Ad Widget

ஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு!

ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு தேவைப்படின், எந்தவொரு சந்தர்ப்பத்தில், எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தித்து கலந்துரையாட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் சுரேன் ராகவன், பல்வேறு அதிரடியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

இந்தநிலையிலேயே யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தி வரும் வாள்வெட்டு குழுவான ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

Related Posts