- Thursday
- January 1st, 2026
இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனினும், இது நல்லிணக்கத்துக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். "யுத்தம் நடந்தது...
தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணைத்தலைவர் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தலைமையில் கூடவுள்ளது. வட கிழக்கு இணைந்த, சுயாட்சியடிப்படையிலான ஒரு சமஷ்டி முறைத்தீர்வு தமிழ்த்தலைமைகளால் உறுதியளித்தபடி 2016 ஆம் ஆண்டிற்குள் வருவதற்கான எந்த ஒரு அடிப்படையும் அற்ற ஒரு வெறுமை நிலையில், உள்ளக விசாரணையில்...
வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் குடித்தொகை குறைந்துவருவது உண்மைதான் எனினும் தெற்கில் தமிழ்மக்களின் தொகை அதிகரித்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி, மாத்தளை பகுதிகளில் தமிழர்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். விகிதாசார தேர்தல் முறைமையின் விளைவாக வடக்கில் அதிகமான தமிழர் பிரதிநிதித்துவங்களும் தெற்கில் அதிகமான சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாகின எனவே சுமூகமான...
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் கடந்த 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பந்தமான வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இருந்து யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபரினால் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து சட்டமா அதிபர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதிக்கு 04.07.2016...
யாழ்.நகரை அண்மித்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று பட்டப்பகலில் வாள்கள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் கும்பல் ஒன்று மாணவர்கள், ஆசிரியர்களை கடுமையாக அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. பாடசாலையில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது. இந்நிலையில் மோதலுடன் சம்பந்தப்பட்ட ஒரு மாணவர் குழுவே மற்றைய குழு மீது...
நீண்டகாலம் நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வைக் காண்பதற்கு நாம் பொறுப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோனிடத்தில் தெரிவித்துள்ளார். எமது அடிப்படை அபிலாஷைகளை அடையக்கூடிய வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாகவிருந்தால் எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அவரிடத்தில் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித்தலைவர்...
தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் மக்கள், தரங்கெட்டு வாழ்வதற்கு இடமளிக்கக் கூடாதென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடி மேற்கில் அமைந்துள்ள சரஸ்வரதி சனசமூக நிலையத்தின் புதிய கட்டிட திறப்புவிழா, இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- ”போரானது எம்மை...
வடக்கில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக போராடி இரண்டினை தற்போது நாம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். வவுனியா நகரிலும் மாங்குளத்திலும் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவிலும் மாங்குளத்திலும் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இது குறித்து கிராமிய...
மற்றுமோரு வழக்குத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட உள்ளார். நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்றைய தினம் உத்தரவிட்டிருந்தார். கவர்ஸ் கோர்பிரேசன் என்ற நிறுவனத்தின் தலைவராகக் கருதப்படும் நாமல் ராஜபக்ஸ ஹலோ...
வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியா ஓமந்தையில் அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைப்பது என்பது தொடர்பான சர்சை நீடித்து வந்த நிலையிலலேயே இதற்கு முடிவு எடுக்கப்பட்டுளள்ளதாக அமைச்சரை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் மாநாடு...
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க நவீன உத்திகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது...
மகாவலி திட்டத்தின் ஊடாக வெளிமாவட்டங்களிலிருந்து சிங்கள மக்கள் வடமாகாணத்திற்குள் மீள்குடியேற்றப்படலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அச்சம் வெளியிட்டுள்ளார். மகாவலி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நீர் கொண்டு வருவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெய்கா நிறுவனம், மாவலி அதிகார சபை, நீர் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் அதிகாரிகள்...
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனோர்கள் எனக் கூறப்படும் 16,000 பேரின் நிலமை என்ன? எனவும், அவர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியிடப்படவேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் 14 மாதங்களாக மேற்கொண்ட ஆய்வின் பின்னரே செஞ்சிலுவைச் சங்கம் குறித்த அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் வெளியிட்டுள்ளது. 34...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு மாணவர்களுக்கு யாழ் நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செப்டம்பர் மாதம் 01ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் எஸ். சதீஸ்குமாரினால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தகவல்களுக்கமைய இந்த நோட்டீஸ்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கத் தேவையில்லையெனவும் பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்....
யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மேலும் 3 தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சிங்கள மாணவன் பதிவு செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார் இவ்வாறு தமிழ் மாணவர்களை கைது செய்வது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கள மாணவர் முதலில் 3 தமிழ் மாணவர்கள்...
நண்பரை, அடித்துக் கொலை செய்த சுன்னாகம் பொலிஸார், அந்தக் கொலையை தற்கொலையாக மாற்றி, மரணச் சான்றிதழ் வழங்கினர்' என, சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர்கள், மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (25), பரபரப்புச் சாட்சியம் வழங்கியுள்ளனர். 'உனக்கு தனி நாடு தேவையா?' எனக்கூறி நண்பரை அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்த சந்தேகநபர்கள், நண்பனைக் கொலை செய்ததாகக்...
பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து சட்ட ரீதியான நீதி கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் இன்னமும் செல்லவில்லை என சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிய போதிலும் சிங்கள மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை என பல்கலைக்கழகத்தின் சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் எஸ்.துசார என்ற மாணவர் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர்...
யாழ் பல்கலைக்கழக மோதலுடன் தொடர்புடைய தமிழ் மாணவர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சிங்கள பௌத்த தீவிர அமைப்பான ராவணா பலய அமைப்பு யாழ்.பல்கலைக்கழக சூழல் தொடர்பில் ஆராய யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளதாக தெரியவருகின்றது. பகிடிவதை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்பகுதியிலுள்ள பல்லைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில்...
Loading posts...
All posts loaded
No more posts
