- Sunday
- July 27th, 2025

சம்பூர் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படின் அதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம். எனவே இது தொடர்பில் எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் அளவுக்கு நாம் அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்படை முகாம் இருந்த 177...

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது நிலத்தைத் மீட்டுத் தருமாறு கேப்பாப்புலவு மக்கள் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கேப்பாப்புலவு பிள்ளையார் கோயில் முன்றலில் அக்கிராமவாசியான கணேசபிள்ளை என்பவர் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். அவரது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அக்கிராமத்தினைச் சேர்ந்த அனைத்து மக்களும் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனையை ஜனாதிபதியும் பாதுகாப்பும் அமைச்சும் கருத்தில் கொண்டு...

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் சுமார் 3700ற்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீள் கையளிக்க முடியாத தேசிய பாதுகாப்பின் மர்மஸ்தானங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுக்கு அதி கூடிய விலை கொடுக்க...

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் சாட்சியங்கள் இரண்டாவது கண்காட்சி, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. கடந்த 6 தசாப்தங்களுக்கு முன்னால் இருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய...

தற்போது நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டாம் எனவும் இக்காலநிலையானது இன்னு சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் காலநிலை மத்திய ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பகல் பொழுதுகளில் நீங்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என எண்ணினால் அதற்கு வெப்பதிலிருந்து பாதுகாப்புத் தேவை என மருத்துவ அதிகாரி லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த வெப்பமானது குழந்தைகளின் இதயம்...

நேற்று காலை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஸிகா வைரஸ் பரிசோதனை செய்யும் திட்டத்தினை சுகாதார அமைச்சர் வைத்தியர் பாலித மஹிபால அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஆரம்பித்துவைத்தார். குறிப்பாக தென் அமெரிக்காவில் ஸிகா வைரஸ் பரவிவருவதுடன் அங்கு பெரும் நெருக்கடிநிலை நிலவி வருகின்றது. இதனையடுத்து அங்கிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் ஸிகா வைரஸ் தொற்றுக்கு...

மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்ட 18வயதுடைய இளம்பெண் ஒருவர் மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, தனியார் வகுப்பு முடிந்து வீடு திரும்புவற்காக சித்தங்கேணி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த வேளை மோட்டார் சைக்கிளில் முகம் புலப்படாதவாறு தலைக்கவசத்தை முழுமையாக அணிந்து...

இலங்கையில் இடம்பெற்ற போரின் போதான சம்பவங்கள் குறித்து நம்பத்தகுந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நாவின் வழிகாட்டுதல்களுக்கு அமைய நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத விடயம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ - மூனின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்கள்...

யாரை கொலை செய்தாவது போரை முடி என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். என்னையும் மீறி கனிஷ்ட நிலை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் கட்டளையிட்டார். இதனால் தான் போர் குற்றப் பிரச்சினைகளும் வெள்ளைக் கொடி விவகாரமும் ஏற்பட்டது. என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு நாளிதழுக்கு வழங்கிய விசசேட செவ்வியில் அவர்...

450 கிராம் பாணின் விலையை நான்கு ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தீர்வுத்திட்ட வரைபை முழுமையாக்குமெனவும், அதன் பின்னர் அரசாங்கத்திற்கு கையளிக்கும் எனவும் பேரவையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த விடயம்...

"நாம் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அதனடிப்படையில், தமிழீழம் கேட்பதற்கான உரிமை எமக்குண்டு. அதனடிப்படையிலேயே ஒரு காலத்தில் நாம் தனித் தமிழீழத்தைக் கேட்டோம். இன்று ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம். இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வைக் கேட்டதும் தமிழ் மக்களே. அதிகாரப் பகிர்வை பெரும்பான்மை மக்களும் கேட்கவில்லை முஸ்லிம் மக்களும் கேட்கவில்லை....

புனர்வாழ்வு வழங்குமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் நேற்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார் என எதிர்பார்த்ததாகவும், அவ்வாறன சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால் தாம் புனர்வாழ்வு என்ற முடிவிற்கு வந்துள்ளதாகவும் தமிழ்...

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறியும் பணிகளை மேற்கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ச்சியாக பல கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், அரசாங்கம் இந்த...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றில்...

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளது.மிக விரைவில் சாட்சியின் சாட்சியம் மன்றில் பதிவு செய்யப்படும் என்று குற்ற்ப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் தோன்றிய குற்றபுலனாய்வு பிரிவினர்...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டப் பணிகளில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு நியாயமானது என்று மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். உலோகத்தில் அமைக்கப்படும் வீடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அறிக்கை ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருப்பதாகவும் அவர் ஐ.பி.சி...

வலி.வடக்கில் ஒரு தொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து உயர்பாதுகாப்பு வலைய எல்லையினை சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் பின்னகர்த்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள இராணுவத்தின் ஹொட்டல் மற்றும் துறைமுகங்களுக்குச் செல்பவர்களினை சோதனையிடும் சோதனைச்சாவடியும் இதன் போது பின்னகர்த்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள...

இறுதி யுத்தம் நடந்த சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் சிலருடன் தப்ப முயன்றனர். 2009 மே 17 ஆம் திகதி வடக்கு நந்திக்கடலூடாகத் தப்ப முயன்ற இவர்களில் பிரபாகரனும் மற்றவர்களும் திரும்பி யுத்த களத்துக்கு வந்தனர். ஆனால் பொட்டு அம்மான் வரவில்லை. இந்த விடயத்தை கே.பி....

21இலட்சம் வீட்டிற்கு பலத்த எதிர்ப்பு உண்டு. மக்களை பொறுத்த வரையில் இந்த வீட்டின் சூழல் நிலையை எங்களுடைய மக்கள் முழுமையாக பார்க்கும் போது அதனை ஏற்கமுடியாது. வீடில்லாத குடும்பத்திற்கு இந்த வீட்டைக் கையளித்து ரி.வி, கட்டில் கொடுத்தால் சரி என்று சொல்லக்கூடும். ஆனால் சமுதாயத்தில் என்ன நடக்கும். ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுத்தும் நிலையை தோற்றுவிக்கும். என...

All posts loaded
No more posts