Ad Widget

வூப்பெற்றால் துர்க்காதேவி ஆலயத்தினரால் வறணியில் வெள்ளநிவாரண உதவி

அண்மையில் இலங்கையின் வடபகுதியில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேச மக்களுக்கு ஜேர்மனியில் உள்ள வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தினரால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றது.

அதன் இன்னொரு கட்டமாக வறணிப்பகுதியில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினருக்கு மேற்படி ஆலயத்தினரின் நிதி உதவியுடன் நிவாரண உதவிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கடந்த 22ம் திகதி வழங்கப்பட்டது. நுளம்புவலை, பாய், சவர்க்காரம், குளிருக்கான போர்வைதுணி, பனடோல், நுளம்புத்திரி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

மேற்படி உதவிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உபதலைவி திருமதி பத்மினி சிதரம்பரநாதன், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வறணிப்பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளித்தனர்.

1_Varani_Wupertal

2_Varani_Wupertal

08

12

15

23

50

57

Related Posts