- Saturday
- August 2nd, 2025

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, சேதமடைந்த நிலையிலான அடையாள அட்டை, கைக்குண்டு, பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி என்பவை செவ்வாய்க்கிழமை (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கரசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில்...

யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.சிசீந்திரன் இரண்டு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையில், ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிங்கள மாணவனின்...

யாழ்.பல்கலைகழக மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளதாக நேற்றிரவு செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் நேற்றிரவு வரை எவரும் கைதுசெய்யப்பட்டாத அதேநேரம் எந்நேரமும் மாணவர்கள் சிலர் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், தமிழ் சிங்கள மாணவர்களிற்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை யாழ்.மேல் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் சிங்கள மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம், சித்த மருத்துவ அலகு, வவுனியா வளாகம், விவசாய பீடம் என்பவற்றின் கற்றல் நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமாகின்றன. யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் யாழ். பல்கலைக்ககழகத்தின் அனைத்துப் பீடங்களும் கடந்த திங்கட்கிழமை முதல் இயங்கவில்லை. இந்நிலையில் விஞ்ஞானபீடம், கலை, வணிக பீடங்களின் கற்றல் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும்...

காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைப் பொலிஸார் வேலிகளை அமைத்து மக்கள் பாவனைக்கு அனுமதி மறுத்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "காணிகளைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்த எம்மை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் பணித்தனர். மீறி நின்றால் கைதுசெய்வோம் என்றும் எச்சரித்தனர்'' என்று மக்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் 25ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வலி.வடக்கில் 201 ஏக்கர்...

யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்ததைப்போன்று ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மோதல்கள் இடம்பெறக்கூடும் என அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பல்கலைக்கழக மானியங்களின் தலைவர் பேராசிரியர் மெகான் டி சில்வா. இது தொடர்பாக அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கலைப்பீட மாணவர்கள்தான் மோதலை ஆரம்பித்தனர். இதனையடுத்து கடந்த சனிக்கிழமையிலிருந்து பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்காக அவர்கள்...

எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையிலெடுக்க முடியாது எனவும், யாழ்ப்பாண சம்பவம் தொடர்பில் சட்டத்தை பிழையின்றி செயற்படுத்தவுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக மோதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்திக்க நேற்று அமைச்சர் தேசிய வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இங்கு மேலும் கூறியதாவது,...

கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இன்று முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்னம் ஆகியோர் உட்பட மாணவர்களும் குறித்த...

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதலுக்குக் காரணமான மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார். “இந்தச் சம்பவம் தொடர்பான சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மோதலில் தொடர்புடைய மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கான, ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு யாழ்....

யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் ஆட வேண்டும் என கோரும் சிங்கள மாணவர்கள், ருகுணு பல்கலைக்கழகத்திலும், பேராதனை பல்கலைக்கழகத்திலும் தமிழ் மரபு கலாசார நிகழ்வுகளை அனுமதிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ். பல்கலைக்கழகத்தில் இராணுவத்தின் துணையுடனேயே கண்டிய நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின்...

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால் அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு கடந்த 16.07.2016இல் விஞ்ஞானபீட சிரேஸ்ட மாணவர்களால் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. வரவேற்பு உபசார விழா நடத்துவது வழமையானது. இந்தநிலையில் நிகழ்ச்சி நிரலில் மாற்றம்...

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில், மாணவியின் தாயை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் தாயார் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். மகாலிங்கம் தவநிதி என்பவரே உயிரிழந்த பெண்ணாவார். கடந்த மே மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு...

தமிழர்களின் தேசிய பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைத்துவிடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளதுடன் இந்நடவடிக்கையைக் குழப்ப முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ முயன்று வருவதால் தமிழ்மக்களை நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவது, தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது ஆகிய...

நேற்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் வைத்து சிங்களவர்களால் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, நேற்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில், முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனம், கதிர்காமம் ஏழுமலைக்குச் செல்லும் வாகனத்திற்கு முந்திச்செல்ல இடம்கொடுக்கவில்லையென இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது,...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, காயமடைந்த மாணவர்கள் தொடர்பிலும், முன்னெச்சரிக்கையாக சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை தொடர்பாகவும் தாம் கவலையடைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சமூகத்துக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாக மாத்திரமே...

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து கவலையடைவதாக அப் பல்கலைக்கழகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் - யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்ற கையெழுத்துடன் குறித்த ஊடக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்...

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரைணை மேற்கொள்ள தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தி அரியரட்ணம், பீடாதிபதிகள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு இடையில் நேற்றை மோதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழத்திற்கு முன்னால் மற்றும்...

யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையிடப்பட்ட சுமார் 70 இலட்சம் பெறுமதியான நகைகளை கைப்பற்றியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ணவின் வழிநடத்தலில் யாழ்...

All posts loaded
No more posts