Ad Widget

நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் முப்படையினர்

யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படைத்தரப்பினர், மற்றும் பொலிஸார் அக்காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது. இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில் உள்ள சுமார் 60 வீதமான காணிகளே இவ்வாறு நிரந்தரமாகச் சுவிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டச்...

மாணவி ஹரிஸ்ணவிக்காக வடக்கு மாகாணம் ஸ்தம்பிதம்!

வவுனியா மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும் அவரின் மரணத்துக்கு நீதி கேட்டும் விடுக்கப்பட்ட ஹர்த்தாலால் வடக்கு மாகாணம் இன்று புதன்கிழமை ஸ்தம்பித்தது. வவுனியாவில் கடந்த 16 ஆம் திகதி மாணவி ஹரிஸ்ணவி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலையைக் கண்டித்தும் அவருக்கு நீதி வேண்டியும் இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் எங்கும் ஹர்த்தாலுக்கு அழைப்பு...
Ad Widget

வடக்கில் இன்று பூரண ஹர்தாலுக்கு அழைப்பு! பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு!!

வவுனியாவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டி இன்று புதன்கிழமை வடக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது. வவுனியா பிரஜைகள் குழுவின் அழைப்பின் பேரில் இடம்பெறும் இந்த ஹர்த்தாலுக்கு பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் பலவும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன. யாழ். வணிகர் கழகம், இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சில...

மகஸின் சிறையில் 15 அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்! அநுராதபுர சிறையில் இருவரின் போராட்டமும் தொடர்கிறது!!

கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் 'ஜே' பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவிலுள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி நேற்றுக் காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா. நீதிநாதன், க.வேதநாயகம்,...

மாணவியின் கொலைக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் அண்மையில் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் கொலையை கண்டித்து வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டம் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை பேரணியாக கோஷங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றிருந்தது....

இருப்பவர்கள் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடக்குமா?- கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

வித்தியாவின் கொலையினை அடுத்து இலங்கையில் சிறுவர்களுக்கு எதிராக இவ்வாறான ஒரு பாலியல் ரீதியான கொலை இடம்பெற கூடாது என்று முழக்கமிட்ட அரசாங்கம் சேயாவின் கொலைக்கும் பத்து வயது சிறுவனின் கொலைக்கும் தற்போது ஹரிஸ்ணவியின் கொலைக்கும் என்ன பதில் கூறப்போகின்றது. இத்தகைய கொடூரமான சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க போகின்றதா? அல்லது இவ்வாறான...

வடக்கு முதல்வரின் எதிர்ப்பையும் மீறி பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்டம் தொடரும்!

வடக்கு மாகாண முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டத்துக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அண்மையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச்...

இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம்! யாழில் ஜனாதிபதி

"நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இலங்கையைக் கட்டியெழுப்பி முன்கொண்டு செல்வதற்கு அனைத்து மக்களும் ஒன்றுபடவேண்டும்."- இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். சாரணர் இயக்கத்தின் தேசிய ஜம்போரி ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு அறைகூவல் விடுத்தார். அவர் தனது...

தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை விவாதம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில், இந்த இருவர் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரம் சிறையிலுள்ள இந்த இருவரும் உண்ணாவிரத்ததை மேற்கொண்டுள்ளதை அவர்களின் உறவினர்களும், அரச அதிகாரிகளும்...

முதலில் உரித்துக்களைக் கொடுங்கள், பின் கலப்புத் திருமணங்கள் நடக்கட்டும்!

9வது தேசிய சாரணர் ஐம்போறியினை, யாழ். மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை 04.30 அளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உட்பட பலர்...

சமஸ்டி நாடுகள் பிரிந்து செல்லவில்லை!- முதலமைச்சர்

சமஸ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் எதுவும், பிரிந்து செல்லவில்லை, இணைந்தே இருக்கின்றன. தென்னிலங்கை அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கனடாவில் கியூபெக் என்று பிரஞ்சு மொழி பேசும் மக்கள்...

காங்கேசன்துறையின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு படையினர் இணக்கம்

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியிருப்பதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடேஸ்வரா கல்லூரி 26 வருடங்களாக பல இன்னல்களுக்கு மத்தியில் தெல்லிப்பளை பகுதியில் இயங்கி வருகின்றது. 1990ஆம் ஆண்டு தொடக்கம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அப்பகுதி மக்களுடைய காணிகளும் பாடசாலைகளும்...

அநுராதபுரம், மகஸின் சிறைகளில் 17 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் குதிப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம்...

வடக்கு, கிழக்கு வீட்டுத்திட்டம் திடீரென திசை மாறுகின்றது!!

வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அநுராதபுரம், பொலனறுவை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் வீடுகளை இழந்த மக்களிற்கு வடக்கு, கிழக்கில் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 2.1 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட...

வடக்கு மாகாணசபையுடனும் முதலமைச்சருடனும் இணைந்து செயற்படுவேன்! – புதிய ஆளுநர்

வடக்கு மாகாணசபையுடனும் அதன் முதலமைச்சருடனும் நான் இணைந்து செயலாற்றுவேன். என வடமாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களது பிரசன்னம் எனக்கு மகிழ்ச்சியை...

வவுனியா மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம்! ஹர்த்தால்!!

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடந்த 16ஆம் திகதி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13வயது மாணவிக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு சமூக வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்முறைக்கு எதிரான மக்கள் அமைப்பின் கலந்துரையாடல் வன்னி நாடாளுமன்ற...

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இன்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பவுள்ளார். இந்நிலையிலேயே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை ஜனாதிபதி...

பிரபாகரன் உயிரோடு உள்ளார்!! ஈழப்போர் மீண்டும் வெடிக்கும் – பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய் எனவும், பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என்றும் தமிழர் தேசிய இயக்க நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன் இந்த பரபரப்பு தகவலை தெரிவித்தார். மேலும் அவர் கூறியாதாவது: அத்திக்கடவு அவினாசி திட்ட பிரச்சினையில் பவானி...

விடுவிக்கப்பட்ட பகுதிகளை துப்பரவு செய்ய இராணுவம் மறுப்பு

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 488.5 ஏக்கர் காணிகளில் பெக்ஹோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை, இராணுவம்வழங்க மறுத்துள்ளதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்தார். மேலும், மேற்படி காணிகளை உரிமையாளர்களிடம் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வரையில் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடவேண்டாம் என இராணுவம் பொதுமக்களுக்கு கூறி வருகின்றது....

கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய்? ஆய்வுக்குத் பிரான்ஸ் பல்தேசிய நிறுவனம் தயார்!

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வள ஆய்வில் பிரான்ஸை தளமாகக்கொண்ட `Total' என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஒன்று ஈடுபடவுள்ளது எனவும், இதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது எனவும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பிரான்ஸின் பல்தேசிய நிறுவனத்துக்கும், இலங்கையின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்துக்கும் இடையில் நேற்று இது தொடர்பான கூட்டு...
Loading posts...

All posts loaded

No more posts