- Monday
- April 27th, 2026
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்று வீதியில் படுத்திருந்த மாடுகள் மீது மோதியதில் நான்கு பசு மாடுகள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் நேற்று காலை யாழ்.பொம்மை வெளிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஓட்டு மடம் பகுதியினூடாக பேருந்து சேவையிலீடுபடும் போக்குவரத்து வீதியில் நேற்று காலை சுமார் பத்திற்கு மேற்பட்ட மாடுகள்...
காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தோட்ட காணிக் கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை இராணுவம் கொங்கிறீட்டால் மூடி மறைத்துள்ளது. இவற்றை அகழ்வுக்குட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த அவர்,...
அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் யாழ்ப்பாண மாவட்ட கிளையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக ஐ.எஸ்.நிராஸ், செயலாளராக என்.எம்.றிஸ்வி, பொருளாலராக எம்.மகனாஸ், பிரதித் தலைவராக எம்.எஸ்.ஜாபிர், பிரதி செயலாளராக எம்.றிஸ்வான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் அமைந்துள்ள காரியாலத்தில் நடைபெற்ற...
வேலணை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை கடற்படையினரின் பஸ் மோதி, மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். வேலணை நாரந்தனை பகுதியைச் சேர்ந்த நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் உதயகுமார் உசாந்தினி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். பஸ் சாரதி, ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக...
நாடு தழுவிய ரீதியில் வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று காலை முதல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளின் கீழ் வைத்தியர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த போராட்டத்தை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்கின்றமைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொள்வதற்கு...
எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது...
மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வட மாகாண சபை தொடர்ந்தும் பாடுபடும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொடிய யுத்தம் விட்டுச்சென்ற வடுக்களில் மிகமோசமானது பலருக்கு வலுவிழப்பை ஏற்படுத்தியமையாகும். துப்பாக்கி பிரயோகம், எறிகணை வீச்சு, விமானத்தாக்குதல்,...
நிதிப் பிரமாணக் கோவைகளிற்கு முரணாக வடக்கு மாகாண சபையினால் நிதி கையாளப்படுவதாக கணக்காய்வாளர் நாயகத்திற்கு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரினால் கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அம் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Joule Power மற்றும் Beta Power ஆகிய நிறுவனங்களுடன் வடக்கு மாகாண சபை பளை பிரதேசத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி...
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை முகாமில் இலங்கை அகதி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 20 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். தங்களை விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்திய 20 பேரில் 12 பேர் விடுவிக்கப்பட்டனர். தற்போது...
"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதில் சட்டப்பிரச்சினை இல்லை. அரசியல் பிரச்சினையே உள்ளது. எனவே, இதை நீடித்துக்கொண்டுசெல்ல இடமளிக்கமாட்டோம்'' என்று நாடாளுமன்றில் உறுதியாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலைசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள்...
"இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், நட்புறவையும் கட்டியெழுப்புவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது விடயத்தில் அரசு அர்ப்பணிப்புடன் தெற்கையும் இன, மொழி,மதம் ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்'' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதிக்குரிய முழு அதிகாரங்களையும் நாடாமன்றத்துக்கு வழங்கி சட்டவாக்கச் சபையைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்...
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் (இலக்கம் 2) அரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலையில் மேல் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்பு மாணவர்களை கடுமையாகத் தாக்கி விசாரணைக்கு உட்படுத்தியதில் தாக்கப்பட்ட மாணவர்கள் நான்கு பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, மேற்குறித்த பாடசாலையின் அதிபரின் ஐம்பதாயிரம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை காணவில்லை என தெரிவித்து சந்தேகம் என்ற...
இலங்கை தேசிய அரசாங்கத்தின் 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை எதிர்த்து தேசியளவில் மேற்கொள்ளப்படும் வைத்தியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ்.மாவட்ட வைத்தியர்களும் இணைந்துள்ளனர். தேசிய வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்களுக்கான தீர்வையற்ற வாகன கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை உள்ளிட்ட பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி தேசிய மட்டத்தில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாகவே...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சித்திரவதை முகாம் குறித்த குற்றச்சாட்டை இராணுவம் நிராகரித்துள்ளது. இராணுவத் தரப்பினர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாவகச்சேரி மாரதி இராணுவ முகாமில் சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டிருந்தது என சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார். 52ம் படையணிக்குச் சொந்தமாகவிருந்த இந்த முகாம்...
தென்னிலங்கையின் காலி பகுதியில் தனது பாட்டியை நீண்ட நாட்களாக மலசலகூடத்திற்கு அருகில் பாழடைந்த குளியலறையொன்றில் அடைத்து வைத்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 78 வயதுடைய குறித்த வயோதிபப் பெண்ணிற்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவரது மகளே தனது பாட்டியை அடைத்து வைத்திருந்துள்ளதாகவும் மீட்டியாகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த...
இந்திய சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஈழ தமிழர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். ஈழ தமிழர்கள் வசிக்கும் கே.கே.நகர், மடிப்பாக்கம், அண்ணாநகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், நெசப்பாக்கம், போரூர், உள்ளிட்ட பகுதிகளிலும், வெள்ளத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தொலைபேசித் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேவேளை,...
எனது சட்டக் கல்லூரி நண்பர் ஆனந்தசங்கரி எனது அரசியல் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களுக்கும் அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் எனது நன்றிகள். இதை மட்டுமே என்னால் தற்போது கூறமுடியும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் விரும்பினால் இந்த நிமிடமே தனது கட்சியை ஒப்படைக்க தயார் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின்...
நாட்டுக்குக் கிடைத்திருக்கும் சர்வதேச சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக வரவு- செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும், வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காண்பது தொடர்பில் வரவு- செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை...
பில்லி, சூனியம் வைப்பதாகக் கூறி பொதுமக்களிடம் பெருமளவு பணத்தை பெற்று வந்தவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை புதன்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார். பில்லி, சூனியம் மீது நம்பிக்கையுடையவர்கள் குறித்த நபரிடம் சென்றால் அவர்களிடமிருந்து சிறிய தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு மருந்து ஒன்றை வழங்குவதாகவும் அந்த...
யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் இருவர், எச்.ஐ.வி தொற்று தாக்கத்துக்கு உள்ளாகி இவ்வருடம் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பால்வினை தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் பொது வைத்தியர் திருமதி தாரணி குருபரன், இன்று புதன்கிழமை (02) தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிரிழந்த இருவரும் 30 வயதையுடையவர்கள். கடந்த வருடம் இந்த தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளனர்...
Loading posts...
All posts loaded
No more posts
