Ad Widget

வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்திற் கொண்டு அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 10.30 மணி முதல் நாளை காலை வரை நாட்டில் நிலவக் கூடிய காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வட மேல் மாகாணம், மேல் மாகாணம் மற்றும், மன்னார், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில், 32 முதல் 41 செல்சியஸ் வரையான வெப்ப நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அவதான நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில், 27 முதல் 32 செல்சியஸ் வரையான வெப்பநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த வெப்பமான நிலைமைகளின்போது, அதற்கு ஏற்றவாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts