தமிழக மக்களுக்கான நிதியுதவி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் கையளிக்கப்படும்

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக வடக்கு மாகாண சபையினால் சேர்க்கப்பட்டுவரும் நிதி உரிய காலத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் கையளிக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். நேற்றைய தினம் வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்திய...

அவதானம்..! 6000 பாலியல் தொழிலாளர்கள் மசாஜ் நிலையங்களில்

கொழும்பு நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்களில் 4500 முதல் 6000 பேர் வரையிலான பாலியல் தொழில் சேவையில் ஈடுபடுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையோருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந் நிலையங்களுக்கு செல்வோர் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டில் எச்.ஐ.வி. தொற்று வெகுவாக பரவி வருகின்றடை...
Ad Widget

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஜனாதிபதிக்கு நன்றி – சீ.வி.கே.சிவஞானம்

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம். மாகாணசபை பேரவை செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வலி,வடக்கு உயர்பாதுகாப்பு...

 சூளைமேடு அழைப்பாணை பொய்யான செய்தி

இந்தியா, தமிழகம் சூளைமேடுப் பகுதியில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட செய்தி பொய்யானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர்...

வடக்கு மாகாணசபையின் நன்னீர் திட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச கடல்நீரை நன்னீராக்கி யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை புதன்கிழமை மருதங்கேணி பிரதேசத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மருதங்கேணி கடற்றொழிலாளர் சங்கங்கள். வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவுள்ளன. வடமாகாண சபையால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத்...

செந்துாரனின் குடும்பத்திற்கு அச்சுறுத்தல்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவன் செந்துாரனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். குறித்த மாணவனின் குடும்பத்திற்கு பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், மற்றும் படையினரின் அச்சுறுத்தல்கள் காணப்படுவதனால் அவர்கள் மிகுந்த அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்....

மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்கிறோம்!சம்பந்தன்

மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்பதாகவும், அதேவேளை, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்று எழுப்பிய...

சக மாணவிகள் கேலி : தீ மூட்டிக்கொண்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீக்காயங்களுக்கு உள்ளாகி நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று திங்கட்கிழமை (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இணுவில் பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும், கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுதாகரன் லதுசாயினி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற்றதால்,...

தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே காரணமாகும். ஆனால் இந்த அமைப்பு கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் திங்கட்கிழமை (21) கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது! சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். இது குழப்பத்துக்கே வழிவகுக்கும். எனினும், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். 'தமிழ் மக்கள் பேரவை' அமைப்பின் உருவாக்கத்துக்கு...

வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

வரவு செலவுத் திட்டம், இலங்கை - இந்திய இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் மாலபே தனியார் பல்கலைக்கழகம் போன்றன தொடர்பில், உரிய தீர்வு பெற்றுத் தர அரசாங்கத்திற்கு இரு வாரங்கள் வழங்குவதாகவும், அதற்குள் தீர்வு கிட்டாவிடில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுடன் கையெழுத்திடவுள்ள ஒப்பந்தம் தொடர்பில் திட்டமிடல்களைத்...

கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று (22) காலை 10.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெறவுள்ளது. தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்ட செயலக சிறுவர்...

இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை விரைவில் தொடங்கலாம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி - கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் துவக்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவின்...

வெள்ள நிவாரண நிதிக்கான காலம் நீடிப்பு

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகாண சபையால் வெள்ள நிவாரண நிதி சேகரிக்கப்படுவது எதிர்வரும் 30ஆம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வடமாகாண சபையால் நிதி சேகரிக்கும் நடவடிக்கை கடந்த 7 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான...

சர்ச்சைக்குரிய எரிபொருள் நிலையம் திறப்பு

யாழ்ப்பாணம், பிரதான வீதியில் மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் சுடத் மடுகல்ல, லங்கா இந்திய பெற்றோலிக் கூட்டுஸ்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர்...

நடைமுறைப்படுத்த முடியாத பிரேரணைகளையும் நிறைவேற்றியுள்ளோம்

வடமாகாண சபை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரையில் 258 பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளோம். ஐ.நா தீர்மானங்கள் உள்ளிட்ட சில பிரேரணைகள் நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தெரிந்தும் நிறைவேற்றியுள்ளோம் என வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் திங்கட்கிழமை (21) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், வட மாகாண சபையின் அதிகாரங்களுக்குட்பட்ட...

முதலமைச்சர் மாத்திரம் வடமாகாண சபை இல்லை

ஒரு நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தால் அது வட மாகாண சபைக்கான அழைப்பு என்று யாரும் கருதக்கூடாது. முதலமைச்சர் மாத்திரம் வட மாகாண சபை அல்ல. உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் திங்கட்கிழமை (21) தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

அங்கஜனின் இல்லத்தில் ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வீட்டிற்கு சென்ற பின்னர் கொழும்பு திரும்பியுள்ளார். நேற்றய தினம் யாழிற்கான விஜயத்தில் ஜனாதிபதி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், மக்களையும் சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் தனது பயணத்தின் முடிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன்...

கிறிஸ்துமஸ் மரத்திற்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் தேவாலயத்தில் இடமில்லை

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 'கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வழிபாட்டுக்கு உரியவை அல்ல' என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய...

அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுப்போட்டியில் சண் தயாளன் சம்பியன்!

நுவரெலியாவில் நடைபெற்ற 2015 ம் ஆண்டுக்கான அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுப்போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்கு கொண்ட உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் சண் தயாளன் அவர்கள் இரண்டு தங்கப்பதங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கதையும் வென்று  சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டார். இவர் யாழ் இந்துக்கல்லூரியின் பழையமாணவனும் முன்னாள் உடற்கல்வி ஆசிரியருமாவார். சிறந்த துடுப்பாட்ட,  உதைப்பந்தாட்ட வீரரும் மத்தியஸ்தருமாகிய இவர் கல்லுாரிக்காலத்தில் மைதான...
Loading posts...

All posts loaded

No more posts