- Sunday
- August 9th, 2026
நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் கடும் மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் தெற்கு கரையோரங்களில் இன்று காலை முதல், சிறிமதளவு மழை பெய்யக்கூடும்.
கடற்படையினரின் வசமிருக்கின்ற முள்ளிக்குளம் காணிகள், வெகுவிரைவில் விடுவிக்கப்படும்' என, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்தக் காணி விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இடம்பெயர்ந்த முள்ளிக்குளம் கிராம மக்கள், தமது சொந்தக் காணிகளில் மீண்டும் வாழ வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கின்றார்கள். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், அவர்களின் மீள்குடியேற்றத்தில்...
உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சிற்றுண்டிகளின்...
பாடசாலை மாணவர்களின் சீருடைத் துணியைக் கொள்வனவு செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ள வவுச்சர் வழங்கும் முறையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2017ஆம் ஆண்டில், இந்த வவுச்சர் முறையை ரத்து செய்து, இதுவரை காலமும் இருந்துவந்தது போல், பாடசாலை ரீதியில் சீருடைக்கானத் துணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம்...
வடக்கு மாகாணசபையினால் திரட்டப்பட்ட தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் நிதியத்தினில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ் நாட்டில் கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக பாதித்த மக்களிற்கு உதவும் வகையில் வடக்கு மாகாணசபையினால் திரட்டப்பட்ட தமிழ்நாடு...
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 284 சிறுவா்கள் தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவா்களாக காணப்படுவதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டின் கணிப்பின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.3 ஆயிரத்து 44 சிறுவா்கள் தந்தையையும், 764 சிறுவா்கள் தாயையும், 476 சிறுவா்கள் தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளனா். கரைச்சி...
கிளிநொச்சியில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞரின் பெற்றோர் கொழும்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளனர். கிளிநொச்சி – திருவையாறை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு கொழும்பு –...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு தமிழ் அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா மறுத்துள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஒரு வாரகாலமாக அமெரிக்காவில் தங்கியுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் யுத்தக்குற்றவாளியான அவரை அமெரிக்காவில் வைத்து கைது செய்ய வேண்டும்...
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் பாடல்களை கேட்டு ரசித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று சிவில் உடையில் சென்ற பொலிஸாரினாலேயே 25 வதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்று மாலை யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதியின்...
ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான குழுவை பங்கேற்கவைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால் அரசாங்கம் உயர்மட்டக்குழுவை...
சமூக, பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள டென்மார்க்கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஸ்கன்டினேவியன் (Scandinavian) பொருளாதார முதலீட்டுக் குழுமம் திட்டமிட்டுள்ளதாக அதன் சர்வதேச மற்றும் இலங்கைத் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் தருமன் தர்மகுல சிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள இவர் கடந்த வாரம் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியிலுள்ள...
கன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக வரலாறுச் சான்றுகள், ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன. கன்னியா வெந்நீரூற்றுககு அருகில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டன. தற்போது...
திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட படுகாடு விவசாயிகளை இலக்கத்தகடு இல்லாத உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற சிங்களவர்கள் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தியதாக முறையிடப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளின் பின்னர் சிங்கள விவசாயிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது விவசாய நிலங்களிற்கு கடந்த திங்கட்கிழமை சென்ற நிலையில் இன்று வியாழக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட...
முல்லைத்தீவு அம்பகாமம் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழாவிவை முன்னிட்டு ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்திலிருந்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற பறவைக் காவடி எடுத்துவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உழவு இயந்திரம் குடைசாய்ந்ததினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட இடதுகரை முத்து ஜயன் கட்டையைச் சேர்ந்தவரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து...
இணுவில் முதலிகோயில் பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரையும், எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ரி.கருணாகரன், நேற்று புதன்கிழமை (20) உத்தரவிட்டார். குழு மோதல் ஒன்றுக்கு மேற்படி மாணவர்கள் இணுவில் பகுதிக்கு வந்திருப்பதாக...
பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளுக்காக, எதிர்காலத்தில் புதிய சட்டங்களைக் கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை )21) தெரிவித்தார். கொழும்பு, கலதாரி ஹோட்டலில் இன்று நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் இடம்பெறும் பகிடிவதை, பாலியல் மற்றும் பாலினச் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும் துன்புறுத்தல்களைத் தடுப்படு...
புது வருடத்தை முன்னிட்டு விஷேட சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளின் சாரதிகள் மது போதையில் இருந்ததாக, பொலிஸார் குறிப்பிட்டமையானது முரன்பாடான விடயம் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு தகவல் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் பொலிஸாரிடம் இது குறித்த அறிக்கை...
யாழ். மாவட்டத்திற்கு 39 ஆயிரம் வீட்டுத் தேவைகள் இருப்பதாகவும், முதற்கட்டமாக மூவாயிரம் வீட்டுத்திட்ட வேலைகள் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இதன்படி பயனாளிகளுக்கான விண்ணப்ப படிவங்கள்...
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மூலம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 641பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (20.04.2016) நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வடக்கு விவசாய அமைச்சால் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின்...
யாழ் குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கடும் வெப்பத்தினால் ஏற்படும் பல்வெறு நோய்களுக்கும் மக்கள் ஆளாகிவருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் குடாநாட்டில் கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் வெயிலின் கொடூரம் அகோரமாகவுள்ளது. இதனால் அத்தியவசியப் பணிகளைத் தவிர்த்து வெளியில் செல்வதை...
Loading posts...
All posts loaded
No more posts
