திருகோணமலையில் இந்து கோயிலின் அஸ்திவாரம் உடைப்பு!!

தொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாணப் பணிகளின்போது அங்கு காணப்பட்ட இந்துக்கோயிலின் அஸ்திவாரத்தை உடைத்து சிவன் ஆலயத்திற்கு அருகே இடிந்து வீழ்ந்துள்ள கிணற்றினை நிரப்பியதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஆராய குறித்த பகுதிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த மாவட்ட...

பிள்ளையார் கோயில் இடிக்கப்படுவதை ஹிஸ்புல்லா நிறுத்தாத பட்சத்தில் போராட்டம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச்...
Ad Widget

சம்மந்தன், மாவை, சுமந்திரனின் சம்மதத்துடனேயே வெளிநாட்டு அகதிகளை வடக்கிற்கு அழைத்து வந்தோம்!!

இலங்கைக்கு அகதிகளாக வந்துள்ளவர்களை வடக்கில் தங்க வைப்பதற்கு தமிழ் அரசு கட்சியின் சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் சம்மதம் வெளியிட்டிருந்தனர். எனினும், பிரதேச அளவில் இருக்கின்ற அரசியல்வாதிகளே அரசியல் நோக்கங்களுக்காக எதிர்த்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன். யாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நேற்று நடத்திய...

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு!

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளது. நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு,...

வற்றாப்பளைக்கு குண்டுடன் சென்றார்களா?: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது!!

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் திருவிழாவிற்குச் சென்றவர்கள் குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் வடமராட்சியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவரே பளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல்த் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் வழிமறிக்கப்பட்டனர். இதன்போது, பொலிஸாருக்கும் வானில்...

யாழ் தனியார் வைத்தியசாலையில் சிறுவன் உயிரிழந்தமைக்கு சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா?

யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 9 வயதுச் சிறுவன் உயிரிழந்தமைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா? என முழுமையான விசாரணையை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுவனுக்கு இருதயத்தில் துவாரம் இருப்பதாக மருத்துவ நிபுணரால்...

சிரியாவில் பயன்படுத்தப்படும் அதிபயங்கர ஆயுதம் இலங்கையில் கண்டுபிடிப்பு

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் மிகவும் ஆபதான ஆயுதம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் செயற்பாட்டாளர் ஒருவரிடமிருந்து விசேட சென்டிநெல் (Sentinel) ரக ட்ரோன் கமரா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த விசேட ட்ரோன் கமராவில் ஆபத்தான வெடி பொருட்களை வைத்து பாரிய தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ஐ.எஸ் அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஐ.எஸ் அமைப்பினர்...

மிருசுவிலில் 8 தமிழர்கள் படுகொலை: இராணுவ அதிகாரியின் தூக்கை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!!

யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு 8 தமிழர்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு இராணுவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இராணுவ அதிகாரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 19 குற்றச்சாட்டுக்களில் சட்டவிரேதக் கூட்டம் ஒன்றைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 1 தொடக்கம் 10 வரையான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த...

நல்லூர் கோவிலை தாக்­கு­வ­தற்கு திட்­டமாம்?

யாழ். நல்லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்தில் நாளை சனிக்­கி­ழமை தாக்­குதல் நடத்­தப்­போ­வ­தாக அநா­ம­தேயக் கடி­தத்தை அனுப்­பி­ வைத்­தவர் தொடர்பில் விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அவரைக் கைது செய்­யு­மாறு வடக்கு மாகாண ஆளுநர் கலா­நிதி சுரேன் ராகவன் பொலி­ஸா­ருக்கு அறி­வு­றுத்­தி­யுள்ளார். தமிழர் தாய­கத்தில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நாளை அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் இந்த அநா­ம­தேயக் கடிதம் ஆளு­நரின் அலு­வ­ல­கத்­துக்குக்...

தாக்குதலுடன் தொடர்புடையவரை விடுவிக்குமாறு 3 தடவைகள் ரிஷாட் கோரினார்! – இராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 3 தடவைகள் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார். எனினும் அவரது கோரிக்கையை தான் ஏற்கவில்லை என்றும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என...

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு...

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்

சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்து மூன்று இலங்கையர்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர்கள், அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபாய் பணம் குறித்தும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது. அண்மையில் தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின்...

யாழ்ப்பாணத்திலும் கால்வைத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்!! உண்மை அம்பலமானது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் தளம் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடையது என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதி மற்றும் நாவாந்துறைப் பகுதி ஆகியன பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சோதனைக்கு உள்ளாகின. இதன்போது ஒஸ்மானியாக் கல்லூரி வீதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டைச் சோதனையிட்டபோது அங்கு நிலக்கீழ் தளம் ஒன்று...

யாழ் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் பெண் கைது!

சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் ஜெர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தொடருந்தில் வந்த பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை விசாரணை செய்துள்ளனர். அத்துடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர். அதன் போது அவரது உடமையில் சில இலத்திரனியல்...

குருணாகலில் 3 பள்ளிவாசல்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல்

குருணாகல் மாவட்டத்தில் மூன்று பள்ளிவாசல்கள் மீது இன்று (13) திங்கட்கிழமை காலை இனந்தெரியாதோரால் தாக்குதல்கள் நடப்பட்டுள்ளன. கின்னியம மஸ்ஜிதுல் தக்வா ஜும்மா பள்ளிவாசல் , மஸ்ஜிதுல் அப்ரார் தக்கியா பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் ஆயிஷா தக்கியா பள்ளிவாசல் ஆகியவை மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியோர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, சிலாபத்தில்...

யாழிலிருந்து பயணித்த ரயிலுடன் மோதி பேருந்து விபத்து

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த சிறியரக பயணிகளை ஏற்றும் பேருந்து ரயில் கடவையை கடக்க...

நாட்டில் விஷவாயுத் தாக்குதல் நடக்கலாம் – மஹிந்த

எதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்நேற்று (வெள்ளிக்கழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “வரும் திங்கட்கிழமை சிறுவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பமென அரசு அறிவித்துள்ளது. ஆனால் அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை...

தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் பொது இவை மீட்கப்பட்டுள்ளன 9 மில்லி மகசின் ஒன்று, 5 தோட்டக்கள் மற்றும் வயர் சுற்று ஒன்று என்பனவே தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்தில் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்....

யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 10 மாவட்டங்களில் கடும் வெப்பம்!!!

யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 10 மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 33 தொடக்கம் 36 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிகூடுதலாக திருகோணமலை மாவட்டத்தில் 36 செல்சியஸ், மட்டக்களப்பில் 35 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். யாழ்ப்பாணம் 33 செல்லியஸ்சும்...

13 ஆம் திகதி மீண்டுமோர் ஆபத்து? – பொன்சேகா எச்சரிக்கை

எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அத்துடன் பயங்கரவாதிகளில் 150 பேரில் 50 பேர்வரை கைதுசெய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அப்படியாயின் இன்னும் 100 பயங்கரவாதிகள் இருக்கின்றனர். இது மிகவும் எச்சரிக்கையான நிலையாகும்....
Loading posts...

All posts loaded

No more posts