Ad Widget

விமானப்படையினரால் யாழ் மாணவர்களுக்கு உதவிகள்

இலங்கை விமானப்படை தலைமையகத்தினால் யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

air-fourse-donate-books

விமானப்படைத் தளபதியின் பணிப்பில் விமானப்படை சேவாலங்கா மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த புத்தகங்கள் யாழ் வசாவிளான் குட்டியபுலம் மகாவித்தியாலயம் மற்றும் புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

நேற்று (30) குட்டியபுலம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விமானப்படை சேவாலங்கா மன்றத்தின் தலைவி சமந்தி துலுத்சிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சுமார் ஐந்து லட்சம் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

விமானப்படையின் யாழ் மாவட்ட தளபதி கொமாண்டர் சமிந்த கேரத் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களென பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts