5ஆம் திகதி இலங்கை ழுழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம்!

சயிட்டம் நிறுவனம் தொடர்பான பிரச்சினையை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கை ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கையில் சுகாதார, கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளிலுள்ள தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்கின்றது: கஜேந்திரன்

கல்வித் துறையில் சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்வதாகவும் வடக்கு – கிழக்கு அரச நிர்வாகங்களிலே சிங்கள மேலாதிக்கம் வளர்ந்து செல்வதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சாவகச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...
Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பிரகடனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பிரகடனம் 2017.05.01 (ஆலையடி வேம்பு தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானம்)   ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் 30/01, 34/01 ஆகியவற்றில் இலங்கையும் பெறுப்பேற்றுக் கொண்ட விடயங்கள் அனைத்தும் முழுமையாகத் துரித கதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்குக்...

வடக்கும் கிழக்கும் இணைந்தாலேதமிழ் பேசும் சந்ததி காக்கப்படும்

“இந்த நாடு முன்னேற வேண்டுமானால், நிலையானதும் நீதியானதுமான தீர்வு, அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அது, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையானது. அதன் மூலமே நாடு, அபிவிருத்தி அடையும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். “தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, வடக்கு, கிழக்கு...

நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்

நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி - கெட்டம்பே பகுதியில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சுதேசவாத சிந்தைனையுடன்,...

விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கிறது : ஐங்கரநேசன்

விடுதலைப்புலிகள் யுத்தத்தில் மாத்திரம் ஈடுபடவில்லை. கல்வி வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை காட்டினார்கள். இதனாலேயே பல்கலைக்கழகம் ஒன்றுக்குரிய கட்டுமானங்களை உருவாக்கும் நோக்கில் அறிவியல் நகரை உருவாக்கி கட்டிட நிர்மாணப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார்கள். இப்போது அறிவியல் நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடம் இயங்கி வருகிறது. நாங்களும் பண்ணையாளர்களுக்கும், எமது கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அறிவூட்டும் நோக்கில் பிராந்திய கால்நடை...

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகளை கட்சியில் இணைக்க இலங்கை தமிழரசுக் கட்சி முடிவு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை தமது கட்சி அரசியலில் இணைத்துக் கொள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சி என கருதப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மட்டக்களப்பு நகரில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னாள் விடுதலைப்புலி போராளிகளின் புனர்வாழ்வு , வாழ்வாதாரம்...

பேச்சுவார்த்தைக்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அரசிடம் பகிரங்க வேண்டுகோள்

எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் மனந்திறந்து பேச விரும்புகிறோம். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (சனிக்கிழமை) 69ஆவது றாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய போராட்டத்தில்...

யாழில் திருட்டு நகைகளில் பங்கு பெற்ற போலீசார் கைது!

திருட்டு நகைகளில் பங்கு பெற்ற யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் , நீதிவான் ஒருவருக்கும் பங்கு கேட்டமையால் , பங்கு பிரிப்பில் தகராறு ஏற்பட்டு, காவல்துறையினரிடமே அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது தொடர்பில் தற்போது பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அது தொடர்பிலான தீவிர விசாரணைகளில்...

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டன

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து...

மாயக்கல்லி விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: சிறுபான்மை தலைவர்களிடம் ஜனாதிபதி உறுதி

நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் மாயக்கல்லி மலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்த உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில்...

“முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் எனது பிள்ளையை பேருந்தில் ஏற்றியதைக் கண்டேன்”: தாயொருவர் சாட்சியம்

“அரசாங்கத்தை நம்பி இராணுவத்திடம் ஒப்படைத்த எமது பிள்ளைகளைப் பற்றிய தகவல்களை விரைவில் வழங்கவேண்டும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 68ஆவது நாளாக (வெள்ளிக்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே இவ்வாறு...

இழந்த அதிகாரங்களை பெறுவதற்கு சுயநலவாதிகள் சதி: சம்பந்தன் குற்றச்சாட்டு

இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், சட்டரீதியாக மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தைக் குழப்புவதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். மீதொட்டமுல்ல பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் விடுதலை!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் இருவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் மற்றும் 12 ஆவது சந்தேகநபரான சுரேஸ்கரன் ஆகிய இருவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து...

கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்றி

நேற்றய முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்ப தந்த பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள் கல்விச் சமூகம், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் நேற்ற வடக்கு கிழக்கில் அனைத்துச் செயற்பாடுகளும் செயலிழந்து...

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் வெற்றி: சுரேஸ் பிறேமச்சந்திரன்

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு மற்றும் ஹர்த்தாலை மக்கள் வெற்றி பெறச்செய்துள்ளனர் எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த போராட்டத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர் தாயக பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு,ஹர்த்தால் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே...

A9 வீதியை வழி மறித்து போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும்” என, தெரிவித்து உறவினர்களால் குறித்த போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் 67ஆவது நாளாக நேற்றம் முன்னெடுக்கப்பட்டது. 67 நாட்கள் ஆகியும் அரசாங்கம் தீர்வு எதனையும் வழங்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஏ-9 வீதியை வழி...

முப்படைகளின் உயர்பொறுப்பை ஏற்க பொன்சேகாவுக்கு அழைப்பு

நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படைகளில் அதியுட்ச பொறுப்பை ஏற்பதற்கு முன்னாள் இராணுவ தளபதியும் பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதற்கான அதிகாரங்களுடன் உரிய பதவியை வழங்கினால் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சரத் பொன்சேகா சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன...

வட பகுதிக்கான தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் நாளைய தினம் முடக்கம்

வட பகுதிக்கான தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் நாளைய தினம் முடக்கப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உபதலைவர் எஸ்.ரி. இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தென்பகுதியில் இருந்துவரும் பேரூந்துகள் அனைத்தும் வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரியும் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை அரசு வெளிப்படுத்தக்கோரி, அதற்கான...

தமிழர் தாயகமெங்கும் கருக்கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தாயகம் தழுவிய மக்கள் போராட்டமாக பரிணமிக்கவேண்டும் : தமிழ் மக்கள் பேரவை

பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படவர்களின் உறவுகளும் , இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்த மக்களும்,தமது கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் தமது கோரிக்கைகளை வெளியுலகுக்கு வெளிபடுத்தவும் , வடக்கு கிழக்கெங்கும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். மக்கள் அணிதிரள்வுப்போராட்டங்கள் , எமக்கான நீதிக்கான ஒரு காத்திரமான செயன்முறை , என்பதில் தமிழ் மக்கள் பேரவை ஆழமான நம்பிக்கை...
Loading posts...

All posts loaded

No more posts