வாகன வரி கட்டுவதாயின் 150 ரூபாவுக்கு புத்தகம் வாங்கவேண்டும் – தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் புதிய விதி!

வாகனங்களுக்குரிய  வருடாந்த வரி கட்டும்போது  வீதி ஒழுங்கு விதிகள் சம்பந்தமாக முன்னாள் போக்குவரத்து பொலிஸ் ஆணையாளர்  பேரின்பநாயகம் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள புத்தகம்  ஒன்று 150 ரூபா கொடுத்து வாங்கவேண்டும் என  தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கட்டாயநடைமுறையில் இருப்பதாக தெரியவந்துள்ளது ஒவ்வொரு வாகன உரிமையாளரும் இது தொடர்பில் கட்டாயப்படுத்தப்படுவதாக நேற்று அங்கு வரிசெலுத்த சென்ற வாகன உரிமையாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். புத்தகத்தை  வாங்குபவர்களுக்கு...

வெற்றிநடை போடும் ”கல்லூரி படையணி ” பாடல்

கிருத்திகன் குகேந்திரன் இயக்கத்தில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள கல்லூரி படையணி காணொளிப்பாடல் இரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரபலம் அடைந்து வருகின்றது.கல்லூரி படையணி என்பது இந்துவின் மைந்தர்கள் அனைவருக்கும் புத்துயுரும் உத்வேகமும் உண்டாக்கும் ஒரு ஒளிப்பதிவு பாடலாகும். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களில் எடுக்கப்பட்டு இசையமைத்து வெளியிடப்பட்டிருக்கிறது. கல்லூரி படையணி பாடலின் சிறப்பான இசையை தந்திருந்தவர்...
Ad Widget

தட்டயமலை கிராம மக்கள் முதலமைச்சரரிடம் நீதிகேட்டனர்!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை இடைமறித்து தட்டயமலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமது கிராமத்திற்கு குடிநீர் மற்றும் வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுதருமாறு கோரியே தட்டயமலை மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்த கிராமமக்கள், முதலமைச்சர் பயணித்த வாகனத்தை இடைமறித்து தமது...

இலங்கையால் தடை விதிக்கப்பட்ட 424 வெளிநாட்டு தமிழர்களின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டன!

இலங்கை அரசால் கடந்த மார்ச் மாதம் தடைவிதிக்கப்பட்ட 16 வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் அனைத்து சொத்துக்களையும் இலங்கையில்  முடக்கும் அரசு ஆணையை  இலங்கை அரசு  வெளியிட்டுள்ளது.  பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று ஐ.நா பாதுகாப்புச்சபையின் 1373-வது  தீர்மானத்துக்கு அமைய தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் அனைத்து அசையும், அசையா சொத்துகள்,  நிதிகள்,...

தனி ஈழம் கேட்கக் கூடாது-மதுரையில் சுஷ்மா சுவராஜ்

தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன். அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கையே தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்....

ஜனாதிபதியுடன் சி.வி செல்வதே இணக்க அரசியலுக்கு வித்திடும்: டக்ளஸ்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தன்னுடன் வருமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்திருப்பது நல்லதொரு நல்லெண்ண சமிக்ஞை என்றும், இந்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பதே ஆக்கப்பூர்வ இணக்க அரசியலுக்கு வித்திடும் செயலாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ்...

ஜனாதிபதியின் அழைப்பை வடமாகாண முதலமைச்சர் நிராகரித்தார்

இந்தியாவின் 14 ஆவது பிரதமராக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை வடமாகாண முதலமைச்சர்  நிராகரித்துவிட்டார்.இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.இன்றைய திகதியில்  உங்கள் தொலைநகல் கிடைக்கப் பெற்றேன்....

மோடி பதவியேற்பு வைபவத்தில் சனாதிபதி கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

மோடி பதவியேற்பு  வைபவத்தில்  சனாதிபதி கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் சனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற இலங்கை தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு சனாதிபதி விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற சனாதிபதியின் தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு வட...

நினைவு தினங்களுக்குத் தடைவிதிப்பதன் மூலம் மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை அழித்துவிட முடியாது – வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.   வடக்கு மாகாணசபையின் ஒன்பதாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை (22.05.2014) நடைபெற்றபோது முள்ளிவாய்க்காலில்...

ஒன்றரைக் கோடி மோசடி; பின்னணியில் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் !

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நடைபெற்ற ஒரு கோடி 58 இலட்சம் ரூபா மோசடியின் பின்னணியில் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரே சூத்திர தாரியாக செயற்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பருத்தித்துறையைச் சேர்ந்த 14 குடும்பங்களிடம் ஒன்றரைக் கோடி ரூபாயினைப் பெற்று மோசடி செய்த சம்பவத்தில்  சரத்பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரும்...

பொலிசாரால் ரவிகரன் மீது சோடிக்கப்ப​ட்ட வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு சமுகமளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவ்வழக்கு சோடிக்கப்பட்டதென இனங்காணப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று காலை நீதிமன்ற வளாகத்தின் முன் ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அது நீதிமன்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய...

நினைவேந்தலை கைவிடுங்கள்! நிகழ்ந்தால் இராணுவம் தலையிடும்!- யாழ். இராணுவத்தளபதி –

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதைக் கொண்டாடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வரும், எனவே அந்த நிகழ்வைக் கைவிடுங்கள் என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை படைத்தலைமையகத்துக்கு அழைத்த யாழ்.மாவட்ட படைத் தளபதி மேஜர்...

இலங்கைத் தமிழர் நலனில் அக்கறையோடு செயற்படுவேன்: மோடி

இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, புதுடில்லியில் உள்ள குஜராத் பவனில் அம்மாநில முதல்வரும், பா.ஜ.க பிரதமர் பதவி வேட்பாளருமான...

மது வெறியில் நினைவஞ்சலியைக் குழப்பிய குண்டர்கள்

நேற்று மாலை யாழ். நகரினில் தேவாலயங்கள் மற்றும் ஆலயங்களினில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்த பிரார்த்தனைகளினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பரவலாக முற்பட்டிருந்தனர்.அவர்களுடன் பொதுமக்களும் திரண்டிருந்தனர். இந்நிலையினில் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தினில் வெளியே நின்று அவர்கள் பிரார்த்தனையினில் ஈடுபட முற்பட்ட வேளை அங்கு இராணுவப் புலனாய்வாளர்களினால் தயார் நிலையினில் வைக்கப்பட்டிருந்த...

தனியார் மற்றும் அரச காணிகளை வெளிநாட்டவர்களுக்கு கைமாற்ற தடை

உள்நாட்டவர்கள் தனியார் மற்றும் அரச காணிகளை வெளிநாட்டவர்களுக்கு கைமாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.   மேலும் கடந்த 2013ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பாதீட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   இதன்படி தனியார் மற்றும் அரச காணிகள் வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.   எனினும் இவ்வாறான நடைமுறையை சட்டரீதியானதாக மாற்றும்...

தடைகளையும் மீறி பல இடங்களில் உயிர் நீத்த மக்களுக்கான நினைவஞ்சலிகள்

யாழ்.குடாநாட்டில் படையினரின் அதி உச்சக்கட்ட பாதுகாப்பிற்குள் கட்சி அலுவலகங்கள் கோவில்கள் தேவாலயங்கள் கடந் த 3தினங்களாக வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் பகுதில் இறுதி யுத்தத்தில் இறந்த  மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள் நடத்துவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியன...

ஐக்கியத்தை பாதுகாப்போம்! யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் தொடரும்: ஜனாதிபதி

சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை மட்டுமல்ல தமிழ்த்தலைவர்களையும் பயங்கரவாதிகள் கொன்றொழித்தனர். அவ்வாறான பயங்கரவாதிகளிடமிருந்து படையினர் உயிர்துறந்து பெற்றுக்கொண்ட ஐக்கியத்தை நாம் பாதுக்காக்கவேண்டும். அதனை பறித்தெடுப்பதற்கும் யாருக்கும் இடமளிக்கக்கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.என்றுமே மரணிக்க முடியாதது இன ஐக்கியமாகும். அந்த ஐக்கியத்தை அபகரிப்பதற்கு ஒரு சிறு பிரிவினர் முயற்சிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.யுத்தவெற்றியின் ஐந்து ஆண்டுகள்...

சிங்கள சுற்றுலா பயணிகளுக்கே கீரிமலை செல்லும் வீதி அனுமதி; ஏனையோருக்கு தடை

தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதிப்பாவனைக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதி சிங்கள சுற்றுலா  பயணிகளைத் தவிர ஏனையவர்களுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே - 18 ஆம் நாளான இன்று முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு கீரிமலையில் ஆத்ம சாந்திப்பூஜை மற்றும் பிதிர்க்கடன் செய்ய செல்லக்...

அனந்திக்கும் தடை

கீரிமலைக்கு சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இராணுவத்தினரால் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த உறவகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கீரிமலையில் பிதிர்க்கடன் களித்து வழிபடச் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் இராணுவத்தினரால் தெல்லிப்பழை சந்தியில் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மேலும் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்...

முற்றுகைக்குள் உதயன் பணிமனை

உதயன் பணிமனை இன்று மதியம் முதல்  இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை  செய்யப்பட்டுள்ளளது. இன்று காலை முதலே உதயன் பணிமனையைச் சூழ சிவில் உடையில் ஏராளமான புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.வாகனமொன்றை உதயனுக்கு அருகில் நிறுத்தி விட்டு, அதிலிருந்து இறங்கிய சிலர், ஆயுதங்களுடனும் காணப்பட்டனர்.உதயன் பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் அமைந்ததால், அது குறித்து அந்த...
Loading posts...

All posts loaded

No more posts