- Saturday
- November 22nd, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னை 19 நிமிடங்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மகளிர்தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர் “நான் பதவி விலகியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...
மன்னார் பெரியகரிசல் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும், பெரிய கரிசல் கிராமத்தில் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகிறது. சந்தேகநபரின் மனைவி வீட்டில் இல்லாத நிலையில், இந்த துஷ்பிரயோக...
தமது விடுதலையை வலியுறு்தி உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஆறு பேரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்திய சாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டும். அதுவரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்து 14 அரசியல் கைதிகளும் நேற்று போராட்டத்தை தொடர்ந்திருந்தனர். கடந்த சனிக்கிழமை...
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கில் 7 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே காணாமல்போயுள்ளனர் என்றும், அவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினரான தினேஷ் குணவர்தன எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. கடும் ஆட்சேபனை வெளியிட்டார். அத்துடன்,...
உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தான் ஏற்பார் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாடாளுமன்றில் உறுதியளித்தார். இருப்பினும், இந்தக் கைதிகளை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து தன்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியாது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும்...
பாகிஸ்தான் ஜனாதிபதி மம்ஹூன் ஹூசைன் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தோனேசியாவுக்கு சென்று திரும்புகையில் பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்தார் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் இலங்கையில் ஐயாயிரம் சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய உற்பத்திகளுக்காக நச்சு இரசாயனப் பொருட்களை பயன்படுத்துதல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் நிலைமைகள் இதற்கு பிரதான காரணங்களாகும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு, இந்த...
இந்தியாவில் இடம்பெறவிருக்கும் 'இருபதுக்கு 20' உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றச் செல்லும் இலங்கை அணியின் வீரர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இலங்கை கிரிக்கெட் அணியினரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார். இச்சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் உடனிருந்தார். 'ஒரே அணி...
உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாக, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களது கோரிக்கைகளுக்கு அமைய அந்தந்த பிரிவுகள் குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மெகசீன் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை சந்தித்து விட்டு வடக்கு ஆளுனர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜீ எனும் சுவையூட்டியை இன்னும் இரு வாரங்களுக்குள் சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
இலங்கையில் நடந்த போரின் போது, காணாமல் போன மற்றும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க கடந்த அரசும் புதிய அரசும் தவறிவிட்டன என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போரின் போது காணாமல்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விவாதம், நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வேளையே எதிர்க்கட்சித் தலைவர்...
தகவலறியும் உரிமை தொடர்பான சட்ட மூலத்தை இன்று(8) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். இந்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த சட்டமூலம் வடக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண சபைகளினதும் அனுமதியைப் பெற்றுள்ளதாக, கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். வட...
2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைப்படி தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை 2 வீதத்தில் இருந்து 4 வீதமாக அதிகரிப்பதனால் அனைத்து துறைகளிலும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் ஏற்படலம். ஆகவே தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்பட மாட்டாது.என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். இன்று நாடாளுமன்றத்தில் விஷேட உரை நிகழ்த்திய பிரதமர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து...
சேர்.பொன் இராமநாதன் வீதியை நாச்சிமார் கோவில் வீதி என மாற்றுவதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபை அனுமதி வழங்கியதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கே.கே.எஸ். வீதியையும் பலாலி வீதியையும் இணைக்கும், இவ்வீதியானது, சேர்.பொன் இராமநாதன் வீதி என்ற அழைக்கப்படுகின்றது. இந்நிலையில், அண்மையில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று வீதிகளுக்கான பெயர்ப் பலகைகளை நாட்டியுள்ளது. அதில் சேர்.பொன் இராமநாதன் வீதி...
சந்தேக நபரொருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கத்திக்குத்துக்கிலக்கான சம்பவமொன்று, திங்கட்கிழமை (07) திக்கம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரீ.வ.சிவன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கத்திக்குத்துக்கிலக்காகியுள்ளார். குடும்ப பிரச்சினை ஒன்றுடன் தொடர்புபட்ட சந்தேகநபரை பொலிஸார் கைது செய்யச் சென்ற போது, சந்தேகநபருக்கும் அவருடைய தந்தைக்கும் இடையில் முரண்பாடு...
அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண பெண்கள் மாற்றத்துக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு ஆகியன இணைந்து பரமேஸ்வரா சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை புலனாய்வாளர்கள் தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர். அத்துடன், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அவர்கள் புகைப்படம் எடுத்தனர். இவர்களின் வழமைக்கு மாறான இவ்வாறான செயற்பாட்டால்...
கீரிமலை, வலித்தூண்டல் பகுதியில் அமைந்துள்ள சென்.ஆன்ஸ் தேவாலயத்தின் 4 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக நிலஅளவை செய்வதற்கு, இன்று செவ்வாய்க்கிழமை (08) மேற்கொண்ட நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்தக் காணியை, ஏற்கனவே 3 தடவைகள் நிலஅளவை மேற்கொள்ள எத்தனித்தபோதும், பொதுமக்களின் எதிர்பார்;ப்பால் அந்நடவடிக்கை கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதல் தடவையாக தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டியொன்றை நடத்த இலங்கை அபிவிருத்தி ஊடக நிலையம் தீர்மானித்துள்ளது. நோக்கம் பிரதான நிலை ஊடகங்களில் தமது குரலுக்கான உரிய இடமும் பிரதிநிதித்துவமும் கிடைக்காத மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை ஒரே நிமிடத்தில் வீடியோ கதையாக சித்திரிக்கும் இளைஞர் யுவதிகளை அடயாளம் காண்பது இப்போட்டியின் நோக்கமாகும். சமூக ஊடகத்தில்...
‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’ இந்த கூற்று மதுரை அருகே நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட அகதியின் கடைசி குரல். இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் உயிர் பிழைக்க தப்பி வந்து தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கும் அகதிகளின் அவலம் சொல்லி மாளாது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டில் இருந்து 2013-ம்...
யாழ்ப்பாணத்தில் பணப்பயிர்களில் ஒன்றாகக் கருதப்படும் வெங்காயத்தின் அறுவடைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. அச்சுவேலி பத்தைமேனி விவசாயிகளின் அழைப்பின் பேரில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் கி. ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோர் அப்பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.03.2016) சென்று வெங்காயச் செய்கையைப் பார்வையிட்டுள்ளனர். அங்கு அமைச்சர்...
Loading posts...
All posts loaded
No more posts
