Ad Widget

கிளிநொச்சியில் வாள்வெட்டு சம்பவம்: கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் படுகாயம்!

கிளிநொச்சியில், செல்வாநகர் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாள் வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் காயமடைந்துள்ளனர்.

பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற 15இற்கும் மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீடு புகுந்து வாள் வெட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது, அங்குள்ள தற்காலிக வீடு ஒன்றும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எரிக்கப்பட்டுள்ளதோடு, மூன்று வீடுகளின் உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில். இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டுக்குள்ளான குடும்பங்களில் ஒரு குடும்பம் கிளி நொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று தங்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு செய்ததாகவும், ஆனால் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts