Ad Widget

மூத்த ஊடகவியலாளர் உயிரிழப்பு

மூத்த தமிழ் ஊடகவியலாளரான ச.கதிரவேற்பிள்ளை வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.

media

ஊடக நிறுவனம் ஒன்றில் தனது ஊதியத்தை பெற வந்தபோது, கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளார்.

தமிழராட்சி மாநாட்டு படுகொலை, மாவிட்டபுர ஆலய உட்பிரவேச போராட்டம் போன்ற பல பிரச்சினைகள் குறித்து இவர் செய்திகளை சேகரித்திருந்தார்.

பொலிஸாரின் தாக்குதலால் அவருடைய ஒரு கண் பார்வையை இழந்தார். எனினும் ஊடகத்துறையை விட்டு விலகாது இறுதி வரை பணியாற்றி வந்தார்.

Related Posts