தமிழ் அரசியல் கைதியொருவர் விடுதலை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர், 18 வருடங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனகரத்தினம் ஜீவரட்னம் என்ற குறித்த அரசியல் கைதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எவ்வித வழக்கு விசாரணைகளும் அற்ற நிலையில், கடந்த 18 வருட காலமாக இவர் தடுத்துவைக்கப்பட்டிருந்ததோடு, ஆரம்பத்தில் திருகோணமலை...

திருநெல்வேலி வைத்தியசாலையில் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்புக்கு

யாழ். திருநெல்வேலியிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டபோது, கண்ணில் கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரில், ஐந்து பேரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை கண்புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்கள் ஒன்பது பேர், கிருமித் தொற்று...
Ad Widget

மணியந்தோட்டம் விவகாரம்; யாழுக்கு விரைகிறது கொழும்புக் குழு

யாழ்ப்பாண மணியந்தோட்டம், உதயபுரம் பகுதியில் இளைஞன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளனர். இந்த குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவால் நியமிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மணியந் தோட்டம், உதயபுரம் பகுதியில், அடையாளம் தெரியாத சிலர்,...

இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடிக்குமானால் கடுமையான சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும் என ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக்...

அரசியல் கைதிகள் விவகாரம்: மகசீன் சிறைச்சாலை கைதிகளும் உண்ணாவிரதம்

இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒரு மாத காலமாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்...

யாழ். இளைஞன் கொலை: உடலை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு!!

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் காணப்படுகின்றது. கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை பொறுப்பேற்க போவதில்லையென உறவினர்கள் தெரிவித்ததை அடுத்தே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இளைஞனது சடலம் வைக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, உதயபுரம் முதலாம்...

சுட்டுக்கொல்லப்பட்டவருடன் சென்றவர் வெளியிட்டுள்ள தகவல்!

யாழ்ப்பாணம் அரியாலை உதயபுரம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் மரணமடைந்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் சம்பவம் இடம்பெற்றபோது அவருடன் கூடவே சென்ற மற்றுமொரு இளைஞர் அது...

தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்கும் சூழ்ச்சியில் கூட்டமைப்பு : சுரேஸ்

தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்கும் அரசின் சூழ்ச்சிக்கு, கூட்டமைப்பினர் சிலர் துணைபோவதாக, ஈ.பி.ஆர்.எல.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரமேச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டமைப்பு என்கின்ற பேரில், தமிழரசு கட்சி தான்தோன்றித்தனமாக செயற்பட்டு, இவ்வாறான விடயங்களைக் கையாள்வதாகவும் அவர் கூறினார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர்...

அபாய நிலையில் அரசியல் கைதிகள்

அனுராதபுரம் சிறையினில் 28 வது நாளாக உண்ணாவிரதத்தினில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் மூவரது உடல்நிலை மீண்டும் மிகமோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மூவரும் பலாத்காரமாக சிறை அலுவலர்களால் வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கு சேலைன்கள் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது பேசும் தகவு பெரும்பாலும் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரியாலை துப்பாக்கிச் சூடு : இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம் அரியாலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது. நேற்று இரவு 09.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரியை மேற்கோள் காட்டி தகவல் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதிக...

யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்படவர்களின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!

தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவத்தினரால், யாழ் போதனா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (சனிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி நினைவுச்சுடர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து வைத்தியசாலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆகியோர் உயிரிழந்தவர்களின்...

காணாமல் போன பிள்ளைகளுடன் ஜனாதிபதி வருவார்! :உறவினர்கள் நம்பிக்கை

வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை அழைத்து வந்து தம்மிடம் ஒப்படைப்பாரென எதிர்ப்பார்ப்பதாக உறவினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காய் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், நேற்று (வெள்ளிக்கிழமை) 239 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் வவுனியாவுக்கு விஜயம் செய்யும்...

யாழ். பல்கலைக்கழக சமூகத்திற்கு, பூட்டிய சிறையில் இருந்து ஓர் அன்புரிமை வேண்டுகோள்!

தமது விடுதலைக்கான பெரும் பொறுப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பொறுப்பெடுக்கவேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் யாழ் பல்கலைக்கழக சமூகத்துக்கு கண்ணீர்க் கடிதம் அனுப்பியுள்ளனர். “யாழ். பல்கலைக்கழக சமூகத்திற்கு, பூட்டிய சிறையில் இருந்து ஓர் அன்புரிமை வேண்டுகோள்!” எனத் தலைப்பிட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் கல்விசாரா ஊழியர்...

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோரின் ஒரு வருட நினைவுதினம், இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந் நினைவுதின நிகழ்வில், இவ்விரு மாணவர்களுக்கும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில், சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன்,...

தவறான அரசியல் தீர்மானமே பிரபாகரனை உருவாக்கியது: ஜனாதிபதி

தேவையான நேரத்தில் சரியான தீரமானங்களை எடுக்கத் தவறியதாலேயே இன முரண்பாடுகள் ஏற்பட்டன. அவ்வாறான தவறான அரசியல் தீர்மானங்களே விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கியதென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து...

நீதியமைச்சர் நாடுதிரும்பியதும் நல்ல முடிவாய் சொல்கிறேன் : கைதிகளின் உறவினர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

நீதியமைச்சரும் , சட்டமா அதிபரும் நாட்டில் இல்லாமையினால் அவர்கள் நாடு திரும்பியதும் அவர்களுடன் கலந்துரையாடி நல்லதொரு முடிவினை கூறுவதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளதாக ஜனாதிபதியுடன் சந்திப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி , நேற்று (19) மதியம் 12.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்று...

ஜனாதிபதியின் பதில் திருப்தியில்லை : வகுப்புக்களைப் புறக்கணிக்கிறனர் யாழ் பல்கலை மாணவர்கள்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (19) வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் அரசியல் கைதிகள் விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராடப்போவதாக அறிவித்துள்ளனர். நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது வழமைபோல கால அவகாசம் கோரிய...

யாழில் 5ஆயிரம் பேருக்கு டெங்கு!! : நால்வர் உயிரிழப்பு !

யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு 4ஆயிரத்து 999 பேர் உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், இந்த வருடத்தில் 4பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளனர் எனவும் யாழ்.மாவட்ட சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.குடாநாட்டில் உள்ள 14 பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகள் பிரிவின் கீழ் டெங்கு நோய் பரவியுள்ளன. மூன்று நாட்களுக்கு மேல்...

யாழ். ஆவரங்காலில் பட்டப்பகலில் கத்திக் குத்து

யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியில் வைத்து, நபரொருவர் மீது மர்ம நபர் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (19) காலை பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆவரங்கால் சர்வோதயா வீதியில், உள் வீதிக்கு வந்த இருவர் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் குறித்த நபர் மீது சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில், ஆழமான...

முள்ளிவாய்க்காலில் கொத்துக்குண்டுகள்! : மற்றுமொரு ஆதாரம் வெளியீடு

பாரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்ட கொத்துக் குண்டுகளை இலங்கை ராணுவத்தினர் இறுதிக்கட்ட போரின் போது பயன்படுத்தியதாக ஏற்கனவே பல ஆதாரங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுகுறித்த புகைப்பட ஆதாரமொன்று வெளிவந்துள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரான பிரான்ஸிஸ் ஹரிசன் (Frances Harrison), தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts