Ad Widget

யாழ், வன்னியில் முன்னாள் புலிகள் வித்தி தலைமையில் களத்தில்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியிலும், வன்னித் தேர்தல் தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட புலிகள் இயக்க போராளிகள் தீர்மானித்து உள்ளனர்.

ஜனநாயக போராளிகள் கட்சி என்கின்ற பெயரில் அமைப்பு ரீதியாக இணைந்து உள்ள இவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய கூட்டத்தில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில் போராளிகள் ஒருமனதாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இவர்களின் ஒருங்கிணைப்பாளரும், பிரசித்தி வாய்ந்த ஊடகவியலாளருமான என். வித்தியாதரன் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

இதே நேரம் வன்னித் தேர்தல் தொகுதியில் தலைமை வேட்பாளராக சிறப்புத் தளபதி ஒருவர் போட்டியிடுகின்றார்.

போராளிகளின் பங்களிப்பை மாத்திரம் அன்றி மகளிருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், சிவில் பிரதிநிதிகளை உள்வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இவர்கள் பெரும்பாலும் நாளை மறுதினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று தெரியவருகின்றது .

Related Posts