Ad Widget

அரச அலுவலர் மீது நாவற்குழியில் தாக்குதல்!

தென்மராட்சியில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2:15 மணியளவில் நாவற்குழி பகுதியில் நடைபெறும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட சென்றபோது இடம்பெற்றுள்ளது.

தகாத வார்த்தையில் கூறி தன்னைத் தாக்கி காயப்படுத்தினார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த உத்தியோகத்தரை பொதுமக்கள் சிலர் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts