- Saturday
- August 2nd, 2025

யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மேலும் 3 தமிழ் மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சிங்கள மாணவன் பதிவு செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிஸார் இவ்வாறு தமிழ் மாணவர்களை கைது செய்வது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கள மாணவர் முதலில் 3 தமிழ் மாணவர்கள்...

நண்பரை, அடித்துக் கொலை செய்த சுன்னாகம் பொலிஸார், அந்தக் கொலையை தற்கொலையாக மாற்றி, மரணச் சான்றிதழ் வழங்கினர்' என, சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர்கள், மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (25), பரபரப்புச் சாட்சியம் வழங்கியுள்ளனர். 'உனக்கு தனி நாடு தேவையா?' எனக்கூறி நண்பரை அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்த சந்தேகநபர்கள், நண்பனைக் கொலை செய்ததாகக்...

பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து சட்ட ரீதியான நீதி கொள்கை விடயங்களை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் இன்னமும் செல்லவில்லை என சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிய போதிலும் சிங்கள மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை என பல்கலைக்கழகத்தின் சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் எஸ்.துசார என்ற மாணவர் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர்...

யாழ் பல்கலைக்கழக மோதலுடன் தொடர்புடைய தமிழ் மாணவர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சிங்கள பௌத்த தீவிர அமைப்பான ராவணா பலய அமைப்பு யாழ்.பல்கலைக்கழக சூழல் தொடர்பில் ஆராய யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளதாக தெரியவருகின்றது. பகிடிவதை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்பகுதியிலுள்ள பல்லைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில்...

இலங்கை அரசின் முழுமையான அணுசரனையுடன் 33 வருடங்களுக்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையின் அதி உச்சகொடூரங்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் போது இடம்பெற்ற வெலிகடை சிறைச்சாலை படுகொலை நாள் இன்று தமிழர்களால் மிக உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்த ஸ்ரீலங்கா...

யாழ் பல்கலைக்கழக மோதலுடன் தொடர்புடைய தமிழ் மாணவர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்படாதது குறித்து சிங்கள பேரினவாத அமைப்பான ராவணா பலய என்ற அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. பகிடிவதை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்பகுதியிலுள்ள பல்லைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கள அப்பாவி மாணவர்களை தாக்கி காயப்படுத்திய...

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலமைந்துள்ள 1500 ஏக்கர் காணிணை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி நேற்று (சனிக்கிழமை) அப்பிரதேசங்களுக்குப் பயணம் செய்து குறித்த பகுதிகளைப் பார்வையிட்டார். அத்துடன் மீள் குடியேற்றத்திற்காக காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்கருகில் இராணுவத்தினரால் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீடுகளையும் பார்வையிட்டுள்ளார். பலாலி உயர் பாதுகாப்பு...

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாகாண அரசாங்கம் இயங்கமுடியாது என உலக வங்கியின் அலுவலர்களிடம் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு மனோநிலை இல்லையாயின் பணியை சரிவர முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் அலுவலர்களான பீற்றர் டி எலிஸ், ஜெசிக்கா ரசல் ஸ்மிற், யென்...

சிறைச்சாலையை நிரப்பும் செயற்பாட்டில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என கேள்வி எழுப்பி கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆசிரியரோ மாணவரோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் மாணவர்கள் மீது குற்றச் செயல்கள் புரிவதாக தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இது உடனடியாக நிறுத்தப்பட...

தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும்வரை தமது பிள்ளைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்போவதில்லையென சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் சிங்கள மாணவர்களின் பெற்றோர் சிலர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த பெற்றோர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கை தமக்குத் திருப்பதியளிக்கவில்லை. பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கும் பரிந்துரைகளுக்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகத் தீர்மானிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவம் நேற்றைய தினம் (வியாழக்கிமை) நாடாளு மன்றத்தில் விசாரணைக்கெடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன்...

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்துவரும் மக்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி 31 முகாம்களில் வசிக்கும் 971பேர் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அண்மையில் காணி இல்லாதோருக்கு வழங்கப்பட்டுள்ள காங்கேசன் துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்கு அண்மையில்...

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.ரிசிதரன் சிங்கள மாணவர்கள் நான்குபேருக்கு எதிராக கோப்பாய்ப் பிரதேச காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், மாணவர் ஒன்றியத் தலைவர் ரிசிதரனை நேற்றைய தினம் கோப்பாய் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இதனையடுத்து ரி.ரிசிதரனை 2,00,000 ரூபா பிணையில் செல்வதற்கு சின்னத்துரை...

யாழ்ப்பாண பல்கலைக்கழக நிலைமைகள் வழமைக்குத் திரும்பவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக கூறிய போதிலும் உண்மையில் இயல்பு நிலை ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்....

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்தமானது என்று ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப்பட்டு விட்டாலும் சில சுயநலன் சார்ந்த சக்திகள் மேலும் குழப்பங்களையும், இழுபறியையும் உருவாக்கிய வண்ணம் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறாயினும் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக தாம் இருப்பதாகவும்...

ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலில் தனக்குத் தெரிந்த தமிழினியைக் காணவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். அந்த நூலில் அவரால் கூறப்பட்டவைகள் எனச் குறிப்பிடப்பட்டிருப்பவைகளுக்கும் அவர் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கைக்கும் வேறுபாடு உள்ளதாகவும் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார். முன்னாள் அரசியல் துறைப் போராளி வெற்றிச்செல்வி எழுதிய பம்பைமடு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புகூறல் ஆகியன இரண்டும் சமாந்திரமாக...

யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடாமல் வடக்கு மற்றும் தெற்கிலுள்ள சில இனவாதிகள் அதனை மேலும் குழப்புவது எவ்வாறு என ஆராய்வதாக, வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நல்லிணக்க கொள்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் வடுக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரான மகாலிங்கம் தவநிதி என்பவரின் மரண சடங்கில் கலந்துகொள்ள மற்றைய சந்தேகநபர் மற்றும் வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் இருவருக்கும் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சபேசன் அனுமதியளித்துள்ளார். வித்தியாவின் வழக்கு விசாரணை ஊர்காவல்துறை...

All posts loaded
No more posts