Ad Widget

யுத்தத்தால் நானும் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையில் உங்கள் வேதனைகளை அறிவேன் -அங்கஜன்

மாதகல் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன. (more…)

தமிழர் அடையாளத்தை அழிக்க அரசு முயற்சி: நவநீதம்பிள்ளையிடம் விளக்குவோம் – மாவை

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு அரசாங்கம் எங்களை அந்நியப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)
Ad Widget

முன்னாள் நீதியரசரே தேர்தல் சட்டவிதிகளை மீறினார் – சி.தவராசா

வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியினால் முன்னிறுத்தப்பட்ட முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐ.ம.சு.முன்னணி முதன்மை வேட்பாளர் சி.தவராசா தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். (more…)

வடக்கில் இராணுவ பிரசன்னத்தால் மக்கள் பேசுவதற்கே அஞ்சுகின்றனர்: விக்னேஸ்வரன்

வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னமானது கூட்டமைப்பின் பிரசாரத்திற்கு பெரும் தடையாக உள்ளது. நாம் பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் எம்முடன் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். (more…)

எழுத்து மூலமான முறைப்பாடுகளுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்: மகிந்த தேசப்பிரிய

எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள், எழுத்து மூலமாக அளிக்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். (more…)

அரச ஆதரவு கட்சி கூட்டமைப்பு என கூறி தேர்தல் பிரச்சாரம் – சுரேஷ் பிரேமசந்திரன்

ஜனநாயக நாட்டில் தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்காது. இராணுவ ஆட்சி உள்ள நாடுகளிலேயே தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். (more…)

தபால் மூல வாக்காளர்களின் வாக்கு சிட்டுக்கள் அனுப்பி வைப்பு

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர். (more…)

வடக்குத் தேர்தல் குறித்து கனடா அதிக கவனம் செலுத்துகின்றது!

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கனேடிய அரசும் கவனத்தைச் செலுத்துவதாக அந்நாட்டுத் தூதுரகத்தின் அரசியல் ஆலோசகர் மேகன் பொஸ்ரர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். (more…)

என்னை அடிபணிய வைக்க முடியாது: அனந்தி எழிலன்

மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். (more…)

பொதுமக்களின் சொத்துக்களை கையளிப்பதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்கும், இராணுவத்தினர் பொதுமக்களின் பாரம்பரிய சொத்துக்களை கையளிப்பதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை' என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)

2/3 பெரும்பான்மையுடன் வெற்றி பெறச்செய்யுங்கள்: விக்கினேஸ்வரன்

தமிழ் மக்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு இந்த தேர்தலில் இருந்து யாரும் ஒதுங்கியிருக்க வேண்டாம். (more…)

கையறு நிலையில் தேர்தல் ஆணையாளர்; சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளை இராணுவம் மிரட்டும் நிலையில், எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாத கையறு நிலையிலேயே தேர்தல்ககள் திணைக்களமும் தேர்தல்கள் ஆணையாளரும் உள்ளனர். (more…)

தேர்தல் வன்முறைகளை ஈ.பி.டி.பி கண்டிக்கிறது

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் இன்று (நேற்று) கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

மகேஸ்வரன்,ரவிராஜ் போன்று குரல்கொடுப்பேன்: துவாரகேஸ்வரன்

முன்னாள் அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோரைப் போன்று அச்சமின்றி தமிழ் மக்களுக்கா நான் என்றும் குரல் கொடுப்பேன் என்று வட மாகாண சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பு 13 ஐ ஆதரித்திருந்தால் சுயாட்சியை பெற்றிருப்போம் : டக்ளஸ்

மாகாணசபை உரிமைகளை எதிர்த்து வந்த கூட்டமைப்பு 13 ஆவது திருத்தத்தை அன்றே ஆதரித்திருந்தால், நாம் சுயாட்சியை நோக்கி சென்றிருக்கலாம் என்பதுடன் தமிழ் மக்கள் இத்தகைய பேரழிவுகளை சந்திக்கவேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டிருக்காது (more…)

த.தே.கூ. வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரான தம்பிராசாவின் வாகனம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களினால் நேற்று மாலை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. (more…)

தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் அபிவிருத்திகளை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் – அங்கஜன்

தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் அபிவிருத்திகளை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

அமோக வெற்றி எமக்கே சவால் எதுவும் கிடையாது;- சம்பந்தன்

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி வாகை சூடும். இதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமேயில்லை. அரசு தற்போது வெளியிடும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. (more…)

வேட்பாளரைத் தேடிய தேர்தல் திணைக்கள அதிகாரிகள்

இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொது மக்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார் என்று கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்படி நிகழ்வை முற்றுகையிட்டுள்ளனர். (more…)

வாக்களிப்பு முறை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவும் – சி.வி.கே.சிவஞானம்

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலின் போது வாக்களிக்கும் முறை தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts