Ad Widget

வாள்வெட்டுக் குழுவை வளைத்துப்பிடிக்க விசேட குழு!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுக் குழுவின் கொட்டத்தை அடக்க, பொலிஸ் விசேட குழுவொன்று களத்தில் இறங்கியுள்ளது.

சுமார் 10 பேரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக் குழு, வடக்கின் பல பகுதிகளிலும் ரகசிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் சிறிது காலம் வாள்வெட்டு கலாசாரம் ஓய்ந்திருந்த போதும், தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் நூற்றிற்கும் அதிகமானோர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்தோடு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இக்குழுவினரை கைதுசெய்யும் வகையில், பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts