Ad Widget

முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மானி பொருத்த ஓகஸ்ட் வரை கால அவகாசம்

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானிகளை (மீற்றர்) பொருத்துவதற்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முச்சக்கர உரிமையாளர் சங்கம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகளுக்கு நேற்று முதல் கட்டண மானி பொருத்தப்படுவது கட்டாயமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது இந்த அறிவிப்பை வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

பயணிகளுக்கு பற்றுச் சீட்டை வழங்குவதற்கு முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் உடன்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Posts