சனியன்று இடம்பெறும் மக்கள் எழுச்சிப் பேரணி முக்கியத்துவமானது – யாழ்.பல்கலை. சமூகம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் சபையின் 40ஆவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலப்படுதியில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நிரந்தர மற்றும் பயனுறுதி வாய்ந்த தீர்வை நோக்கி நகர்த்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் வரும் சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் பேரணி முக்கியத்துவம் வாய்ந்த்து என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற...

மக்களின் நலனை கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக செயற்பட முடிவு!!

அதிகார பகிர்வு தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக செயற்பட முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். பத்தரமுல்லவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையத்தில் தமிழ் தேசிய...
Ad Widget

வலி. வடக்கில் 227 ஏக்கர் காணி சத்தமின்றி சுவீகரிக்கப்படுகிறது!

வலிகாமம் வடக்கில் 227 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள இரகசிய நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காணிகளை சுவீகரிப்பதற்குரிய கடிதங்கள் நேற்று (வியாழக்கிழமை) அக்காணிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலையே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காணிகளை சுவீகரித்து கடற்படை முகாம், சுற்றுலாத்தலம் அமைப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அக்காணிகளின் உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்....

35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் கடத்தல்!

வவுனியா, நெடுங்கேணிக் பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார். பாடசாலை சென்று வீடு...

ஜெனீவாவில் கோரிக்கைகளை முன்வைக்க யாழ்.மக்களுக்கு வாய்ப்பு

ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மக்கள் கையளிக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சுரேன் ராகவன் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த கோரிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மக்கள்...

மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 500 ஆண்டுகள் பழமையானவையாம்!!

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் முற்பட்டவை என்று காபன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளின் அறிக்கையில் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே இவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட...

யாழ்,கிளிநொச்சி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம்

வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 32 தொடக்கம் 41 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், பொலன்றுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை...

திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கர்களை அச்சுருத்தும் வகையில் துண்டுப்பிரசுரம்

மன்னாரிலுள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுருத்தும் வகையில், திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் கருப்பு வெள்ளை மற்றும் கலர் வடிவிலான துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாக நேற்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன்போதே அப்பகுதியியை அண்மித்த பகுதிகளில் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “மன்னார் வாழ்...

யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபரின் மோசடிக்கு அதிகாரிகள் துணை!

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பெரும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளார். வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு...

வடக்கில் 248 பாடசாலைகளுக்கு நிரந்தர பூட்டு?

வடக்கு மாகாணத்தில் உள்ள 248 பாடசாலைகளை மூடுவதற்கான அபாயம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 50 இற்குக் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள், முன்னேற்றங்களை காண்பிக்காவிட்டால், அவற்றை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு...

வடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பும் முழு ஆதரவு!

வடக்கு மாகாண ரீதியாக நாளைமறுதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் தெரிவித்ததாவது:-...

யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கும் உரிமை உண்டு – யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்து!

யாழ் மாநகர எல்லைக்குள் தமிழருக்கு மட்டும்தான் காணி நிலங்களோ அன்றி கட்டடங்களோ வழங்கப்படவேண்டும் என்ற சட்டவரையறை எதுவும் கிடையாது. ஏனைய தென்னிலங்கையைச் சேர்ந்த எவரும் வந்து இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். இது தமிழருக்கு மட்டுமான பகுதி அல்ல என யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் மாநகர சபையில் யாழ் நகரக்குளப்...

யாழில் முழு அடைப்பு, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும், முழுஅடைப்பிற்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டியும் திங்களன்று ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வினை முன்னிறுத்தி இடம்பெறவுள்ள இந்த போராட்டத்திற்கு அனைவரது ஆதரவும் அவசியம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்...

இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி

இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றமை குறித்து ஜனாதிபதியிடம் கொழும்பிலுள்ள ஊடகமொன்று கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்தினர் குருதி சிந்தி...

முழு அடைப்புப் போராட்டம் குறித்து கூட்டமைப்பு மௌனம்!

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் சிவில் சமூக அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் எதிர்வரும் 25ஆம் திகதி (திங்கட்கிழமை) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த...

பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் நால்வர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாள் மற்றும் கோடரியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (20) இரவு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அவர்களது வீடுகளிலேயே வைத்து கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 2...

மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமளிக்கமாட்டோம்!! – சம்பந்தன் ரணிலுக்கு பதிலடி!!

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். படையினரின் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில் இன்னமும் இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கும், கொன்றொழிக்கப்பட் மக்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கும் நீதி வேண்டும். சர்வதேச பொறிமுறை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.”–...

நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!

நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ரணில், பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இக்கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலும் இக்கருத்தை மீண்டும் ரணில் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

யாழில் இரு சிறுவர்கள் கடத்தல்!! : பொலிஸில் முறைப்பாடு

யாழ். பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு, சாந்தை பகுதியில் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த 13 வயதான சதீஸ்வரன் வினோத் மற்றும் 8 வயதான சதீஸ்வரன் பூஜா ஆகியோரே காரில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு அருகிலுள்ள பகுதியில் சிறுவர்கள்...

மறப்போம், மன்னிப்போம்; போர்க்குற்ற விசாரணை தேவையில்லை: கிளிநொச்சியில் பிரதமர் ரணில்!

போர்க்குற்ற விசாரணை தேவையில்லை. வழக்கு தொடர்வதென்றால் மாறி மாறி தொடுத்து கொண்டிருக்கலாம். ஆகவே, இரண்டு தரப்பும் இந்த குற்றச்சாட்டை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்“ இப்படி கிளிநொச்சியில் வைத்து தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. நேற்று (15) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடந்த அபிவிருத்தி கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்தார். போர்க்குற்றச்சாட்டுக்கள் இரண்டு தரப்பிலும் உள்ளன. இலங்கை...
Loading posts...

All posts loaded

No more posts