தனியான நாட்டை நிறுவும் நோக்கமில்லை, உயர்நீதிமன்றில் த.தே.கூ

இலங்கை ஒற்றையாட்சி அரசு என்றும் இலங்கைக்குள் தனியான ஒரு நாட்டை நிறுவும் நோக்கம் தமக்கில்லை என்றும் இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியக்கடதாசியின் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. (more…)

வடமாகாண சபை உறுப்பினர் சயந்தனின் கொடும்பாவி எரிப்பு

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்து கடந்த 5 ஆம் திகதி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டமைக்கும், வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் தொடர்பிருப்பதாகக்கூறி (more…)
Ad Widget

“காணிகளை துப்புரவு செய்து நாமாகவே குடியேறுவோம்”, கீரிமலை மக்கள் படையினரிடம் தெரிவிப்பு

கடற்படைத் தேவைக்காக சுவீகரிப்புச் செய்யப்படவுள்ள தமது காணிகளை துப்புரவுசெய்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு தாம் குடியமரப் போகின்றோம் என்று காணி உரிமையாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர். (more…)

காணி சுவீகரிப்புக்கு டக்ளஸும் சந்திரசிறியும் ஆதரவு – சஜீவன்

வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவும் ஆகியோர் உடந்தையாக இருக்கின்றார்களா? (more…)

நகுலேஸ்வரத்தில் கடற்படை முகாம் நிர்மாணிக்க 183 ஏக்கர் காணி அளவீடு – கஜதீபன்

கீரிமலை, நகுலேஸ்வரம், ஜே - 226 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட உயர் பாதுகாப்பு வலயப் பகுதியைச் சேர்ந்த 183 ஏக்கர் காணி, பொலிஸாரின் துணையுடன் நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (14) அளவீடு செய்யப்பட்டுள்ளது (more…)

ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது – பஷில்

வட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அதனை யாரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. (more…)

யாழில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் நடத்தும் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு

தென்னிலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் யாழ். நகரத்தில் எதிர்வரும் 15ம் திகதி நடத்தவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. (more…)

30 ஆண்டுகளுக்குப்பின் மயிலிட்டி கண்ணகியை தரிசிக்கும் மக்கள்!

வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மயிலிட்டி கண்ணகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு இன்று மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (more…)

பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தயார் – கூட்டமைப்பு

அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தை­யினை அர­சாங்­கமே முறித்­துக்­கொண்­டது. மீளவும் இந்தப் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­ப­தற்கு தென்­னா­பி­ரிக்­கா­விற்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்க நாம் தயா­ரா­கவே உள்ளோம். (more…)

நேர­டிப்­பேச்சு தொடர்பில் ஜனா­தி­பதியிடம் கேள்வி எழுப்­பிய ரம­போஷா

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் நேர­டிப் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­பது தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன? என்று இலங்கை வந்துள்ள தென்­னா­பி­ரிக்­காவின் பதில் ஜனா­தி­பதி ரம­போஷா, ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷ­விடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். (more…)

தமிழருக்கு ஆதரவான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் செயற்படமாட்டோம் – யாழில் ரமபோஷ!

மேற்குலகும் இந்தியாவும் முன்னெடுக்கும் தமிழ் மக்களுக்கு சார்பான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் செயற்படமாட்டோம் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ரமபோஷ தம்மிடம் வாக்குறுதி அளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

விபத்துக்குள்ளான கொழும்பு – யாழ் தனியார் சொகுசு பஸ்கள்! 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த SPS Express தனியார் சொகுசுபஸ்கள் இரண்டு புத்தளம் முந்தல் பிரதேசத்தில் இன்று (08.07.2014) அதிகாலை 12.30 மணியளவில் லொறியுடன் மோதிக்கொண்ட வீதி விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

காணி சுவீகரிக்கும் நோக்கில் இடம்பெற்ற நிலஅளவை பணிகள் இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம், கீரிமலை, சேந்தான்குளம் மற்றும் திருவடிநிலை ஆகிய பகுதிகளில் 127 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை (07) காலை காணி அளவீடு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாகாண சபை, பிரதேச சபை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. (more…)

மார்ச் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல்!

அடுத்தவருடம் மார்ச் மாதமளவில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. (more…)

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சன் உள்ளிட்ட இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்தக் கோரியும், கிளிநொச்சியில் இடம்பெறும் நிலஅபகரிப்புக்களுக்கு எதிராகவும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை (04) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. (more…)

முகமாலையில் மீட்கப்பட்டது பெண்ணினுடைய எலும்புக்கூடு

முகமாலைப் பகுதியில் நேற்று மீட்கப்பட்ட எலும்புக்கூட்டின் அருகிலுள்ள ஆடைகளை வைத்து அது பெண்ணினுடைய எலும்புக்கூடு என உறுதிப்படுத்தியுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சாட்சிகளை அரசு தடுக்க முனைவது அரசுக்கே பாதிப்பாக அமையும்!

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐ.நா. விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார். (more…)

இருகண்ணிலும் பார்வையிழந்தவரின் மனைவியின் முறையீட்டால் அதிர்ந்த வடக்கு முதலமைச்சர்

“சமூக சேவை அலுவலர் தன்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். என்ன பிளான் எதிர்பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு வடக்கு முதலமைச்சரிடம் கிருஸ்ணபுரத்தில் இரு கண்ணும் பார்வை இழந்தவரின் இளம் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். (more…)

அ­நீ­திகள் தொடர்­க­தை­யாக முடி­யா­து – இரா. சம்­பந்தன்

எமது மக்கள் சமத்­து­வ­மா­கவும் சம­பி­ர­ஜை­க­ளா­கவும் வாழ்­வ­தற்­காக அதி­கா­ரங்கள் கூடிய அளவில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்றே நாம் கோரு­கின்றோம். எமது பிரச்­சி­னைகள் முன்­னெப்­போ­து­மில்­லா­த­ள­வுக்கு தற்­போது சர்­வ­தே­ச­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­ன. (more…)

அரசியல் ஆதிக்கங்களுடன் முல்லையில் மீனவர்களின் வாழ்வாதாரம் முடக்கம்

வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts