத் தகனக் கிரியை கந்தரோடை இந்து மயானத்தில் நடை பெறும். 1933ல் காரைநகரில் பிறந்த இவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஆவார்.உசன்...

பெண்கள் காப்பகக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது

அச்சுவேலி அரச சான்று பெற்ற பாடசாலையில் மகளிர் விவகார அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்புக் கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திங்கட்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில், 11 அறைகள், மருத்துவ அறை, தொழிற்பயிற்சி...

கடுங்காற்றினால் பாடசாலை செயற்பாடுகள் நிறுத்தம்!!

யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று வீசி வருவதால், தீவகம் கல்வி வலயத்துக்குட்பட்ட வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை (09) காலை 10 மணியுடன் இடைநிறுத்தப்பட்டு, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடும் காற்றுக்காரணமாக பாடசாலையின் கூரைகள் தூக்கி எறியப்படும் நிலையில் இருந்தமையால் மாணவர்களால் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடிவில்லை என்றும் இதனாலேயே...

பதவி விலகல் குறித்து விளக்கமளிக்கிறார் திலக் மாரப்பன

ஊடகங்கள் வாயிலாக தனக்கு தொடர்ந்து சேறு பூசுவதாகவும், தன்மீது சேறு பூசிக் கொள்ள தனக்கு விருப்பமில்லை என்பதனால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் முன்னாள் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். எவன் கார்ட் நிறுவனத்தின் சர்ச்சைக்குறிய ஆயுதக் கப்பலில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 தடவையாவது ஆயுதங்கள்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முழுமையான புறக்கணிப்புக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

கடந்த காலப்பகுதியில் ஸ்ரீலங்கா அரசினால் கைது செய்யப்பட் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அவர்கள் விடுதலை செய்யப்படாது தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த மாதம் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களது...

இணுவில் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு

இணுவில் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் இறுதிக்கிரியைகளை, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடத்தியுள்ளனர். புலோலியூரைச் சேர்ந்த மேற்படி முதியவர், கடந்த 20 வருடங்களாக இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை, அடியவர் என புனைப்பெயர் கொண்டு...
Loading posts...

All posts loaded

No more posts