- Saturday
- June 21st, 2025

யாழ் பல்கலைக்கழகத்தின் இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கை நெறி புதிய பிரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி 15.09.2014 ஆகும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமானது முகாமைத்துவமாணிக் கற்கை நெறியை Bachelor of Business Management (BBM) நடாத்துகின்றது. (more…)

மழை பெய்து கொண்டு இருந்தவேளையில் மின்சாரம் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மூவரை மின்சாரம் தாக்கியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இன்று இரவு 7.00 மணியளவில் இந்த சம்பவம் இளவாலை சித்திரமேளி சந்தியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும்...

பிரபல பொருளியல் ஆசிரியரான சின்னத்துரை வரதராஜன் இன்று தனது 63 வது வயதில் காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(18-08-2014) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் என்பது...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் தி.வேல்நம்பி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (14.08.2014) இடம்பெற்ற தேர்தலில் மூன்றில் இரண்டு வாக்குப் பலத்துடன் இவரது தெரிவு இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் தி,வேல்நம்பி யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்பதும் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கன. ஏற்கனவே கடந்த...

Facebook தளத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் படி உங்கள் Facebook கணக்கிற்கான முகப்புப் பக்கத்தில் (News Feed) பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தேவையற்ற வீடியோ கோப்புக்களும் இவ்வாறு இயங்குவதனால் எமது தரவுப்பாவனை அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும் இது சிலருக்கு சங்கடமாகக் கூட அமையலாம். எனவே இந்த வசதி உங்களுக்கு...

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் பாடத்தில் சித்தியெய்தாத நிலையில் கபொத உயர்தரத்தில் கற்கும் போது இரண்டு வருடத்துக்குள் கணிதப் பாடத்தில் சித்தியெய்தும் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை கூட்டம் இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். இதனை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கு அங்கீகாரம்...

யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைக்கு முன்பாக உள்ள மரத்தின்கீழ் மாணவர்கள் மதுக்கோப்பைகளை வைத்து மது அருந்தி மது போதையில் உளறிகொண்டிருப்பதாகவும் இதனால் இவ்வழியால் செல்லும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் சங்கடத்திற்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் அரங்கேறிவருவதாகவும் இன்று்(25) இது குறித்து விரிவுரையாளர்களால் மார்சல் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டபோதும் நீண்டநேரமாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் விரிவுரையாளர்களும் அலுவலர்களும் கூடியதை...

யாழ். கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து இன்று திங்கட்கிழமை (16) இரவு நடத்திய வாள்வெட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்து மாலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இதில் கோண்டாவிலினைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (19) என்பவர் பலியாகியதுடன், சகோதரர்களான ரவீந்திரன் லக்ஸணா (26), ரவீந்திரன் செந்தூரன் (23) ஆகியோரும்,...

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் விவசாய பீடம் இன்றுகாலை 8.00 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகரில் திறந்து வைக்கப்பட்டது.இத்திறப்பு நிகழ்வுகளில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர்கல்வியமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆகியோர்...

கவுணாவத்தை ஆலயத்தில் நடைபெறவிருந்த மிருகபலிக்கு தடைவிதித்து மல்லாகம் நீதிமன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த பல வருடங்களாக நடைபெற்று வந்த வேள்வியை தடுத்து நிறுத்தக் கோரி மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மல்லாகம் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...

வடக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இணையத்தளம் துனிசியா (Tunisia )நாட்டினை சேர்ந்த அரேபிய இணைய ஊடுருவல் காரர்களால் முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் நேற்று முதல் முடக்கி வைக்கப்படுள்ளது. இந்த இணையத்தளம் வடக்கு மாகாணசபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் வெற்றிகொள்ளப்பட்ட பின்னரும் ஆளுனரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. Prodigy TN - Fallaga Team என்று...

பாத்தீனியம் கிலோ 10 ரூபாவுக்கு வாங்கப்படும் என் அறிவித்து விவசாய நிலங்களில் வளரும் நச்சுத்தன்மை வாய்ந்த பாத்தீனிய செடிகளை அழிக்கும் முயற்சியில் வடமாகாணசபை விவசாய அமைச்சு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் மக்களைக்கொண்டே பாத்தீனியத்தினை அழிக்கும் உத்தியினை விவசாய அமைச்சு மேற்கொண்டிருக்கின்றது. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் அழிப்பு நடவடிக்கைககளின் தொடர்சியாக அந்த வித்தியாசமான அறிவிப்பினை...

வாகனங்களுக்குரிய வருடாந்த வரி கட்டும்போது வீதி ஒழுங்கு விதிகள் சம்பந்தமாக முன்னாள் போக்குவரத்து பொலிஸ் ஆணையாளர் பேரின்பநாயகம் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள புத்தகம் ஒன்று 150 ரூபா கொடுத்து வாங்கவேண்டும் என தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கட்டாயநடைமுறையில் இருப்பதாக தெரியவந்துள்ளது ஒவ்வொரு வாகன உரிமையாளரும் இது தொடர்பில் கட்டாயப்படுத்தப்படுவதாக நேற்று அங்கு வரிசெலுத்த சென்ற வாகன உரிமையாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். புத்தகத்தை வாங்குபவர்களுக்கு...

கிருத்திகன் குகேந்திரன் இயக்கத்தில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள கல்லூரி படையணி காணொளிப்பாடல் இரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரபலம் அடைந்து வருகின்றது.கல்லூரி படையணி என்பது இந்துவின் மைந்தர்கள் அனைவருக்கும் புத்துயுரும் உத்வேகமும் உண்டாக்கும் ஒரு ஒளிப்பதிவு பாடலாகும். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களில் எடுக்கப்பட்டு இசையமைத்து வெளியிடப்பட்டிருக்கிறது. கல்லூரி படையணி பாடலின் சிறப்பான இசையை தந்திருந்தவர்...

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை இடைமறித்து தட்டயமலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமது கிராமத்திற்கு குடிநீர் மற்றும் வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுதருமாறு கோரியே தட்டயமலை மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்த கிராமமக்கள், முதலமைச்சர் பயணித்த வாகனத்தை இடைமறித்து தமது...

இலங்கை அரசால் கடந்த மார்ச் மாதம் தடைவிதிக்கப்பட்ட 16 வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் அனைத்து சொத்துக்களையும் இலங்கையில் முடக்கும் அரசு ஆணையை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று ஐ.நா பாதுகாப்புச்சபையின் 1373-வது தீர்மானத்துக்கு அமைய தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் அனைத்து அசையும், அசையா சொத்துகள், நிதிகள்,...

தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன். அங்குள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கையே தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்....

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தன்னுடன் வருமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்திருப்பது நல்லதொரு நல்லெண்ண சமிக்ஞை என்றும், இந்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பதே ஆக்கப்பூர்வ இணக்க அரசியலுக்கு வித்திடும் செயலாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ்...

இந்தியாவின் 14 ஆவது பிரதமராக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை வடமாகாண முதலமைச்சர் நிராகரித்துவிட்டார்.இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.இன்றைய திகதியில் உங்கள் தொலைநகல் கிடைக்கப் பெற்றேன்....

மோடி பதவியேற்பு வைபவத்தில் சனாதிபதி கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் சனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற இலங்கை தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு சனாதிபதி விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற சனாதிபதியின் தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு வட...

All posts loaded
No more posts