- Friday
- November 21st, 2025
"தமிழ் மக்களிடம் கூறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதிகளை வழங்கும் அரசு, அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி எமது மக்களிடமிருந்து எம்மைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி கைதேர்ந்தது'' என்று சபையில் கடும் அதிருப்தியுடனும், ஆவேசத்துடனும் அரசின் மீது குற்றஞ்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இது கடந்த அரசைவிட மோசமான நிலை...
நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்இன்று அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலினூடாக ஜனாதிபதியை மாற்றி ஆயிரம் ஏக்கர் காணிகளை எம்மக்களிடம் கையளித்துள்ளோம். அதேபோன்று 5300 ஏக்கர் காணிகளை எவ்வித இனவாதமின்றி தமிழர்களின் சொத்துக்களை அவர்களிடம் கையளிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றில்...
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உடபட உயர் பதவிகளுக்கு தமிழர்களை நியமிப்பதனூடாக தமிழ் மக்களுக்கு பொலிஸார் மீதான நம்பிக்கை ஏற்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று (04) பாராளுமன்றில் தெரிவித்தார். சட்டம ஒழுங்கு அமைச்சின் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...
சர்வதேச இலஞ்ச ஊழலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு தேசிய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்று நேற்று (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தேசிய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியன பொலிசாருடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு நேற்று காலை யாழ் மத்திய...
கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தற்போது நாட்டினை விட்டு விலகியுள்ள போதும் மேலும் புதியதொரு வானிலை மாற்ற குழப்பத்தினால் இன்று (05) மழையுடன் கூடிய காலநிலையே நாடு முழுவதும் தொடரும் சாத்தியமுள்ளதென என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பிற்பகல் 12 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கான...
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் (HNDA) தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அபராதம் செலுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா...
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னரான காலப் பகுதியில் மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.வருகின்ற டிசம்பர் 14ம் திகதியளவில் குழு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இது பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதுடன், பொது மக்களின் உதவி கோரி யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் ஊடக...
ஆண்டுதோறும் டிசம்பர் 5ஆம் திகதி உலக மண் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைக் கடைப்பிடிக்கும் நோக்குடன், வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஒருநாள் விசேட கருத்தமர்வு ஒன்றை நாளை சனிக்கிழமை (05.12.2015) யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியின் சங்கிலியன் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. ‘மண் - உயிர் வாழ்வதற்கான திடமான தளம்’ என்ற கருப்பொருளில் நிகழவுள்ள...
யாழில் டெங்கு காய்ச்சல் , வயிற்றோட்டம், எலிக்காய்ச்சல் மற்றும் உண்ணிக்காய்ச்சல் ஆகிய தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சத்தியமூர்த்தி, இவை தொடர்பில் சுகாதார பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இவ்வருடத்தில் இதுவரை இந்நான்கு தொற்று நோய்களினால் ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்ச...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்திலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பல அரசியல்வாதிகள் கனடா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து...
இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தின் போது வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் பெண்களிடம் பாலியல் ரீதியான விருப்பங்களை எதிர்ப்பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் ராஜசபாவில் இந்த விடயம் நேற்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடு அடிப்படையற்றது என்று நேற்று இந்திய...
வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் படையினர் வசமிருந்த பொது மக்களின் காணிகளை...
காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள 5ஆம் சீ.எஸ்.சீ படை முகாமில் நேற்று வியாழக்கிழமை (03) இராணுவ சிப்பாய்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் றொசான்திலக ஸ்ரீ என்ற சிப்பாய், காது அறுப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இருவர் சிறு காயங்களுடன் பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று சிப்பாய்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில்...
முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று (04) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சவூதியில்...
அரியாலை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்குத்தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கான கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க அமைச்சருக்கு வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இவரது தலைமையிலேயே இடம்பெறவுள்ளது....
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்று வீதியில் படுத்திருந்த மாடுகள் மீது மோதியதில் நான்கு பசு மாடுகள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் நேற்று காலை யாழ்.பொம்மை வெளிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஓட்டு மடம் பகுதியினூடாக பேருந்து சேவையிலீடுபடும் போக்குவரத்து வீதியில் நேற்று காலை சுமார் பத்திற்கு மேற்பட்ட மாடுகள்...
காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தோட்ட காணிக் கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை இராணுவம் கொங்கிறீட்டால் மூடி மறைத்துள்ளது. இவற்றை அகழ்வுக்குட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த அவர்,...
அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் யாழ்ப்பாண மாவட்ட கிளையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக ஐ.எஸ்.நிராஸ், செயலாளராக என்.எம்.றிஸ்வி, பொருளாலராக எம்.மகனாஸ், பிரதித் தலைவராக எம்.எஸ்.ஜாபிர், பிரதி செயலாளராக எம்.றிஸ்வான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் அமைந்துள்ள காரியாலத்தில் நடைபெற்ற...
வேலணை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை கடற்படையினரின் பஸ் மோதி, மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். வேலணை நாரந்தனை பகுதியைச் சேர்ந்த நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் உதயகுமார் உசாந்தினி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். பஸ் சாரதி, ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக...
Loading posts...
All posts loaded
No more posts
