யாழ். நகரில் பொது வீதி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!

யாழ்.நகரப் பகுதியில் இருந்த பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறு கோரியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 10 மணிக்கு காங்கேசன்துறை வீதி யாழ்.நகரப் பகுதியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரின் மத்தியில்...

ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மீண்டும் இலங்கைக்கு அச்சுறுத்தல்!!!

இலங்கை மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை ஐ.எஸ்.அமைப்பு நடத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய உளவுப்பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் குறித்து மூன்று எச்சரிக்கை கடிதங்களை இந்திய உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளுக்கு றோ அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் றோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை...
Ad Widget

சிறிதரன் மற்றும் விஜயகலாவிற்கு எதிராக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!!

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தகுதியுள்ள பணியிலிருக்கும் தம்மை தகுதி கோரப்படாத பதவியிலிருப்போர் தகுதியில்லை என கூறுவதாக குற்றம் சாட்டி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் பொது மக்கள் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கல்வி இராஜாங்க...

அமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என உத்தரவாதம் வழங்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்

அமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என்பதற்கு தன்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அச்ச சூழ்நிலையில் நிலைமைகளை கையாள்வதற்காக அமெரிக்க படைகள் இலங்கைக்கு வருவதற்கான சத்திக்கூறுகள் தொடர்பாக கேட்கப்பட்ட...

பெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை!! குற்றவாளி பொலிஸில் சரண்!!

காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார். இந்தச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு...

நானும் கஜேந்திரகுமாரும் ஒன்று சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை – க.வி.விக்னேஸ்வரன்

அமரர் க.மு.தர்மராஜா அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் நினைவுப்பகிர்வு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 15.06.2019 அன்று மாலை 5 மணிக்குநடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் சிறப்பு விருந்தினர் உரை .... குரூர் ப்ரம்மா……… எல்லோருக்கும் இந்நேர மாலை வணக்கங்கள் உரித்தாகுக! அமரர் தர்மராஜாவுடன் அன்று பக்கம் பக்கமாக...

ஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு!

ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு தேவைப்படின், எந்தவொரு சந்தர்ப்பத்தில், எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தித்து கலந்துரையாட...

நாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

நாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு -கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டபின்னர் 185 ஆவது வருடாந்த திருநாள் திருப்பலி இம்முறை கொடியேற்றம், திருச்சொரூபப்பவனி என்பன இடம்பெறாமல் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

இராணுவ வாகனம்மோதி இளைஞன் உயிாிழப்பு!

கிளிநொச்சி- இராமநாதபுரம் பகுதியில் இராணுவ வாகனம் மோதி இளைஞா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். இன்று மதியம் 12.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விமானப் படையின் ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதித்த...

ரௌடிகளால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் சாவு!! ; உடுவிலில் பதற்றம் – பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு

சுன்னாகம் பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பையடுத்து உறவினர்கள் உள்பட ஊரவர்கள் குழப்பமடைந்ததுடன், தாக்குதல் நடத்தியவர்களைப் பொலிஸார் கைது செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர். சம்பவத்தில் உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த...

இந்தியாவிற்கு வாருங்கள், தீர்வு பற்றி பேசுவோம்: கூட்டமைப்பிற்கு மோடி அழைப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு நடந்தது. சந்திப்பின் தொடக்கத்தில், மோடி இரண்டாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றத்திற்கு இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்தார். இதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார் மோடி. முன்னதாக திட்டமிட்டதை விட குறைவான நேரமே இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பிற்கு முன்னதாக இடம்பெற்ற மஹிந்தவுடனான...

யாழில் மாணவன் மீது வாள்வெட்டு!

நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இடம்பெற்றது. முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பல், அடாவடியில் ஈடுபட்டதுடன் மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. அண்ணனை...

இலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் – முஸ்லிம் நாடுகள் எச்சரிக்கை!

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், இலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் என சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது. பொறுமையானவர்கள், அமைதியான நாட்டவர்கள் என்று இலங்கையர்கள் பெற்றுக்கொண்டுள்ள நற்பெயரை தொடர்ந்தும் பாதுகாத்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பல வன்முறைச்...

இனவாதிகளின் பின்புலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் முயற்சி நடைபெறுகிறது: சம்பந்தன்

குண்டுத் தாக்குதலை பயன்படுத்தி நாட்டை தங்களது கைக்குள் கொண்டுவருவதற்கு இனவாதிகளின் பின்புலத்துடன் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் குழுவொன்று இயங்குகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நடைபெறுகின்ற போராட்டங்கள் தொடர்பாக தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே இரா.சம்பந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசினால் நியமிக்கப்பட்டவர்கள் குற்றம் இழைத்து இருப்பார்களாயின்...

வடமராட்சியை அச்சுறுத்தும் கொள்ளையர் குழு!! காவல்துறையின் ஆசிர்வாதம் இருப்பதாக மக்கள் விசனம்!!

வடமராட்சி உடுப்பிட்டியில் நாள் தோறும் அரங்கேறும் கொள்ளைகளின் பின்னணியில் லக்கி குழு எனும் போதைப்பொருள் கும்பல் உள்ளமை அம்பலமாகியுள்ளது.அதிலும் வல்வெட்டித்துறை காவல்துறையின் முழுமையான ஆசீர்வாதத்துடன் இக்குழு செயற்படுவதும் அம்பலமாகியுள்ளது. இக்குழுவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டினில் கைதான கும்பலை சேர்ந்த பலர் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். வடமராட்சி பகுதியில் கடந்த இரண்டுவருடகாலமாக தொடர் கொள்ளைகள் பல அரங்கேற்றப்பட்டுவந்த...

கிளிநொச்சியில் வாள்வெட்டு சம்பவம்: கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் படுகாயம்!

கிளிநொச்சியில், செல்வாநகர் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாள் வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் காயமடைந்துள்ளனர். பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில்...

யாழில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் போராட்டம்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகைக்காக கூடும் இஸ்லாமியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக ஐந்து சந்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது. ஐ.எஸ் அமைப்புக்கு...

குருணாகல் மருத்துவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள்!!

சந்தேகத்துக்கு இடமான வகையில் சொத்துத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலை மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி, சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சை செய்தார் என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி, சட்டவிரோதமாக சுமார் 4 ஆயிரம் சிங்களப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு...

கிளிநொச்சியில் பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை

கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. காவல்துறையினரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் காவல்துறையினர் மற்றும் படையினர் ஈடுபட்டதுடன் பாடசாலை சூழல் மோப்ப நாய்களைக் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை...

ஆவா குழுவினர் திருந்திவிட்டனர் – பிரதி பொலிஸ்மா அதிபர்

“யாழ்ப்பணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தற்போது திருந்தி சமூகத்தில் நல்லவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்திய பெருமையுடன் வடக்கில் இருந்து மாற்றலாகின்றேன்” இவ்வாறு வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ தெரிவித்தார். அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலரை அவர் தனது அலுவலகத்தில் சந்தித்த போதே...
Loading posts...

All posts loaded

No more posts