Ad Widget

யாழில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் மார்ச் 11-17வரை!!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் மார்ச் 11ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. மாவட்டச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள், பிரதேச சபையின் தவிசாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“இந்த வேலைத் திட்டத்திற்காக யாழ்ப்பாணம் மாநகர சபையில் 15 குழுக்களும், பிரதேச சபைகள் ஊடாக 10 குழுக்களும் தெரிவு செய்யப்பட்டு டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக முப்படையினர், பிரதேச சபையினர், அரச உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைக்கப்படவுள்ளனர்” என்றும் மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.

Related Posts