Ad Widget

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட குழு யாழில்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஹட்டக்சன் மற்றும் அவரது குழுவினர் நேற்று புதன்கிழமை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

Capture

நேற்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்பின்னர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

அந்த சந்திப்பின் போது, இறுதி யுத்தத்தின் போது பொது மக்களின் இழப்பீடுகள் உட்பட வடமாகாண மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் பற்றியும் ஆராய்ந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

Related Posts