யாழ்ப்பாணத்தில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு அழகு ராணிப் போட்டி

யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டினைமுன்னிட்டு மாநகரசபை மைதானத்தில் அழகு ராணிப் போட்டியினை நடாத்தவுள்ளனர். குறித்த நிகழ்வுகள் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளின் அங்கமாக நடைபெறவுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி வீரசிங்க தெரிவித்தார். சித்திரை புத்தாண்டில் தங்க இல்லம் எனும் தொனிப்பொருளில் ஏப்ரல் 18 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் நகர சபை...

மதுபோதையில் வாகனம் ஓடினால் இனிமேல் ஓட முடியாது

தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்துத்துவோரின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் கையளிக்கப்போவதில்லை என்றும், நேற்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். 'இதற்கு முன்னரும், மது போதையில் வாகனம் செலுத்தியவர்களின்...
Ad Widget

நாமல் ராஜபக்சவின் குத்து நடனம் !!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வீதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. நாமல் ராஜபக்ச நடனமாடும் போது, அவரை சுற்றி, சிறுவர்களும் சிறுமிகளும் துணை நடனமாடுகின்றனர். தனது மகன் நடனமாடுவதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேடிக்கை பார்த்தவாறும் கைகளையும் தட்டுகிறார். இந்த காணொளியை அருகில் இருந்த ஒருவர் படமாக்கி இணையத்தளத்தில்...

தமிழகத்தில் செல்வம் அடைக்கலநாதன் வீட்டுக்காவலில்!!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமிழகத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அரசியல் ரீதியான பயணமாக கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அந்த வேலைகளை முடித்துக்கொண்டு தனிப்பட்ட பயணமாக தமிழ்நாட்டிற்கு சென்றபோதே இச்சம்பவம் நாடைபெற்றுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி...

சம்பூர் அனல் மின் நிலைய விவகாரம்! இந்தியா சிந்தித்து செயற்படும்! -சம்பந்தன்

சம்பூர் அனல் மின் நிலைய விடயத்தில் இந்தியா மக்கள் நலன் கருதி சிந்தித்து செயற்படும் என நான் நம்புகின்றேன். இந்தியாவுடனும் இலங்கை அரசுடனும் பேச்சு நடத்தி இவ்விடயத்தில் நல்ல முடிவை நாம் காண்போம் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மூதூருக்கு நேற்று விஜயம் செய்த அவர் சம்பூர்...

புலம்பெயர் தமிழ் மக்களின் ஒழுங்கமைப்பும் ஒருங்கமைப்புமே தமிழ் மக்களின் சுபீட்சதின் திறவுகோலாக அமைய முடியும்

நிதி, அறிவு, திறமை ஆகியவை உள்ளடங்கலாக புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றின் வினைத்திறன் மிக்கதான ஒழுங்கமைப்பும் ஒருங்கமைப்புமே தமிழ் மக்களின் சுபீட்சதின் திறவுகோலாக அமைய முடியும் என்று வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் லண்டன் ஹரோவில் நேற்று பிரமாண்டமான முறையில்...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

புதுவருட தினத்தையொட்டில், ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என்று மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.

இராணுவத்துக்கு எதிராக கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்!

கிராம சேவையாளர்களை அவர்களது கடமையை மேற்கொள்ளவிடாது இடையூறு விளைவித்த இராணுவத்தினரைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட கிராம சேவையாளர்களால் நேற்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் கிராம சேவையாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கில், தென்னிலங்கை மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் வாடிகள் அமைத்து தொழில் நடவடிக்கையில்...

புதிய அமைச்சர்களை நியமிக்க கோரும் விண்ணப்பம் விக்னேஸ்வரனிடம் கையளிப்பு

வடமாகாண சபை அமைச்சர்கள் நால்வரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரி பெற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்து அடங்கிய விண்ணப்பம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் அறுவர் அடங்கிய குழு இன்று மாலை 5.30க்கு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இதன்போதே குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டுள்ளதாக அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். இந்தக்...

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு ; மற்றுமொருவர் கைது

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி திருவையாறு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய விஜயகுமார் கேதீஸ்வன் என்ற நபரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட...

கிராம சேவையாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் நேற்று மாலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் நோக்குடன் வாடிகளை அமைக்க வந்த முப்பதுக்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களுக்கும் கொக்கிளாய் கிராம வாசிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்றப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, நேற்று மாலை 5 மணியளவில் இராணுவத்தின் அனுசரணையுடன் தென்னிலங்கையை சேர்ந்த...

மீள்குடியேற்றம், அபிவிருத்திக்கு வட மாகாணசபை முட்டுக்கட்டை! -சுவாமிநாதன் பாய்ச்சல்

மத்திய அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வட மாகாணசபை முட்டுக்கட்டையாக செயற்படுகிறது என்று சிறைச்சாலை மறு சீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் யுத்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு 65,000 வீடுகளை அமைப்பதற்கு மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு...

கொழும்பில் சிக்கியது பொட்டம்மானின் தொப்பி? -லண்டனுக்கு அனுப்ப முயன்ற இருவர் கைது

நாரஹேன்பிட்டியில் கூரியர் நிறுவன தலைமையகம் ஒன்றில் மீட்கப்பட்ட புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பி தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. லண்டனுக்கு அனுப்பப்பட இருந்த குறித்த தொப்பி விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டு அம்மானினால் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் சில தகவல்கள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ள நிலையில் அதனை உறுதி...

குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான 1800 வெற்றிடங்கள்

நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில் முதல் கட்டமாக 750 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கண்காணிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இதுவரை விஞ்ஞான...

இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை ஐ.நா முன்கூட்டியே அறிந்திருந்தது!

இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை அறிந்து வைத்திருந்தமை குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய...

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு: 13ஆவது சந்தேகநபரும் சிக்குவார்

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் 13ஆவது சந்தேகநபரை கைது செய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில், இன்று திங்கட்கிழமை (11) தெரிவித்தனர். குறித்த வழக்கு, நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னதாக கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, 'கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களுக்கு மேலதிகமாக 13ஆவது...

ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ எடுத்த இராணுவம்

ஆனைக்கோட்டை, கூழாவடியில் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணியை இராணுவ முகாமின் நிரந்தர தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்று திங்கட்கிழமை (11) மேற்கொள்ளப்படவிருந்த நிலஅளவை பணியை தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்த மக்களை, இராணுவ சிப்பாய் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் வீடியோ எடுத்தார். அலைபேசி ஒன்றில் உரையாடிக்கொண்டு, பிறிதொரு அலைபேசியை மதிலில் வைத்து, ஆர்ப்பாட்டம் செய்த அனைவரையும்...

வித்தியா வழக்கு – சந்தேகநபர்களுக்கு எச்சரிக்கை

புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள் தொடர்பில், நீதிமன்றத்தில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க முடியும், அதனைவிடுத்து, வெளியே கருத்து தெரிவிக்க முடியாது, அவ்வாறு கருத்து தெரிவித்தால் அது தொடர்பில் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் சந்தேகநபர்களுக்கு கடும் எச்சரிக்கை...

யாழ் அரசாங்க அதிபர் அலுவலகத்தை பூட்டி முற்றுகை போராட்டம்

யாழில் சுவீகரிக்கப்படவிருந்த காணிகளை சுவீகரிக்காது தடுத்து நிறுத்துமாறு வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் யாழ். அரசாங்க அதிபர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். யாழ். ஆணைக்கோட்டை, கூழாவடி இராணுவ முகாம் பகுதியிலுள்ள ஐந்து தனிநபர்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு காணிகளை இன்று திங்கட்கிழமை நில அளவையாளர்கள் அளப்பதற்கு முற்பட்டனர். இந்தநிலையில்,...

ஏப்ரல் 15 ம்திகதி பொது விடுமுறை- அரசு அறிவிப்பு

தமிழ் சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு ஏப்ரல் 15 ம்திகதி வெள்ளிக்கிழமையும் தேசிய பொது விடுமுறை  என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே 13ம் 14ம் திகதியும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
Loading posts...

All posts loaded

No more posts