- Friday
- June 20th, 2025

தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைகள் குழப்பங்களின் மத்தியில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் ஆறு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்படி அந்தக்கட்சியின் சார்பில் மாவை.சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், சிறிதரன், அருந்தவபாலன் ஆகியோருடன் பெண் வேட்பாளராக மதினி நெல்சன் போட்டியிடுகிறார். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட இரண்டு...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் திருக்கோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்படுத்திய பட்டியல் வெளியாகியுள்ளது. இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் என தெரிய வருகின்றது. இம்மாவட்டத்தில் 4 வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்படுவர் வேட்பாளர் பட்டியல் 01. திரு இரா சம்பந்தன் 02. திரு துரைரெட்ணசிங்கம் 03. திரு ஜீவரூபன் 04. திரு கனகசிங்கம் 05. திரு...

தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக தெரிவித்துள்ளார் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தையும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தையும் தான் நிராகரிப்பதாகத் தெரிவித்த கருத்துக்கு மாத்திரமே தனக்குக் கட்சியிடம் இருந்து கடிதம் வந்ததாகவும்,...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில்...

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் த.தே.ம.முன்னணியின் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அம்பாறையில் அவர்கள் முதலாவதாக் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள த.தே.ம.முன்னணியின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது. 7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்தரன் , பத்மினி...

2015 பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் ஆதரிப்பது யாரை என்று ஒரு கருத்துக்கணிப்பினை எமது இணையத்தளம் ஆரம்பித்துள்ளது . அதற்கான இணைப்பு http://www.e-jaffna.com/2015-srilanka-parliment-election-pre-poll இங்கே ஒருவர் ஒருதடவையே வாக்களிக்க முடியும். வாக்களித்த பின்னர் முடிவுகள் மட்டுமே தெரியும்..மிகவும் நேர்மையான முறையில் தான் இந்த வாக்களிப்பு இடம்பெறுகின்றது.இம்முடிவுகள் உண்மையான தேர்தல் முடிவாக கொள்ள முடியாது . காரணம் உண்மையில்...

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார். இதனடிப்படையில் மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும், நாளைய தினம் அதற்கான வேட்புமனு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர்...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியிலும், வன்னித் தேர்தல் தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட புலிகள் இயக்க போராளிகள் தீர்மானித்து உள்ளனர். ஜனநாயக போராளிகள் கட்சி என்கின்ற பெயரில் அமைப்பு ரீதியாக இணைந்து உள்ள இவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய கூட்டத்தில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் போராளிகள் ஒருமனதாக விடுத்த...

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி வாக்களிக்கலாம் என்று மேலதிக தேர்தகள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் நபர்களும் இணைந்து முக்கூட்டை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குதிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இந்த புதிய கூட்டு போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பு மனு...

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க இம் முறை யாழ் மாவட்டத்தில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் தகுதி பெற்றுள்ளனர் என யாழ் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் 22 ஆயிரத்து 57 பேரும், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 47...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் தமது வேட்புமனுக்களில் 30 வீதமான இடத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும் என மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய பட்டியலில் மூன்றில் ஒரு வீதத்தை பெண்களுக்காக ஒதுக்குமாறும் அமைச்சு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 5.8...

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையகத்தில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் கருத்து கூறியதாவது, கூட்டமைப்புக்கும், எமது கட்சிக்கும்...

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து புதிதாக மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளை அமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளருமான நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளை அமைக்குமாறு...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்காக தம்மை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். அத்துடன், வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் எமது கட்சி தனித்து போட்டியிடப் போகிறது.எமது கொள்கையான தேசியம்,...

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 10 இடங்களில் 6 இடங்களில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் 2 ஆசனங்கள்,டெலோ 1 ஆசனம், புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம்...

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆசனப் பகிர்வு தொடர்பில் அதன் முடிவுகள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்இ தலைமையில் இடம் பெறும் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்...

தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக வௌியான தகவல் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவி அத்தியவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க...

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழ். மாவட்டத்தின் முதலாவது வேட்பு மனு, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை(06) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென்னிலங்கை கட்சியான ஜனசக்தி பெரமுன கட்சியே திங்கட்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி, ஊர்வலங்கள் கட்அவுட்கள் போஸ்டர்களை...

All posts loaded
No more posts