- Tuesday
- December 23rd, 2025
சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் கோண்டாவிலில் இரும்பக உரிமையாளரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்று கொலை வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்க பொலிஸார் முன்வைத்த விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நண்பருடன் இருந்த சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்தி...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாலும் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை வளாகத்தினுள் 26ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியிருந்ததுடன், பல்கலைக்கழக வளாகத்திற்குள்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 573 குடும்பங்களைச் சேர்ந்த 2272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. பல இடங்கள் வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி முதல் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7...
தமிழ் கட்சிகளில் மாற்று அணிகள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருந்தவபாலன்,...
தடைகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு மாணவர்கள் உணர்வூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை...
அனைத்துபீட மாணவர்களுக்கும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) மற்றும் நாளை இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய பல்கலைக நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தினுள் நுழைவதனையும் அனுமதி அளிக்கப்படாத எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எந்த ஒரு நிகழ்வையும்...
இந்தியாவுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்கும் நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி, காணி விடுவிப்பு, இளையோருக்கான வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழை். பல்கலை மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் இவ்வாறு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65ஆவது பிறந்த தினம் இன்றென்பது குறிப்பிடத்தக்கது.
அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் 8 இடங்களில் அகழ்வு செய்யப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்ட போதும் அங்கு எவையும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அகழ்வுப் பணிகளைக் கைவிட்ட பொலிஸார்நேற்று மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து சென்றனர்....
நடைபெற்று முடிந்த சனாதிபதித்தேர்தலை அடுத்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாற்றணி அரசியல் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி முயற்சிகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இணைவில் ஏற்பட்ட முரண்பாடுகளுடன் அமைதியாகியிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற சனாதிபதித்தேர்தலில் அனைவரது கவனமும் குவிந்திருநதது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்த நிலையில் வடக்கு...
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னரிலும் பார்க்க எதிர்வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரட்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாரபாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில்...
யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தியை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது. ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இன்று (புதன்கிழமை) தகவல் வெளியாகியிருந்தது....
இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து செயற்படுவார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரணிலிற்கு பிரதமர் பதவி இல்லை என்றவுடன் கட்சிப் பதவியையாவது காப்பாற்றுவதற்காக ரணிலும் சுமந்திரனும் மேற்கொண்ட சதியினாலேயே சஜித்...
கோகாலையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இந்த சம்பம் நேற்று (திங்கட்கிழமை) இரவு கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கனேபொல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு, சிறுபான்மை மக்களாகிய மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பலர் சொத்துக்களை இழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த...
நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதியாக நந்தசேன கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார். அனுராதபுர ருவன்வெலி மகா தூபி முன்பாக, பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய முன்னிலையில் கோத்தாபய ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார். இந்த பதவியேற்று சுபவேளையில் முற்பகல் 11.45 மணிக்கு ஆரம்பமானது. 11.50 மணிக்கு உறுதியுரை எடுத்துக்கொண்டு கையொப்பமிட்டார். இங்கு அவர் உரையாற்றுகையில்...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்று...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் விடுக்கப்பட்ட 2ஆவது நிலை பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. பெரிய கூட்டங்கள் அல்லது...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். திருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் இணைப்பிரச்சினைக்கான தேர்வை பெற்றுக்கொள்ள அனைத்து தரப்பினருடனும் பேசியதாக கூறினார். ஆனால்...
கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் ஆட்களை கடத்தி கொன்ற வெள்ளைவான் அணியில், வாகன சாரதியாக பணியாற்றினேன் என ஒருவர் பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அத்துடன், வெள்ளைவான் அணி, கடத்தல்கள், கொலை பற்றி பல்வேறு அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார். இவ்வாறு 300 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக வெளிப்படுத்தியுள்ளார். நேற்று (10) அமைச்சர் ராஜித சேனரத்னவின் எற்பாட்டில் நடந்த செய்தியாளர்...
Loading posts...
All posts loaded
No more posts
