Ad Widget

அரியாலை இளைஞனின் படுகொலை விவகாரம்: விஷேட அதிரடிபடையினரிடம் விசாரணை

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விஷேட அதிரடிபடையினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வந்த விஷேட விசாரணைக் குழுவொன்றே நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஏற்பாட்டிலேயே கடந்த வியாழக்கிழமை குறித்த விசேட குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 25 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். பொலிஸாரே இத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக, கொலையுண்ட இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அவரது நண்பன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். எனினும், பொலிஸ் தரப்பு இதனை மறுத்துள்ள நிலையில், மூன்று விசேட குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts