- Friday
- November 21st, 2025
தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக நேர்மையாகவும் நீதியாகவும் பற்றுறுதியோடு செயற்படும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அனைத்து நடவடிக்கைகளிற்கும் தமிழர் விடுதலை கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு ஒரு தீர்க்கமான...
தமக்கிடையில் ஏற்பட்டுள்ள சில முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, வடமாகாண சபை விடயங்கள் உட்பட்ட பல்வேறு அம்சங்கள்...
திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருப்பதாக தமது ஆணைக்குழுவில் எவரும் சாட்சியமளிக்கவில்லை என்றும், அவ்வாறு யாராவது சாட்சியமளித்திருந்தால் நாங்களும் திருமலையில் உள்ளதாகக் கூறப்படும் இரகசிய முகாமுக்கு சென்று பார்த்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார் காணாமல்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம. நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எமது ஆணைக்குழுவின் ஊடாக...
யாழ்ப்பாணத்தில் நாகதீபு என்ற பெயரை, நயினாதீவு என்று பெயர்மாற்றம் செய்தால், கண்ணில் தென்படுகின்ற அனைத்து தமிழ் வீதிகளின் பெயர்ப் பலகைகளையும் இலங்கையில் எப்பகுதியில் இருந்தாலும் சரி, தகர்த்தெறிவோம் என்று ராவணபலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பௌத்தர்களின் புனித தீவான யாழ்ப்பாணம், நாகதீப என்ற பெயரை நயீனாதீவு என்று பெயர் மாற்றம்...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், கிடைக்கவேண்டிய 15ஆயிரம் பேருக்கும் கிடைக்கும் அதில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை' என்று தெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், 'புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்காலத்தில் நடத்துவதாக இல்லையா என்பது தொடர்பில் ஆராயவேண்டும்' என்றார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து...
வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. வடமாகாண சபை அமர்வு வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்க என ஒரு பிரதான கேள்வியும் ஐந்து துணைக்கேள்விகளும், கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் கேட்க என 4 பிரதான கேள்விகளும் 14...
ஜீ.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சைக்காக பாடசாலைகளின் ஊடாக தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை நுழைவுச் சீட்டுக்கள் தபால் மூலம் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவுச்சீட்டுக்கள் அதிபர்களுக்குக் கிடைத்ததும் உடனடியாக அவற்றை மாணர்களிடம் வழங்க வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் நுழைவுச்...
எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்க்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த முதலாவது வரவு செலவுத்திட்டம் குறித்து ஒருபோதுமில்லாத அளவு மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு புதியதொரு ஆரம்பமாக அமையவிருக்கும்...
பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அத்தியவசிய ஆவணங்கள் சிலவற்றை பிரதிவாதி தரப்பிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டமையால் நேற்று இடம்பெற இருந்த...
இலங்கையின் போர்ச் சூழலில் காணாமல் போயிருப்பவர்களின் பிரச்சினை ஒருபுறமிருக்க, இறுதி யுத்தம் நடைபெற்ற கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றவர்களில் பலரைக் காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இந்தியக் கடற்பரப்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற படகொன்றில் பயணம்...
முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறியும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியும் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடன் தடைசெய்ய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் அவதானத்திற்குக் கொண்டுவந்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த கால யுத்தம் காரணமாக...
சீருடைகளை பெற்றுக் கொள்ள மாணவர்களுக்கு வவுச்சர் வழங்க தீர்மானித்தமையானது, தரமற்ற துணிகளை அவர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும் இடைத்தரகர்களுக்கு கமிஷன் செல்வதைத் தவிர்க்கவும் 500 மில்லியன் ரூபாய் வரை சேமித்து அவற்றை கல்வி வளர்ச்சிக்கு செலவிடவுமே என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் 42 இலட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சீருடை வழங்க...
காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இன்னும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் பத்துநாள் விஜயம் மேற்கொண்ட காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழு, நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். தமது விஜயத்தின் போது மேற்கொண்ட கலந்துரையாடல்களில்...
கடந்த கால போரினால் வீதிகள் குன்றும் குழியுமாக காணப்பட்டமையினால் வாகனங்களை மெதுவாக செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்போது போர் மேகங்கள் களைந்து சென்று அமைதிச் சூழல் ஏற்பட்டதால் வீதிகள் திருத்தப்பட்டு காப்பெற் வீதிகளாக்கப்பட்டு அளவுக்கதிகமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகின்றது என வடக்கு முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இன்று வீதி பாதுகாப்பு...
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான 725 சம்பவங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பானமுறைப்பாடுகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
யாழ்ப்பாணம் சுதுமலை ஜே-129 கிராம சேவகர் பிரிவில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வழிந்தோட முடியாத நிலையிலிருந்த நீரோடும் வாய்க்கால் ”நமக்காக நாம்” அமைப்பினரின் முயற்சியால் நேற்றுப் புதன்கிழமை (18-11-2015) காலை சீரமைக்கப்பட்டது. நீரோடும் வாய்க்காலில் இடப்பட்ட குப்பைகள், கழிவுகள் காரணமாகவும் பற்றைகள் சூழ்ந்திருந்தமையாலும் நீரோட்டம் தடைப்பட்டிருந்த சேர்.கொத்தலாவல திட்ட வாய்க்கால்...
வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றிய பந்துல ஹரிச்சநத்திர இன்று முதல் இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் சுமார் 4 வருடங்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய பந்துல ஹரிச்சந்திர வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகைள கருத்தில் கொள்வதில்லை என வட மாகாணசபையில் அவரை இடமாற்றம்...
பாக்கு நீரினை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இராமேசுவரத்தில் இருந்து 600 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பாக் நீரினை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். மேலும் 14...
காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் சாட்சியமளிக்க இதுவரை 2 ஆயிரத்து 538 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விசாரணை அடுத்த மாதம் 11 தொடக்கம் 16 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெறவுள்ளன. எனினும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்க இன்னும் பலர் முன்வருவர் என யாழ். அரச...
இலங்கை வரவுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், இந்தியா மற்றும் இலங்கைக்கான பயணத்தை...
Loading posts...
All posts loaded
No more posts
