நினைவு தினங்களுக்குத் தடைவிதிப்பதன் மூலம் மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை அழித்துவிட முடியாது – வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.   வடக்கு மாகாணசபையின் ஒன்பதாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை (22.05.2014) நடைபெற்றபோது முள்ளிவாய்க்காலில்...

ஒன்றரைக் கோடி மோசடி; பின்னணியில் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் !

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நடைபெற்ற ஒரு கோடி 58 இலட்சம் ரூபா மோசடியின் பின்னணியில் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரே சூத்திர தாரியாக செயற்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பருத்தித்துறையைச் சேர்ந்த 14 குடும்பங்களிடம் ஒன்றரைக் கோடி ரூபாயினைப் பெற்று மோசடி செய்த சம்பவத்தில்  சரத்பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரும்...
Ad Widget

பொலிசாரால் ரவிகரன் மீது சோடிக்கப்ப​ட்ட வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு சமுகமளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவ்வழக்கு சோடிக்கப்பட்டதென இனங்காணப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று காலை நீதிமன்ற வளாகத்தின் முன் ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அது நீதிமன்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய...

நினைவேந்தலை கைவிடுங்கள்! நிகழ்ந்தால் இராணுவம் தலையிடும்!- யாழ். இராணுவத்தளபதி –

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதைக் கொண்டாடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வரும், எனவே அந்த நிகழ்வைக் கைவிடுங்கள் என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை படைத்தலைமையகத்துக்கு அழைத்த யாழ்.மாவட்ட படைத் தளபதி மேஜர்...

இலங்கைத் தமிழர் நலனில் அக்கறையோடு செயற்படுவேன்: மோடி

இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, புதுடில்லியில் உள்ள குஜராத் பவனில் அம்மாநில முதல்வரும், பா.ஜ.க பிரதமர் பதவி வேட்பாளருமான...

மது வெறியில் நினைவஞ்சலியைக் குழப்பிய குண்டர்கள்

நேற்று மாலை யாழ். நகரினில் தேவாலயங்கள் மற்றும் ஆலயங்களினில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்த பிரார்த்தனைகளினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பரவலாக முற்பட்டிருந்தனர்.அவர்களுடன் பொதுமக்களும் திரண்டிருந்தனர். இந்நிலையினில் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தினில் வெளியே நின்று அவர்கள் பிரார்த்தனையினில் ஈடுபட முற்பட்ட வேளை அங்கு இராணுவப் புலனாய்வாளர்களினால் தயார் நிலையினில் வைக்கப்பட்டிருந்த...

தனியார் மற்றும் அரச காணிகளை வெளிநாட்டவர்களுக்கு கைமாற்ற தடை

உள்நாட்டவர்கள் தனியார் மற்றும் அரச காணிகளை வெளிநாட்டவர்களுக்கு கைமாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.   மேலும் கடந்த 2013ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பாதீட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   இதன்படி தனியார் மற்றும் அரச காணிகள் வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.   எனினும் இவ்வாறான நடைமுறையை சட்டரீதியானதாக மாற்றும்...

தடைகளையும் மீறி பல இடங்களில் உயிர் நீத்த மக்களுக்கான நினைவஞ்சலிகள்

யாழ்.குடாநாட்டில் படையினரின் அதி உச்சக்கட்ட பாதுகாப்பிற்குள் கட்சி அலுவலகங்கள் கோவில்கள் தேவாலயங்கள் கடந் த 3தினங்களாக வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் பகுதில் இறுதி யுத்தத்தில் இறந்த  மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள் நடத்துவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியன...

ஐக்கியத்தை பாதுகாப்போம்! யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் தொடரும்: ஜனாதிபதி

சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை மட்டுமல்ல தமிழ்த்தலைவர்களையும் பயங்கரவாதிகள் கொன்றொழித்தனர். அவ்வாறான பயங்கரவாதிகளிடமிருந்து படையினர் உயிர்துறந்து பெற்றுக்கொண்ட ஐக்கியத்தை நாம் பாதுக்காக்கவேண்டும். அதனை பறித்தெடுப்பதற்கும் யாருக்கும் இடமளிக்கக்கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.என்றுமே மரணிக்க முடியாதது இன ஐக்கியமாகும். அந்த ஐக்கியத்தை அபகரிப்பதற்கு ஒரு சிறு பிரிவினர் முயற்சிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.யுத்தவெற்றியின் ஐந்து ஆண்டுகள்...

சிங்கள சுற்றுலா பயணிகளுக்கே கீரிமலை செல்லும் வீதி அனுமதி; ஏனையோருக்கு தடை

தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதிப்பாவனைக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதி சிங்கள சுற்றுலா  பயணிகளைத் தவிர ஏனையவர்களுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே - 18 ஆம் நாளான இன்று முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு கீரிமலையில் ஆத்ம சாந்திப்பூஜை மற்றும் பிதிர்க்கடன் செய்ய செல்லக்...

அனந்திக்கும் தடை

கீரிமலைக்கு சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இராணுவத்தினரால் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த உறவகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கீரிமலையில் பிதிர்க்கடன் களித்து வழிபடச் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் இராணுவத்தினரால் தெல்லிப்பழை சந்தியில் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மேலும் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்...

முற்றுகைக்குள் உதயன் பணிமனை

உதயன் பணிமனை இன்று மதியம் முதல்  இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை  செய்யப்பட்டுள்ளளது. இன்று காலை முதலே உதயன் பணிமனையைச் சூழ சிவில் உடையில் ஏராளமான புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.வாகனமொன்றை உதயனுக்கு அருகில் நிறுத்தி விட்டு, அதிலிருந்து இறங்கிய சிலர், ஆயுதங்களுடனும் காணப்பட்டனர்.உதயன் பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் அமைந்ததால், அது குறித்து அந்த...

அஞ்சலிக்கத் தடை ;இலங்கையின் புதிய சட்டமா?-டெனிஸ்வரன் கேள்வி

கடந்த கால இறுதி போரின் போது மக்களின் இருப்புக்கள் மீது கொத்துக் கொத்தாக வீசப்பட்ட குண்டு மழையினால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எமக்கென்ன தடை என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,   2009ம் ஆண்டு இறுதி போரின்...

நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக்கொன்று பழி தீர்த்த கிராம மக்கள்

நைஜீரியாவில் கடந்த மாதம் பாடசாலை  மாணவர்களை கடத்தி சென்ற ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் குழுவை சேர்ந்த 200 தீவரவாதிகளை வடகிழக்கு நைஜீரியா பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து வெட்டிச் சரித்துள்ளனர்.   நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி...

தெற்காசியாவில் இன்னுமொரு மகிந்த ராஜபக்ஷ உருவாகியுள்ளார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தெற்காசிய பிராந்தியத்தில் இன்னுமொரு மகிந்த ராஜபக்ஷ, அரசத் தலைவராக உருவாகியுள்ளார். அந்த வகையில் அவருக்கு எமது மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்; கொள்கின்றேன் என இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளை அடுத்து நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று, இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி நியமிக்கப்படவுள்ளமை தொடர்பில் கருத்துத்...

பேஸ்புக்கில் பணப்பரிமாற்றம்?

வாடிக்கையாளர்களை மேலும் தன்னகத்தே ஈர்ப்பதற்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி அதை இலவசமாகவும் வழங்கி வரும் பேஸ்புக் வலைத்தளம், தற்போது வங்கியில் இடம்பெறுவதைப்போன்ற பணிப்பரிமாற்றம் செய்யும் ஒரு புதிய சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த சேவை வங்கிகள் அளிக்கும் 'இன்டர்நெட் பேங்கிங்" வசதியை போன்றதாகும். இதன் மூலம் உலகின் எந்தவொரு மூலைக்கும் ஒரு நொடியில் பணத்தை...

எங்களுடைய இன அடையாளங்களை அடுத்த சந்ததியினருக்கும் காண்­பிக்க வேண்டும் -பேராசிரியர் வி.பி.சிவநாதன்

விரை­வான உலக செயற்­பாட்­டினால் தமிழ் மக்­களின் இனத்­துவ அடை­யா­ளங்கள் அழி­வ­டைந்து வரு­கின்­றன. அதி­லி­ருந்து மீண்டு எங்­க­ளு­டைய அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு எமது அடை­யா­ளங்­களை காண்­பிக்­க வேண்­டி­யது எமது கட­மை­யாகும் என யாழ்.பல்­க­லைக்­க­ழக கலைப்­பீ­டா­தி­பதி பேரா­சி­ரியர் வி.பி.சிவ­நாதன் தெரி­வித்தார் சைவ­நெறிக் கூடமும் சைவ மகா சபை தெய்வத் தமிழ் அறக்­கட்­டளை நிதி­யமும் இணைந்து நடத்­திய தமிழ் அருட்­சு­னைஞர் பயிற்சி...

பொது வேட்பாளருக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தகுதியானவர் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? சுமந்திரன் எம்.பி. கேள்வி

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பொது வேட்­பா­ள­ராக முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை சிபா­ரிசு செய்­துள்­ளமை தொடர்பில் எதிர்க்­கட்­சிகள் தமது நிலைப்­பாட்­டினை தெரி­விக்க வேண்டும் எனத் தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், அதி­காரப் பகிர்வின் மூல­மாக நாட்டை ஒற்­று­மைப்­ப­டுத்த இவரின் தெரிவு சிறந்­த­தொன்­றாக அமையும் எனவும் சுட்­டிக்­காட்­டினார். அதி­கா­ரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் அமைப்­பினால் நேற்று கொழும்பில்...

அச்சுவேலியில் வாள்வெட்டு :சந்தேகநபர் இருவர் கைது

அச்சுவேலிப்பகுதியில்   இடம்பெற்ற சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    இதில் நிக்கோநாதன் அருள்நாயகி (வயது 50),இவரது மகனான நி.சுபாங்கன் (வயது 20), மற்றும் இவரது மகள் யசோதரன் மதுசா (வயது 28) ஆகியோரே கொலை செய்யப்பட்டவர்களாகும்   மேலும் படுகாயமடைந்த நிற்குணாந்தன் தர்மிகா (வயது 25),யசோதரன் வேலன் (வயது 30) ஆகியோர்...

புதுவை இரத்தினதுரையின் விடுதலைக்கு குரல் கொடுக்க ஏன் தயக்கம்? பொ.ஐங்கரநேசன் கேள்வி.

புதுவை இரத்தினதுரைக்காக கவிஞர்கள், இலக்கியவாதிகள் குரல் கொடுக்க ஏன் தயக்கம் காட்டுக்கின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.யாழ். தியாகி அறக்கொடை நிலையத்திலுள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நேற்று மாலை ஊடகவியலாளரும் கவிஞருமான செல்வக்குமாரின் ஊசல் கவிநூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ் விழாவுக்கு ஐங்கரநேசன் தலைமை தாங்கி நடாத்தி இருந்தார். அதன் போது...
Loading posts...

All posts loaded

No more posts