வைத்தியதிகாரியின் அலட்சிய பதில் : வைத்தியசாலைக்கு சிவப்பு அறிவித்தல்!!

மழை என்றால் நுளம்பு வரும் தானே' என்று அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி அலட்சியமாக பதிலளித்து, வைத்தியசாலைக்கு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையால் சிவப்பு அறிவித்தல் ஒட்டவைத்துள்ளார். இது பற்றித் தெரியவருவதாவது, கோப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர், அச்சுவேலி பொலிஸார், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அச்சுவேலி நகரப் பகுதியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையில்...

நாடாளுமன்றில் சுமந்திரன் உரையை குழப்பிய முஸ்லிம் அமைச்சர், எம்.பிக்கள்!

சவூதியில் கல்லால் எறிந்து மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணுக்காக குரல்கொடுத்த சுமந்திரன் எம்.பிக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர், எம்.பிக்கள் கொதித்தெழுந்ததால் நேற்றுச் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். தனது...
Ad Widget

சென்னை வெள்ள அனர்த்தம்: சம்பந்தன், சீவிகே கவலை தெரிவிப்பு

இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "இந்தப் பாரிய இயற்கையின் சீற்றத்தால் தங்களது சொந்தங்களை மற்றும் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்ப...

12ஆயிரம் புலிகளை விடுதலைசெய்தது சரி என்றால் தமிழ்க் கைதிகளை விடுவிப்பது தவறா? – ஜனாதிபதி

"ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர். கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி என்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்...

செந்தூரனின் தற்கொலையில் சந்தேகம்; வடக்கு தொடர்பில் விழிப்பாக இருங்கள்! – மஹிந்த

"செந்தூரனின் தற்கொலையில் சந்தேகம் உள்ளது. எனவே, இது தற்கொலையா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்கவேண்டும்'' என்று அரசிடம் வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ, வடக்கில் இடம்பெற்ற செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். தடுப்பிலுள்ள கைதிகள் குறித்து...

எது பாரதூரமானது? 12,000 புலிகள் விடுதலையா? 38 தமிழ்க் கைதிகள் பிணையில் விடுவிப்பா? – ரணில்

12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை கடந்த ஆட்சியில் விடுதலை செய்தது பாரதூரமானதா? அல்லது 38 தமிழ்க் கைதிகளை பிணையில் விடுவித்தமை பாரதூரமானதா? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்களின் மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்களிடமிருந்து பிரிக்க அரசாங்கம் முயல்கிறது! – எம்.ஏ.சுமந்திரன்

"தமிழ் மக்களிடம் கூறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதிகளை வழங்கும் அரசு, அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி எமது மக்களிடமிருந்து எம்மைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி கைதேர்ந்தது'' என்று சபையில் கடும் அதிருப்தியுடனும், ஆவேசத்துடனும் அரசின் மீது குற்றஞ்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இது கடந்த அரசைவிட மோசமான நிலை...

நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் விஜயகலா

நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்இன்று அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலினூடாக ஜனாதிபதியை மாற்றி ஆயிரம் ஏக்கர் காணிகளை எம்மக்களிடம் கையளித்துள்ளோம். அதேபோன்று 5300 ஏக்கர் காணிகளை எவ்வித இனவாதமின்றி தமிழர்களின் சொத்துக்களை அவர்களிடம் கையளிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றில்...

உயர் பதவிகளுக்கு தமிழர் நியமிக்கப்படவேண்டும் – சித்தார்த்தன்

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உடபட உயர் பதவிகளுக்கு தமிழர்களை நியமிப்பதனூடாக தமிழ் மக்களுக்கு பொலிஸார் மீதான நம்பிக்கை ஏற்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று (04) பாராளுமன்றில் தெரிவித்தார். சட்டம ஒழுங்கு அமைச்சின் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...

யாழில் இலஞ்ச ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

சர்வதேச இலஞ்ச ஊழலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு தேசிய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்று நேற்று (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தேசிய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியன பொலிசாருடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு நேற்று காலை யாழ் மத்திய...

மழையுடன் கூடிய காலநிலையே தொடரும் சாத்தியம்?

கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தற்போது நாட்டினை விட்டு விலகியுள்ள போதும் மேலும் புதியதொரு வானிலை மாற்ற குழப்பத்தினால் இன்று (05) மழையுடன் கூடிய காலநிலையே நாடு முழுவதும் தொடரும் சாத்தியமுள்ளதென என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பிற்பகல் 12 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கான...

HNDA மாணவர்கள் பிரச்சினை; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முடிவு

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் (HNDA) தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அபராதம் செலுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா...

மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னரான காலப் பகுதியில் மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.வருகின்ற டிசம்பர் 14ம் திகதியளவில் குழு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இது பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதுடன், பொது மக்களின் உதவி கோரி யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் ஊடக...

வடக்கு விவசாய அமைச்சால் மண்வளம் தொடர்பாக விசேட கருத்தமர்வு

ஆண்டுதோறும் டிசம்பர் 5ஆம் திகதி உலக மண் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைக் கடைப்பிடிக்கும் நோக்குடன், வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஒருநாள் விசேட கருத்தமர்வு ஒன்றை நாளை சனிக்கிழமை (05.12.2015) யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியின் சங்கிலியன் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. ‘மண் - உயிர் வாழ்வதற்கான திடமான தளம்’ என்ற கருப்பொருளில் நிகழவுள்ள...

யாழில் அதிகரிக்கும் தொற்று நோய்கள் : மக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

யாழில் டெங்கு காய்ச்சல் , வயிற்றோட்டம், எலிக்காய்ச்சல் மற்றும் உண்ணிக்காய்ச்சல் ஆகிய தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சத்தியமூர்த்தி, இவை தொடர்பில் சுகாதார பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இவ்வருடத்தில் இதுவரை இந்நான்கு தொற்று நோய்களினால் ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்ச...

கூட்டமைப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற வழக்கு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்திலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பல அரசியல்வாதிகள் கனடா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து...

வீட்டுத்திட்ட உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதான குற்றச்சாட்டு பொய்! – இந்திய அரசு

இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தின் போது வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் பெண்களிடம் பாலியல் ரீதியான விருப்பங்களை எதிர்ப்பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் ராஜசபாவில் இந்த விடயம் நேற்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடு அடிப்படையற்றது என்று நேற்று இந்திய...

வடக்கில் 6000 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அமைச்சரவைப் பத்திரம் தயார்!

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் படையினர் வசமிருந்த பொது மக்களின் காணிகளை...

இராணுவ வீரர்களுக்கிடையில் மோதல்; ஒருவருக்கு காது அறுக்கப்பட்டது

காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள 5ஆம் சீ.எஸ்.சீ படை முகாமில் நேற்று வியாழக்கிழமை (03) இராணுவ சிப்பாய்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் றொசான்திலக ஸ்ரீ என்ற சிப்பாய், காது அறுப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இருவர் சிறு காயங்களுடன் பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று சிப்பாய்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில்...

சவூதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு இன்று மரண தண்டனை – பாராளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி.

முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று (04) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சவூதியில்...
Loading posts...

All posts loaded

No more posts