- Tuesday
- September 15th, 2026
வடமாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு இன்றைய தினம் மின்சாரம் தடை ஏற்படும் என மின்சார சபையின் வடமாகாணப் பிரதி பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். வடக்கில் கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சார பராமரிப்பு தொடர்பிலான புனரமைப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை...
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் டொன் பொஸ்கோ என்ற இளைஞன் படுகொலைச் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அங்கு விசேட அதிரடிப்படையினர் இருந்தமைக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது தொலைபேசிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த இரு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்தமை...
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் அருகே இன்று முற்பகல் 11.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அபகரித்துச் செல்ல முயன்ற போது அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து நையப்புடைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாது, இன்று முற்பகல் 11.30 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம்...
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(சனிக்கிழமை) வாக்குமூலம் பெற்றுள்ளனர். வித்தியா கொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பிக்க உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு எதிரான வழக்கு தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம்...
மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தை நிரந்தமாகத் தடை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் உத்தரவிட்டார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய குற்றச்சாட்டில் சாரதியை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சாரதியின் ,...
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி டொன் பொஸ்கோ (வயது-24) என்ற இளைஞன், இனந்தெரியாதோரால் சுட்டு...
மட்டக்களப்பு,ஏறாவூரில் இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மிருசுவில் வடக்கு கொடிகாம் , யாழ்ப்பானம் எனும் முகவரியை சேர்ந்த ஒருவரையும் , சவுக்கடி தன்னாமுனை எனும் முகவரியை கொண்ட முச்சக்கர வண்டி சாரதி...
கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த செல்வதுரை கிருபாகரன் என்பவருக்கு, இன்று (புதன்கிழமை) இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான சுனில் தாப்ரூ என்பவரை சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது குறித்த...
யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் சந்தியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சிறப்பு அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டனர். யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமில் இருந்தே நேற்று இரவு இவை மீட்கப்பட்டன. கடந்த...
யாழ்ப்பாணம் கண்டி வீதியில் மடத்தடி சாந்தி பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்களையும் 14 நாள்களுக்கு சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் தடுத்து வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் கட்டளையிட்டார். யாழ்ப்பாண காவல்துறையினர் நேற்றிரவு 10 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மடத்தடிப்பகுதியில் , நின்ற சிலர் காபவல்துறையினரின் வாகனத்தை கண்டு சிலர் தப்பியோடியுள்ளனர். அவர்களை...
யாழ். மடத்தடி வீதியில் வாள்களுடன் நின்ற 4 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பொலிஸார் நேற்று (30.10) இரவு 11 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் 4 இளைஞர்கள் வாள்களுடன் வீதியில் நின்றுள்ளனர். 4 பேர்களிடமும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரும் யாழ்.மடத்தடி...
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு அரசியல் வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேல் மாகாண உள்ளூராட்சி மன்றமொன்றின் முன்னாள் உறுப்பினர் மற்றும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஆகியோர் தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு பேணுவதாகவும், நாட்டின்...
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நவம்பர் மாதம் 13ஆம் திகதவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. கொலைச் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை. இந்த நிலையிலேயே சந்தேகநபர்களின் விளக்கமறியலை...
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விஷேட அதிரடிபடையினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வந்த விஷேட விசாரணைக் குழுவொன்றே நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஏற்பாட்டிலேயே கடந்த வியாழக்கிழமை குறித்த விசேட குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். அரியாலை கிழக்கு...
களுத்துறைச் சிறைச்சாலையில் தன்மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின்போது குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதுவிடயம் தொடர்பாக தாம் நீதிமன்ற விசாரணைகளின்போது இனங்காணப்பட்ட குறித்த குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை முன்னர்...
முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 06 பேருக்கு 10 1/2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...
வடமாகாண சுகாதார அமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட...
அரியாலை உதயபுரம் பகுதியில் இளைஞன் ஒருவரை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம், மண்டைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு அடிரடியாக தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்ற அனுமதியுடன், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் குறித்த கடற்படை முகாமிற்குள் சென்ற விசேட பொலிஸ் குழுவினர் முகாமை சோதனையிட்டுள்ளனர்....
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுக் குழுவின் கொட்டத்தை அடக்க, பொலிஸ் விசேட குழுவொன்று களத்தில் இறங்கியுள்ளது. சுமார் 10 பேரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக் குழு, வடக்கின் பல பகுதிகளிலும் ரகசிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் சிறிது காலம் வாள்வெட்டு கலாசாரம் ஓய்ந்திருந்த போதும், தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது....
16 வயதுக்கு குறைந்த பிள்ளையை காதலித்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வித்தித்து தீர்ப்பளித்துள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன் 2011 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
