Ad Widget

தட்டார்தெரு சந்தி வாள்வெட்டு: இரு மாணவர்களுக்கு மறியல்

தட்டார் தெரு சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் யாழ். நகருக்கு அண்மையாக தட்டார் தெரு சந்தியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 15 பேரைக் கொண்ட கும்பல் ஒன்று 17 வயதான ஹேமராஜன் என்பவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பிச் சென்றபோது மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கைவிட்டுத் தப்பிச் சென்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு இருவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுததிய பொலிஸார், ஏனைய சந்தேகநபர்களை இன்னமும் கைது செய்யவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் அவர்களை விரைவில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துவதாகக் கூறினார்.

இதன்போது குறித்த இரு மாணவர்களும் கற்கும் பாடசாலையின் அதிபர் மன்றில் தோன்றி இரு மாணவர்களினதும் நன்னடத்தை சான்றிதழை நீதிவானிடம் வழங்கினார்.

Related Posts