Ad Widget

மருதங்கேணி பிரதேசசபை தனியாக்கப்பட வேண்டுமென கோரிக்கை

வடமாராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச சபை தனியாக்கப்பட வேண்டுமென்றும், நல்லூர், சுன்னாகம், மானிப்பாய், சங்கானை, நெல்லியடி போன்ற பிரதேசங்கள் நகர சபைகளாக தரம் பிரிக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் 2016ம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி மற்றும் பொது மக்களின் தேவைகள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போதே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வரவு செலவு திட்ட குழுநிலை வாதத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர்கள், குறித்த பிரதேச சபைகள் தனியாக்கப்பட வேண்டுமென்பதுடன், நல்லூர், சுன்னாகம், மானிப்பாய், சங்கானை, நெல்லியடி போன்ற பிரதேசங்கள் நகர சபைகளாக தரம் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அரசாங்க அதிபருக்கு முன்மொழியப்பட்டு, அரசாங்க அதிபரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நாகலிங்கம் வேதநாயகன் மேலும் கூறினார்.

Related Posts