Ad Widget

அரியாலை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கி, ஓட்டோ, மோ.சைக்கிள் அதிரடிப்படை முகாமுக்குலிருந்து மீட்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் சந்தியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சிறப்பு அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டனர்.

யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமில் இருந்தே நேற்று இரவு இவை மீட்கப்பட்டன.

கடந்த மாதம் 22 ஆம் திகதி யாழ். அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் சிவில் உடையில் வந்த தாயுத்தாரிகளால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

Related Posts