மேர்வின் சொன்ன கிரக மாற்றம்

அரசாங்கத்தினதும் எதிர்கட்சியினதும் ஜோதிடம் என் கையில் உள்ளது. நேற்று ஒரு பெரிய கிரகத்துடன் சிறு சிறு கிரகங்கள் மாறியுள்ளன.அரசாங்கத்திற்கு மயக்கம் வரும் கிரகமாற்றம் எதிர்காலத்தில்தான் நிகழும். அரசாங்கத்தின் பிரபல கிரகம் ஜனாதிபதியால் கிரக மாற்றத்தை தடுக்க முடியும். ஆனால் சுற்றியுள்ள பலனற்ற கிரகம் அதற்கு இடமளிக்காது. என்றாவது எமது பிரபல கிரகத்தை பலனற்ற கிரகங்கள் சேர்ந்து...

கூட்டமைப்பு அவசரமாக முடிவெடுக்காது – இரா. சம்பந்தன்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான்...
Ad Widget

மைத்திரி உட்பட 4 அமைச்சர்கள் ஜனாதிபதியால் பதவி நீக்கம்

மைத்திரி பால சிரிசேன அவர்களின் பொதுவேட்பாளர் அறிவிப்பினை அடுத்து அவரையும் அவருடன் பிரிந்து சென்ற அமைச்சர்களான ராஜித சேனாரத்தின,துமிந்த திசநாயக்க , கே.எஸ் குணவர்த்தன ஆகியோரை அமைச்சுப்பதவி உள்ளிட்ட சகல பதவிகளிலிருந்தும் சனாதிபதி மகிந்த  பதவி நீக்கம் செய்தார். அத்துடன் அவர்களின் அடிப்படை கட்டி உறுப்புரிமையும் நீக்கப்பட்டுள்ளது இதேவேளை கட்சியில் மைத்திரிபால வின் இடத்திற்கு எஸ்...

எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை! சந்திரிக்கா

மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இங்கு மேலும் கூறியதாவது, 9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம்...

ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி (08.01.2015) நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி டிசம்பர் 8ம் திகதி முதல் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நண்பகல் 1.30 மணியளவில் சனாதிபதி தேர்தலை நடாத்த ஆணையாளரை கோருவதற்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டிருந்தார்

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார்

எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.    குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.    இன்று மாலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட...

ஹெல உறுமயவின் தீர்மானமானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுக்கப்பட்ட பிறந்தநாள் பரிசாகும் – சோபித்த தேரர்

ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளரும்  தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதி பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை அமைச்சர் உதயன் கம்மன்பிலவும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அக்கட்சி இதனை உறுதி செய்தது. அரசாங்கத்திடம் தமது கட்சி...

பொது எதிரணிக் கூட்டணியில் ததேகூ இன்னும் பங்குபெறவில்லை- சம்பந்தன் பிபிசி தமிழோசைக்கு பேட்டி

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான பொதுக் கூட்டணியில், 'தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கவில்லை' என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார். குறித்த பொதுக் கூட்டணிக்குள்ளேயே இன்னும் சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியிருப்பதாகவும் சம்பந்தன்...

யாழ்- கொழும்பு ரயில் சேவையால் தனியார் பேருந்து சேவைகள் பாதிப்பு- கெங்காதரன் கவலை

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பித்த பின்பு தனியார் பேருந்துச் சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் தனியார் போக்குவரத்துச் சேவை பேருந்து சங்கத் தலைவர் பி.கெங்காதரன் கவலை தெரிவித்துள்ளார். ரயில் சேவை கட்டணம் குறைந்த அளவில் உள்ளது இதனால் அதிகளவு பயணிகளிகள் ரயிலில் பயணத்தை மேற்கொள்கிறார்கள். ரயிலில் 320 ரூபா 3 ஆம் வகுப்புக் கட்டணமாக அறவிடப்படுகிறது. ஆனால்...

மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மஹிந்தவிற்கு எவ்விதத் தடையுமில்லை – உயர் நீதிமன்றம்

மூன்றாம் தவணைப் பதவிக்காலத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பிரதம நீதியரசர் உட்பட உயர்நீதிமன்றத்தின் ஒன்பது நீதியரசர்களும் இதனை ஏகமனதாக தீர்மானித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால...

வடக்கில் ரூ.100 மில்லியன் ஊழல்: சுரேஸ் குற்றச்சாட்டு

வடமாகாணத்தில் 100 மில்லியன் ரூபாவை, நெல்சிப் திட்டத்தில் பணியாற்றிய பொறியியலாளர் ஒருவர் ஊழல் செய்துள்ளார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கூறியதாவது, 'உலக...

ஆனையிறவு உப்பு வயல்களின் இறுதிக்கட்டப் புனரமைப்புப் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

15.10.2014 - புதன்கிழமைஆனையிறவு உப்பளத்தின் உப்பு வயல்களது புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதன் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். ஆனையிறவு உப்பளத்திற்கு அமைச்சர் அவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, கடந்தகால நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக முற்றாக அழிந்தும், சேதமடைந்தும் இருந்த உப்பள வயல்களின் வரம்புகளைச்...

20 நாட்கள் ஜெ., சிறைவாசம் முடிகிறது ; ஜெ., சசிகலா தண்டனை நிறுத்தி வைப்பு

கடந்த 20 நாட்களாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெ., சிறைவாசம் முடிகிறது. இவர் மீதான சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பும், தண்டனையும் நிறுத்தி வைக்கப்படுவதுடன், இவருக்கு ஜாமினும் வழங்குவதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கொண்ட பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது. புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., மீதான ஜாமின் மனு...

முதியோர்களுக்கு தனியான வைத்தியசாலை அவசியம்; பணிப்பாளர் பவானி

இலங்கையில் முதியவர்களுக்கு என்று தனியான வைத்தியசாலை இதுவரை அமைக்கப்படவில்லை.எனினும் தனியான வைத்தியசாலை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி தெரிவித்தார். முதியோர்களுக்கு வலுவான அமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான கலந்துரையாடலும் உபகுழு தெரிவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

விடுதலைப்புலிகளின் தடை நீக்கம்- அதிர்ச்சியில் இலங்கை அரசு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளமை தொடர்பில்  கரிசனை செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.   இந்த தீர்ப்பு குறித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஆழமாக ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை...

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றிய  நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது.    லதன் சுந்தரலிங்கம் என்பவர் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் முன்னிலையாகி வாதாடி வந்தார். இந்த வழக்கில்...

யாழ்.இந்துக்கல்லூரி, இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரிகளில் தொழில் நுட்ப ஆய்வுகூடங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

13.10.2014 - திங்கட்கிழமையாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார். மேற்படி நிகழ்வுகள் அந்தந்தப் பாடசாலைகளில் இன்றைய தினம் (13) இடம்பெற்றன. முன்பதாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள்...

கிளிநொச்சி நகரின் பிரதான மின்விளக்குகளை சூரியமின்கல விளக்குகளாாக மாற்ற ஜனாதிபதி உத்தரவு.

கிளிநொச்சி நகரின் பிரதான வீதியில் சூரியமின்கல வீதி விளக்குகளை பொருத்துமாறு மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் (13) இடம்பெற்ற மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதே இந்தப் பணிப்புரையை விடுத்தார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி நகர்பகுதியிலுள்ள வீதி விளக்குகள் இரவு...

யாழ் இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி விழாவும் நடந்தேறியது

இன்றைய தினம் (03.10.2014) யாழ் இந்துக் கல்லூரியில் விஜயதசமி நிகழ்வும், 125 ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வும் கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. முதல் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பொங்கல் இடம்பெற்று 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றது. இந்...

வடமாகாணத்தில் தனக்குள்ள அதிகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுனர் விபரிப்பு

வடமாகாணத்தில் தனக்குள்ள அதிகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுனர் G.A சந்திரசிறி இன்று காலை ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளித்திருந்தார் அதில் மாகாண சபை ஆளுனரை நீக்க வேண்டுமாயின், 1 குறித்த ஆளுனர் அரசியல் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு இருக்க வேண்டும். 2 அரச நிதியை கையாடல் செய்திருக்க வேண்டும். 3 லஞ்சம் ,ஊழல் செய்திருக்க வேண்டும். 4 தான் பினபற்ற...
Loading posts...

All posts loaded

No more posts