- Thursday
- August 20th, 2026
அங்கஜன் அவுஸ்திரேலியாவில் கைது அவசரமாய் புறப்பட்டார் தந்தை இராமநாதன்.. என்ற செய்தி பல இணையங்களிலும் பிரசுரமாகியுள்ளது. இச் செய்தி தொடர்பில் அங்கஜன் தரப்பினைத் தொடர்பு கொண்டு வினாவிய போது இதுவொரு வதந்தி எனவும் இச் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை எனத் தெரிவித்தார் அவரின் ஊடக இணைப்பாளர். மேலும் அவர், அங்கஜன் எதிர்வரும் ஞாயிறு (8/12/2013) இடம்பெறவுள்ள தனது...
வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரனும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் கொழும்பில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கொழும்பிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர், ஜனநாயக மக்கள் முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள், மரியாதை நிமித்தம் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்தனர். இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின்...
நெல்சன் மண்டேலா காலமாகிவிட்டார். அறக்கும்போது அவருக்கு வயது 95. மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார். மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில்...
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று வியாழக்கிழமை கூறினார். டானியல் றெக்ஷியன்; ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியமான செயற்பாட்டாளர். இவரது...
வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், றெக்ஷியனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞர் ஆகிய மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.மகேந்திரராஜா உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன்கடந்த மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக...
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து நடத்துனர்கள் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதாக அண்மைக்காலமாக முறைப்பாடுகள் தொடர்பில் உரிய தரப்பினர் உடனடியாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா . டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார் . இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (28-11-2103) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் ,...
"மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் என்பது ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மத்திக்கு என்ன அதிகாரங்கள், மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும் அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டிய தேவை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இராஜதந்திர ஒழுங்குகளை மீறியுள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது இலங்கையின் மூத்த அரசியல்வாதி ஒருவரை கோடிட்டு பிபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் தமது இலங்கை பயணம் வெற்றியளித்துள்ளதாக கெமரோன் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை கமரூன், இலங்கைக்கு வந்தபோது விருந்தினர் புத்தகத்தில் கைச்சாத்திட மறுத்துள்ளார். அத்துடன்...
வடமாகாண முஸ்லிம்களுக்காக ஆணைக்குழுவொன்று உருவாக்கப்பட்டு அந்தக் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தீர்வு காணப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினரும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான ஜஸ்மின் ஆயுப், மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். பொதுநூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது....
பொதுநலவாய மாநாட்டு இலட்சினையில் "வணக்கம்" என்ற பதத்தை நீக்கிவிட்டு "ஆயுபோவன்" என்ற சிங்களப் பதத்தை தமிழில் எழுதப்பட்டது ஏன்? என்று வெளிநாட்டு தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அந்தக் குழுவில் தான் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார். இதற்கு ஒரே வரியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்த...
காணாமல் போன உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்துத் தருமாறு கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் தீப்பந்த போராட்டம் நடைபெறுகிறது. இன்று முற்பகல் 11 மணிக்கு வவுனியா கந்தசுவாமி கோயிலில் இப் போராட்டம் ஆரம்பமானது. கொழும்பில் பொதுநலவாய மாநாடு இடம்பெறுகின்ற நிலையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் வவுனியா...
விடுதலைப்புலிகளை திருப்திபடுத்தும் முகமாகவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் செயற்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கமரூனின் செயற்பாடு, பிரித்தானியாவில் உள்ள உலக தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றின் பின்னணியில் இடம்பெற்றதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வருவதற்கு முன்னர் பிரித்தானிய பிரதமரின் குழுவினரை, பிரித்தானிய...
இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்வதற்கு நாம் தயாரில்லை, பொருளாதார கலாசார ரீதியாக நாம் தனித்துவமானவர்கள். எங்களை நாங்களே ஆளுகின்ற அதிகாரத்தை கேட்பதில் எந்த தவறும் இல்லை. எங்களுடைய நியாயமான கோரிக்கையை இனியும் நிராகரிக்க முடியாது அத்துடன் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை...
இடம்பெயர்ந்த சம்பூர் மக்களை மீளக்குடியமர்த்த கோரியும் மக்களின் காணிகளை கையளிக்குமாறு வலியுறுத்தியும் கிளிவெட்டி, சம்பூர் இடைத்தங்கல் முகாமில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கின்றது. இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இவ்விடத்தில் இன்று சனிக்கிழமைக்;காலை ஒன்றுகூடியவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான சுலோகங்கள் தாங்கிய...
கைதிகள் கல்வி கற்பதற்காக சிறைச்சாலை பள்ளிக்கூடம் வடரேகா சிறையில் தை மாதத்திலிருந்து இயங்க இருப்பதாக புனர்வாழ்வு சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். கல்விப்பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தர வகுப்புக்கள் வரையிலும் கல்வி கற்று பல்வேறு குறிறச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையிலிருக்கின்ற கைதிகளில் 280 கைதிகள் தெரிவு செய்யப்பட்டு கல்வியை மேற்கொள்வதற்கு வசதிகள் செய்து...
ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மக்களின் துன்பதுயரங்கள்,வாழ்க்கையிலுள்ள இடர்பாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள வளங்களின் தன்மை போன்றவற்றை அறியாது அரசியலில் நுழைந்தவர்கள் உண்மைக்குப் புறம்பாக பொறுப்பற்றவிதமாக அறிக்கைகளை வெளியிட்டு வருவது கவலை தருகின்றது. நெடுந்தீவு மக்களின் வாழ்வியலையும், வளங்கள் சார்ந்த சவால்களையும் வாழ்ந்து அனுபவித்த அந்த மண்ணின்...
புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயம் இன்று 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையால் அபிஷேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது நீண்ட காலத்தின் பின்னர் புனரமைப்புச் செய்யப்பட்ட சுமார் 150 வருட பழைமை வாய்ந்த இவ் ஆலயம் சுண்ணாம்புக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.தற்போதைய பங்குத் தந்தையான அருட் தந்தை...
யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். காணாமல்போன உறவொன்றின் சகோதரியான 13 வயது சிறுமியின் கன்னத்தில் காவல்துறை அறைந்ததாக அச்சிறுமி சர்வதேச...
யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றமை ஜனநாயகத்தின் குரலை அடக்கி ஒடுக்கும் செயல். தமிழர்களின் குரலை அடக்கும் செயல் என்று தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை வரவேற்பதாகவும் பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது. இது தொடர்பில் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பொதுநலவாய மாநாட்டு காலப்பகுதியில்...
Loading posts...
All posts loaded
No more posts



