Ad Widget

அரசாங்கம் இழைத்துவரும் துரோகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை!

நாட்டில் அரசாங்கம் இழைத்துவரும் துரோகத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைரான, பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில், இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“நாட்டில் அரசாங்கம் செய்து வருகின்ற துரோகச் செயல்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் துணை போகின்றன. எங்களது பொருளாதாரத்தை வெளிநாடுகள் கையில் எடுப்பதற்கும் சுதந்திரத்தை சீர்குலைப்பதற்கும் அவர்கள் துணை போகிறார்கள்.

எதிர்க் கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கும் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதற்குத் துணை போகிறார்கள். இவ்வாறானதொரு எதிர்கட்சி வேறொரு நாட்டிலும் இல்லை. நாட்டு மக்களுக்கு இந்த அரசு இன்று வேண்டாம் என்று ஆகிவிட்டது. சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தபோது, சிங்களம், தமிழ் இரண்டும் அரச மொழிகளாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது எமது கட்சியேயாகும்.

இலங்கையில், யுத்த மீறல்கள் இடம்பெற்றிருந்தால் எமது நாட்டுக்குள் எமது நீதிமன்றமே நேரடியாகப் பார்த்து குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அதுவே சர்வதேச நீதியாகும். அதனைச் செய்யாமல் ஐ.நாவில் சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.

எம்மை நோக்கி, குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை ஆகியன கை நீட்ட இடமளித்திருக்கிறது இந்த அரசாங்கம். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் துணை போகிறது” எனத் தெரிவித்தார்.

Related Posts