- Wednesday
- May 13th, 2026
அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் வடக்கு கிழக்கு பிரதேசமெங்கும் அரச நிர்வாகம் முடக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,...
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், இரு தரப்பும் தற்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன. அதன் பிரகாரம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும் அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும்...
மயக்க நிலையில் 18 இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் இருந்தே மேற்படி இராணுவத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று காலை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே சுவாச கோளாறு காரணமாக மயக்கமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாகவே பெருமளவு நீர் இழக்கபட்டு மயக்கநிலை அடைந்ததாக வைத்தியசாலை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டால் மாத்திரமே அவர்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிந்திக்க முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி இணைய விரும்பினால் அதனை பரிசீலிக்கத் தயார்...
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டு எதிர்க் கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பந்துல இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது இவர் மேலும்...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடுத்த மாகாண சபை தேர்தலை எதிர் கொள்வதற்காக புதிய கட்சியை அமைக்க விரும்பினால் அமைக்கலாம். இச்செயற்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பாதிக்காதென,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள யூ.எஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிஸார் தேடி வந்தனர். இந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில்...
தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலக நாடுகள் தொடர்பிலான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை அரசாங்கமும் நீதிமன்றங்களும் தயக்கம் காட்டி வருகின்றன எனவும் அந்த அறிக்கையில்...
தென்மராட்சியில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2:15 மணியளவில் நாவற்குழி பகுதியில் நடைபெறும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட சென்றபோது இடம்பெற்றுள்ளது. தகாத...
முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானிகளை (மீற்றர்) பொருத்துவதற்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முச்சக்கர உரிமையாளர் சங்கம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட தெரிவித்தார். முச்சக்கர வண்டிகளுக்கு நேற்று முதல் கட்டண மானி பொருத்தப்படுவது...
கிராம சேவகர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கு 2016ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் விபரம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 76 பேரும் மன்னார் மாவட்டத்தில் 27 பேரும் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 43 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 17 பேரும் பரீட்சையில்...
வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கட்டுவன் வீதியின் மேற்கு புறமாகவுள்ள (ஜே-240- தென்மயிலை, (ஜே 246 மயிலிட்டி வடக்கு), (ஜெ-247 தையிட்டி கிழக்கு) கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது காணிகளை உடனடியாக தமது கிராம சேவகரிடம் பதிவினை மேற்கொள்ளுமாறு தெல்லிப்பளை பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கேட்டுகொண்டுள்ளார். காணிகளை...
யாழ். பல்கலைக்கழக ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் விபரங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியாகியுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14...
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரிடம் பேரம் பேசியதாக கூறியமைக்கு ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள் என என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் குறித்த விடயம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எம்முடன்...
இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அரசியல் அமைப்பு பேரவையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தனியார் செய்தி பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே இதனை குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பான அறிவுறுத்தலை இலங்கை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் விடுத்துள்ளதாகவும் கூட்டமைப்பின்...
இரண்டாவது வருடகால அவகாசப் பகுதிக்குள் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை. மனித உரிமைகள் பேரவையை விட்டுவிட்டு மாற்றுவழிவகைகள் பற்றிச் சிந்திக்கவேண்டும் என்று ஐ.நா அனித உரிமைகள் ஆணையர் குறிப்பிட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்வரும் 2019 மார்ச் மாத்துக்கள் பாதிக்கப்பட்ட...
நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு 2.5kg, 12.5kg மற்றும் 12.5kg மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கப்பெறுவதாகவும் இதனாலேயே தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் சமையல் எரிவாயு...
நாம் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், எமது தேசிய விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்திப்போராடினோமோ, அதேபடையினரைப் பொதுப்பணிகளில் நாம் அனுமதிப்பது போராடும் எம் இனத்துக்குப் பெரும் இழுக்காகவே அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கோண்டாவில் ஸ்ரீ...
புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்த இரு பிள்ளைகளின் கல்வி செலவுக்கு ஆளுனரால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அரசியல் கைதியாக இருந்து தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் இருவரும் தமது தந்தைக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியை நேரில் சந்தித்து இரு பிள்ளைகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்...
பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாய நடைமுறைக்கு வருகிறது. இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார். முச்சக்கர வண்டிகளுக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
