காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நகர பேருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக அரசாங்கம் வெளியிடவேண்டும் என வலியுறுத்தி கொட்டும் மழைக்கும் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
சம உரிமை இயக்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு , தெற்கைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த நல்லாட்சி அரசாங்கமானது காணாமல்போனோர் தொடர்பான அனைத்து தகவல்களை வெளியிடுமாறு கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், இரகசிய முகாம்களில் தடுத்து வைத்திருபோரை விடுதலை செய்யுமாறு கோரியும் பதாதைகளை ஏந்தியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.