- Friday
- June 20th, 2025

இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கும் யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான ஐந்தாவது துடுப்பாட்டப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. கொழும்பு இந்துக் கல்லூரி அணி திவாகரன் தலைமையிலும், யாழ். இந்துக் கல்லூரி அணி கல்கோகன் தலைமையிலும் களமிறங்கியுள்ளன. (more…)

மிக அக்கறையுடன் முன்னதாகவே பரிசீலித்திருக்க வேண்டிய சில விடயங்களை மிக ஆதங்கத்துடன் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன். இப்போதே சில விடயங்களைக் கட்டுப்படுத்த தவறுவீர்களேயானால் அவை தமிழர்களினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது ஒற்றுமைக்கும் பெரும் பங்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, பெரும் தேசிய அனர்த்தத்துக்கும் வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...

இலங்கையின் மாகாணங்களுக்கு புதிய திணைக்களங்களை (அரசுத் துறைகள்) உருவாக்கும் அதிகாரம் இருக்கிறது என்று கூறுகிறார் முன்பு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் முதல்வருக்கு செயலராகவும், பின்னர் கிழக்கு மாகாண முதல்வருக்கு ஆலோசகராகவும் பணியாற்றிய டாக்டர் கே.விக்னேஸ்வரன். இலங்கையின் வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் மாகாண கவுன்சிலில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட உரையில்,...

வடக்கு மாகாண சபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், சில புதிய திணைக்களங்களை உருவாக்க முயன்றுள்ளதாகவும், இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், நாட்டின் அரசியலமைப்பையும்,...

வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் இடையில் மதிய போசனத்தில் தம்முடன் இணைந்து ஊடகவியலாளர்கள் பங்கெடுப்பதனால் தமக்கு இடையூறு ஏற்படுவதாக தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சபை நிதியில் பரிமாறப்படும் உணவு மற்றும் தேனீர் போன்றவற்றை இன்று...

தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அந்த அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மறைந்த நெல்சன் மண்டேலா உலகளவில் அழிக்கமுடியாத புகழ்வாய்ந்த புனிதராவார். 1994 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்கா, பொதுநலவாயத்தில்...

அதிகாரத்தைப் பகிர்வதாக சர்வதேசத்திற்கு 13ஆவது திருத்தச்சட்டத்தை காண்பித்துவிட்டு அதனை நடைமுறைப் படுத்தாது விடுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கம் போடும் முட்டுக் கட்டைகள் இதனையே காட்டுகின்றன என சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிபாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள ஆலயங்கள், வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை பார்வையிடச் சென்ற போது என்னை இராணுவத்தினர்...

அங்கஜன் அவுஸ்திரேலியாவில் கைது அவசரமாய் புறப்பட்டார் தந்தை இராமநாதன்.. என்ற செய்தி பல இணையங்களிலும் பிரசுரமாகியுள்ளது. இச் செய்தி தொடர்பில் அங்கஜன் தரப்பினைத் தொடர்பு கொண்டு வினாவிய போது இதுவொரு வதந்தி எனவும் இச் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை எனத் தெரிவித்தார் அவரின் ஊடக இணைப்பாளர். மேலும் அவர், அங்கஜன் எதிர்வரும் ஞாயிறு (8/12/2013) இடம்பெறவுள்ள தனது...

வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரனும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் கொழும்பில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கொழும்பிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர், ஜனநாயக மக்கள் முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள், மரியாதை நிமித்தம் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்தனர். இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின்...

நெல்சன் மண்டேலா காலமாகிவிட்டார். அறக்கும்போது அவருக்கு வயது 95. மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார். மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில்...

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று வியாழக்கிழமை கூறினார். டானியல் றெக்ஷியன்; ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியமான செயற்பாட்டாளர். இவரது...

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், றெக்ஷியனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞர் ஆகிய மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.மகேந்திரராஜா உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன்கடந்த மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக...

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து நடத்துனர்கள் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதாக அண்மைக்காலமாக முறைப்பாடுகள் தொடர்பில் உரிய தரப்பினர் உடனடியாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா . டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார் . இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (28-11-2103) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் ,...

"மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் என்பது ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மத்திக்கு என்ன அதிகாரங்கள், மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும் அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டிய தேவை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இராஜதந்திர ஒழுங்குகளை மீறியுள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது இலங்கையின் மூத்த அரசியல்வாதி ஒருவரை கோடிட்டு பிபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் தமது இலங்கை பயணம் வெற்றியளித்துள்ளதாக கெமரோன் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை கமரூன், இலங்கைக்கு வந்தபோது விருந்தினர் புத்தகத்தில் கைச்சாத்திட மறுத்துள்ளார். அத்துடன்...

வடமாகாண முஸ்லிம்களுக்காக ஆணைக்குழுவொன்று உருவாக்கப்பட்டு அந்தக் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தீர்வு காணப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினரும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான ஜஸ்மின் ஆயுப், மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். பொதுநூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது....

பொதுநலவாய மாநாட்டு இலட்சினையில் "வணக்கம்" என்ற பதத்தை நீக்கிவிட்டு "ஆயுபோவன்" என்ற சிங்களப் பதத்தை தமிழில் எழுதப்பட்டது ஏன்? என்று வெளிநாட்டு தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அந்தக் குழுவில் தான் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார். இதற்கு ஒரே வரியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்த...

காணாமல் போன உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்துத் தருமாறு கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் தீப்பந்த போராட்டம் நடைபெறுகிறது. இன்று முற்பகல் 11 மணிக்கு வவுனியா கந்தசுவாமி கோயிலில் இப் போராட்டம் ஆரம்பமானது. கொழும்பில் பொதுநலவாய மாநாடு இடம்பெறுகின்ற நிலையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் வவுனியா...

விடுதலைப்புலிகளை திருப்திபடுத்தும் முகமாகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் செயற்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கமரூனின் செயற்பாடு, பிரித்தானியாவில் உள்ள உலக தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றின் பின்னணியில் இடம்பெற்றதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வருவதற்கு முன்னர் பிரித்தானிய பிரதமரின் குழுவினரை, பிரித்தானிய...

All posts loaded
No more posts