Ad Widget

யாழ். பல்கலைக்கழக மோதல்; ஏழு மாணவர்களுக்கு நோட்டீஸ்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு மாணவர்களுக்கு யாழ் நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செப்டம்பர் மாதம் 01ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் எஸ். சதீஸ்குமாரினால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தகவல்களுக்கமைய இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மோதலில் காயமடைந்த மாணவர்கள் வழங்கிய வாக்குமூலம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ காட்சிகளுக்கு அமைவாக சந்தேகத்திற்குறிய மாணவர்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

இதுதவிர சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுடன் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், குறித்த மாணவனுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts